என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர்கள்"

    • 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
    • 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

    கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

    இந்த நிலையில், டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    இலங்கையில் மீட்புப் பணிகளுக்கு உதவ இந்தியாவின் தலா இரு Mi-17, Chetak ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது - மம்தா பானர்ஜி
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது

    அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல் துணைக் கண்காணிப்பாளரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பாஜக விரும்புகிறது.

    நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் உட்பட பல கருவிகளை இந்தியா வாங்க உள்ளது. #Apache
    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்புத்துறையின் பலத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட தாக்குதல் நடத்த உதவும் வகையில் ஹெலிகாப்டர்கள் வாங்க அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி அமெரிக்காவிடம் இதுகுறித்து கோரிக்கை விடப்பட்டது. இந்தியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தவும், தெற்காசியாவின் அமைதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைபாட்டை அதிகரிக்கவும் உதவ வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.

    அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ராணுவம், 6 புதிய ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க முன்வந்துள்ளது. அதிக செலவில் புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. அதனை பாதுகாப்பு துறை நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதே போல், நான்கு தீயை கட்டுப்படுத்தும் ரேடார், மிசல்ஸ், ஜிபிஎஸ் சிஸ்டம்ஸ், கனான்ஸ், டிரான்பாண்ட்ர்ஸ், சிமுலேட்டர்ஸ் மற்றும் பயிற்சி உபகரணங்கள் உட்பட பல பொருட்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மொத்த செலவு 930 மில்லியன் டாலர் ஆகும். #Apache

    ×