search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandeshkhali"

    • பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமுல் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.

    இதனிடையே பாலியல் புகார் தொடுத்த பெண் ஒருவர் , காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

    பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜகவினர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக தன்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதிலிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரம் தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    • ஷாஜகான் ஷேக் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் மேற்கு வங்காள மாநில போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விசயம் பூதாகரமாக வெடித்தது. இதனால் ஷாஜகான் ஷேக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தலைமறைவான அவரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்தனர். சந்தேஷ்காலி விவகாரத்தில் கைது செய்யவில்லை. ஜனவரி மாதம் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்தது.

    சந்தேஷ்காலி தொடர்பான குற்றச்சாட்டை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மேற்கு வங்காள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அடுத்த விசாரணையின்போது இது தொடர்பான முழு விவரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என சிபிஐ-யை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 2-ந்தேதிக்கு ஒத்த்தி வைத்தனர். இன்றைய தினம் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேற்கு வங்காள மாநில அரசு சிபிஐ-க்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    • பெண்களுக்கு எதிராக நில அபகரிப்பு, கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டு.
    • சோதனையின்போது அமாலாக்கத்துறை அதிகாரிகளை ஆதரவாளர்கள் தாக்கிய வழக்கில் ஷேக் ஷாஜகான் கைது.

    மேற்கு வங்காளம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்றச் செயலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த ஷேக் ஷாஜகான் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களின் சொத்துகளை அபகரித்தல், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம், அரசு நலத்திட்ட நிதிகளை பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளை அங்குள்ள பெண்கள் இவர் மீது முன்வைத்தனர்.

    மேலும், வீதிகள் இறங்கி ஆயுதங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் திரணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது, அவர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஷேக் அகமது கைது செய்யப்பட்டார்.

    அவரை மத்திய அமைப்பினர் ஒப்படைக்க மேற்கு வங்காள போலீசார் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    இந்த நிலையில் ஷேக் ஷாஜகானுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேஷ்காளியின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஷேக் ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என அம்மாநில ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம்சாட்டியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

    ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கியதால் இச்சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

    ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைதுசெய்ததாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரான டெரிக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் கூறுகையில். ஷேக் ஷாஜகான் 6 ஆண்டு காலம் கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    • பெண்கள் சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு.
    • பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு.

    மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

    ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கினர். இதனால் இந்திய அளவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

    மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    ×