என் மலர்
நீங்கள் தேடியது "மம்தா பேனர்ஜி"
- ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ( SIR ) அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி , நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ( BLOக்கள் ) கொல்கத்தாவின் தெருக்களில் இன்று பேரணி நடத்தினர் .
BLOக்கள் , மத்திய கொல்கத்தாவின் கல்லூரித் தெருவிலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். BLO அதிகார ரக்ஷா குழுவின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.
இந்த மாத தொடக்கத்தில் SIR தொடங்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் மூன்று பெண் BLOக்கள் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் BLOக்கள் தற்கொலை மற்றும் திடீர் மரணங்கள் பதிவாகி உள்ளது.
கடந்த வாரம், ஜெய்ப்பூரில் 45 வயதான முகேஷ் ஜாங்கிட் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR தொடங்கியதிலிருந்து அவர் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி ஓம் பர்வா (34), கடந்த வாரம் மயங்கி விழுந்து இறந்தார். SIR நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய BLO அதிகார ரக்ஷா குழுவின் அதிகாரி, "குறுகிய காலத்தில் பணியை முடிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்று கூறினார்.
தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் அல்லது BLOக்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தை தொடங்குவோம் என்று BLO குழு எச்சரித்துள்ளது.
இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, BLOக்கள் மனிததன்மையற்று அதிக வேலை வாங்கப்படுவதாக கூறி SIR செயல்முறையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த செயல்முறையால் இதுவரை நாடு முழுவதும் 16 BLOக்கள் இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.
- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
- வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.
சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில், "வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.
இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 லட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
- இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.
டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார்.
- டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது
- வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை" என கூறியிருந்தனர்.
அதில், டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் வங்காள மொழியை வங்கதேச' மொழி என குறிப்பிட்டுள்ளனர்.
வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி.
வங்காள மொழியை வங்கதேச மொழியாக குறிப்பிடுவது தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது.
இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்" என்று பதித்துள்ளார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கண்டன பதிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று குறிப்பிட்டுள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் ஏற்படுத்துவதாகும்.
இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன.
இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்காள மொழிக்கும் மக்களுக்கும் மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்.
- மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
- "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி பானர்ஜி பங்கேற்றார்.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார். கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஸ்ரா சாலையில் இருந்து ரவீந்திர சதன் வரை நடைபெற்ற பேரணியில் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி, பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் மல்யுத்த வீரர்களால் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். மல்யுத்த வீரர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இது உலகளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்துவிட்டது. எனது ஒற்றுமை அவர்களுடன் உள்ளது. அவர்களின் போராட்டத்தை தொடரச் சொன்னேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது - மம்தா பானர்ஜி
- திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது
அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல் துணைக் கண்காணிப்பாளரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பாஜக விரும்புகிறது.
நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது
- பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது - ஜவகர் சிர்கார்
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தூர்தர்ஷனின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.
ஒரு பாரபட்சமான ஒருபக்க சார்புடைய அரசு, ஒரு 'நடுநிலையான' பொதுத்துறை செய்தி சேனலின் நிறத்தை ஒரு மதத்தின் நிறமாகவும், சங் பரிவார் நிறமாகவும் மாற்றுவது இந்திய வாக்காளர்களை பாதிக்கும்
பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தூர்தர்ஷன் லோகோ காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது முற்றிலும் சட்டவிரோதமானது. தேசிய ஊடகம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என தெளிவாகத் தெரிகிறது.இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? உடனடியாக லோகோவை மீண்டும் நீல நிறத்திற்கே மாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
- வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?
மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.
வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஷாஜகான் ஷேக் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது
- சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் மேற்கு வங்காள மாநில போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விசயம் பூதாகரமாக வெடித்தது. இதனால் ஷாஜகான் ஷேக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தலைமறைவான அவரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்தனர். சந்தேஷ்காலி விவகாரத்தில் கைது செய்யவில்லை. ஜனவரி மாதம் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதுவும் நடக்கவில்லை, மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று இருவர் பேசுகின்றனர்.
அதில், "வங்காளத்தை அசிங்கப்படுத்த பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் முதல் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவது வரை அனைத்தையும் செய்வது மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிதான். இதனை வங்காள மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பகிர்ந்துள்ளார். அதில், சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷனை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்காளத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயன்றதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
- பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமுல் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
- பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.
இதனிடையே பாலியல் புகார் தொடுத்த பெண் ஒருவர் , காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவினர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக தன்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதிலிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரம் தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியானது.
இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
- ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீதுகூட அக்கறை இல்லை
- தேர்தலை பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வருகை தந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ரெயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீதுகூட அக்கறை இல்லை
தேர்தலை பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது. தேர்தலில் எப்படி சூழ்ச்சி செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மட்டுமே பாஜக அரசு செயல்படுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
- ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்
- பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார்.
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரசாரம் சீதா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் 20 ஆம் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இதனையடுத்து மம்தா பேனர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு கூட்டணி கைகூடாமல் போனது குறிப்பிடத்தக்கது.






