search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஷேக் ஷாஜகான் கட்சியில் இருந்து நீக்கம்: திரிணாமுல் காங்கிரஸ்
    X

    ஷேக் ஷாஜகான் கட்சியில் இருந்து நீக்கம்: திரிணாமுல் காங்கிரஸ்

    • ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம்சாட்டியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

    ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கியதால் இச்சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

    ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைதுசெய்ததாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரான டெரிக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் கூறுகையில். ஷேக் ஷாஜகான் 6 ஆண்டு காலம் கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    Next Story
    ×