என் மலர்
நீங்கள் தேடியது "எல்லைப் பாதுகாப்பு படை"
- BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
- ரஜனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசி ஆறுதல் கூறினார்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில், பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் நிலை குறித்து பேசிய ரஜனி, "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவர் அவர்களின் காவலில் உள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
BSF அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலைமை ஒரு போர் போல் உள்ளது. அடுத்து என்ன செய்தி வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
ஆபரேசன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.
- ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
- அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது..
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, BSF கான்ஸ்டபிள் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் தடுத்து வைக்கப்பட்டு ஆறு நாட்கள் ஆகின்றன.
அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சாஹுவின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகள் கூட்டத்தை நடத்திய போதிலும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ள நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது
- கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.
அமிர்தசரஸ்:
இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அமிர்தசரசில் உள்ள பைனி ராஜ்புட்னா என்ற கிராமத்தில் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது.
இதை பார்த்த அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,
- முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
- வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?
மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.
வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






