என் மலர்
நீங்கள் தேடியது "அமர்நாத் யாத்திரை"
- இதுவரை 2½ லட்சம் பக்தர்கள் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து உள்ளனர்.
- அடிப்படை முகாம்களில் இருந்து பஹல்காம், பால்டால் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பனிமலைகள் சூழ்ந்த காஷ்மீர் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க கடும் சிரமத்துக்கு மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற இருக்கிறது. பால்டால் பாதை, பஹல்காம் பாதை வழியாக பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர்.
இதுவரை 2½ லட்சம் பக்தர்கள் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து உள்ளனர்.
காஷ்மீரின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பால்டால் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் பக்தர் உயிரிழந்தார்.
காஷ்மீரின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்ததை தொடர்ந்து அடிப்படை முகாம்களில் இருந்து பஹல்காம், பால்டால் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நேற்று ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.
அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் 7908 யாத்ரீகர்களைக் கொண்ட 16வது குழு, கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஜம்முவிலிருந்து அதிகாலையில் புறப்பட்டனர்.
- பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பக்தர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.
காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.
குறிப்பாக ஜூலை முதல் ஆகஸ்டு மாதம் வரை பக்தர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான யாத்திரை நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி வரை யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த துயரமான பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதுடன், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக பால்டால் பாதை வழியாக அமர்நாத் புனித யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பால்டால் மற்றும் பஞ்ச்தர்னியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் உள்ள டெலிமெடிசின் வசதிகளை தொலைதூர இடங்களுடன் இணைக்க இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடிப்படையிலான இணைப்பை பயன்படுத்தி, பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் உயரமான மலைகளில் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் உயரமான மலைகளில் உள்ள முகாம்களில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை பெற முடியும். இதற்காக பெரிய ஆஸ்பத்திரிகளில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் நேரலையில் இணைக்கிறது. அவசர காலங்களில் விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சைகளை பெற முடியும்.
ஹோலி கேவ், லோயர் ஹோலி கேவ், ஷேஷ்நாக் மற்றும் சந்தன்வாரி ஆகிய 4 கூடுதல் தளங்களுக்கு 'டெலிமெடிசின்' சேவைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.
இந்த முயற்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் காஷ்மீர் சுகாதார சேவைகள் இயக்குநரகம் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் காஷ்மீர் சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் ஜெஹாங்கிர் பக்ஷி கூறினார்.
- அமர்நாத் புனித யாத்திரையின் முதல் குழு இன்று புறப்பட்டது.
- யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நாளை தொடங்க உள்ளது. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ம் தேதி முடிவடைகிறது.
புனித யாத்திரை வருவோரின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு முன் அமர்நாத் யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
தாக்குதலுக்கு பிறகு முன்பதிவு எண்ணிக்கை குறைந்தது.
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பாதுகாப்புக்காக சுமார் 600 கூடுதல் துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்முவிலிருந்து கடும் பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
- யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள்.
- அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
ஜம்முகாஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ந்தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் செல்வார்கள். மொத்தம் 12 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள்.
இதற்கிடையே லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது. பிர்பஞ்சால் காட்டில் மறைந்து இந்த தாக்குதலை நடத்தலாம் என கருதப்படுகிறது. இதை தொடர்ந்து அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ராணுவ தளபதி பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து இருந்தது.
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
- யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும்.
இந்த உத்தரவை தொடர்ந்து ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே ஜம்மு காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- ரெயில் 72 மணி நேரம் தாமதமாக வந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி
- ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரெயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள், கிழிந்த இருக்கைகள், மேற்கூரை மற்றும் உடைந்த கதவு, ஜன்னல்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
BSF படையினருக்கு சிறப்பு ரெயில் என்ற பெயரில் மிக மோசமான நிலையில் உள்ள ரெயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திரிபுராவில் உள்ள உதய்பூர் ரெயில் நிலையத்தை ஜூன் 6-ம் தேதி வந்தடைய வேண்டிய இந்த ரயில், ஜூன் 9-ம் தேதி மாலை 6:30 மணிக்கே வந்து சேர்ந்தது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, ஜூன் 12, 2025-க்குள் முழு பட்டாலியனும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தது.
இந்தத் தாமதம் திரிபுரா, குவஹாத்தி, மிசோரம் மற்றும் கச்சார் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரயில்வே பதிலளித்து, பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் வீடியோக்களில் காணப்படும் சேதமடைந்த பெட்டிகள் பருவகால பராமரிப்புக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளால் தவறுதலாக அந்த பெட்டிகளில் வீரர்கள் ஏற்றப்பட்டதாகவும் ரெயில்வே விளக்கமளித்துள்ளது.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம்.
- காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் அங்கு செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் அமைதி நிலவி வருவதாகவும், சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூப் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தியை நாட்டுக்கு மக்களுக்கு அனுப்பும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம். காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீருக்கு ஏற்பட்ட சேதத்தை அமைதியான அமர்நாத் யாத்திரை மூலம் குறைக்க முடியும்.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
பாபா நக்ரியில் நடந்த வருடாந்திர ஊர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நாட்டில் அமைதி நிலவவும், நமது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கவும், நாம் கடந்து செல்லும் வெறுப்புச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
- அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
யாத்திரை வருபவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்யும். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் படிப்படியாக குறைந்து எல்லைப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், காஷ்மீரில் திட்டமிட்டபடி ஜூலை மாதம் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய மக்கள் விரைவில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லுவார்கள். அமர்நாத் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- அமர்நாத் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்கிறார்கள்.
- இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது.
இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 17ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.
- இந்த யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார்.
இதில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.






