search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sheikh Shahjahan"

    • நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
    • பிரதமர் மோடி பராசத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக சொத்துகளை பறித்தல், பணம் பறித்தல், கூட்டு பலாத்காரம் செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அங்குள்ள பெண்கள் குற்றம் சாட்டினர். தெருக்களில் ஆயுதங்களுடன் களமிறங்கி போராடியதால் ஷேக் ஷாஜகானுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கியது.

    இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாதையை திறந்துவைத்து, ரெயிலில் பயணம் செய்தார். தொடர்ந்து 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் என்ற இடத்தில் உள்ள கச்சாரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசினார்.

    பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் பராசத் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில், பராசத் பொதுக்கூட்டம் முடிந்ததும் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளி பெண்கள் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். அவர்களது குறைகளைக் கேட்ட பிரதமர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என பாஜக தலைவர் அக்னிமித்ரா பவுல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

    • ஷேக் ஷாஜகானை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் உத்தரவு.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் ஒப்படைக்க இயலாது என பிடிவாதம்.

    மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களிடம் சொத்துகளை மிரட்டி பறித்ததாகவும், நிலத்தை அபகரித்ததாகவும், பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    குற்றச்சாட்டு எழுந்ததும் ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். சுமார் 55 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத்தான் அவரை கைது செய்துள்ளோம் என மேற்கு வங்காள போலீசார் தெரிவித்தனர்.

    ஷேக் ஷாஜகான் தொடர்பான வழக்க மேற்கு வங்காள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் "மாநில போலீஸ் முற்றிலும் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. நியாயம், நேர்மை மற்றும் முற்றிலுமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைப்பதை விட சிறந்தது ஏதும் இருக்க முடியாது. வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்காள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஷேக் ஷாஜகானை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.

    ஆனால் மேற்கு வங்காள போலீசார், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். ஆகையால் அவரை ஒப்படைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

    இதனால் சிபிஐ போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அவசர மனுவாக விசாரிக்க மறுத்துவிட்டது. மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி-யிடம் சட்டப்படி பதிவாளரிடம் மனுவை குறிப்பிடும்படி நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

    • ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம்சாட்டியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

    ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கியதால் இச்சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

    ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைதுசெய்ததாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரான டெரிக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் கூறுகையில். ஷேக் ஷாஜகான் 6 ஆண்டு காலம் கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    • பெண்கள் சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு.
    • பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு.

    மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

    ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கினர். இதனால் இந்திய அளவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

    மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    • பெண்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு.
    • உதவியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற பகுதியில் ஷேக் ஷாஜகான் என்பவர் பெண்களின் சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெண்களை கூட்டு பாலியல் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியதால் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    ஷேக் ஷாஜகானை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாக்கிறது என பா.ஜனதா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஷாஜகான் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்பான ஆறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் 5-ந்தேதி ரேசன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது, ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஷேக் ஷாஜகானின் உதவியாளரக்ள் ஷிபு ஹஸ்ரா, உத்தம் சர்தார் ஆகியோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் ஷேக் ஷாஜகான் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அமைக்கப்பட்டுள்ள முகாமில் புகார் அளிக்கலாம் என போலீசார தெரிவித்துள்ளனர்.

    • சந்தேஸ்காலி பகுதியில் வன்முறை வெடித்ததால் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது
    • ஊடகங்களுக்கும் காவல்துறை தடையிட்டு பகுதி முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது

    மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) சார்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்கத்தில் கவர்னராக சிவி ஆனந்த போஸ் பதவி வகித்து வருகிறார்.

    மம்தாவின் அரசுக்கும் கவர்னருக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்து வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் அம்மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட சந்தேஸ்காலி (Sandeskhali) பகுதியில், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை ஷேக் ஷாஜகான் (Sheikh Shajahan) எனும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் ரெய்டு நடத்த சென்றது. அங்கு அவரது ஆதரவாளர்களால் அமலாக்க துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

    ஷேக் அமலாக்க துறையிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை அமலாக்க துறை தேடி வருகிறது.

    இது தொடர்பாக பா.ஜ.க. ஆதரவாளர்களுக்கும், ஷேக்கின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை வெடித்தது.

    இதனையடுத்து அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, அங்கு மனித உரிமைகள் பறி போவதாகவும், நிலைமையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து அறிய இன்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் அப்பகுதிக்கு விரைந்தார்.

    ஆனால், செல்லும் வழியிலேயே அவரது பாதுகாப்பு வாகனங்களை ஷேக்கின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அவரது காரின் அருகே பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினார்.

    பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ள காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×