search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helicopter"

    • ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.
    • ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர்.

    ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்துக்கு சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.

    கடந்த புதன்கிழமை இரவு வாஷிங்டனுக்கு எதிரே உள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர்.

    ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
    • விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

    அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். விமானம் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. விமானம் போடோமேக் நதியின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அருகே பறந்து கொண் டிருந்தது.

    அப்போது ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப்பிழம்பு ஏற்பட்டு பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர்.

    படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆம்புலனஸ்சுகள், மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 64 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    விபத்தை தொடர்ந்து ரீகன் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு அனைத்து விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.

    விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றார்.

    மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டருடன் விமானம் நடுவானில் மோதி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    பீகாரின் சீதாமர்ஹி என்ற பகுதியில் ராணுவத்தின் இலகு ரக ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச்சென்றபோது ஹெலிகாப்டர் வெள்ளத்தில் இறங்கியது.

    ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    மேலும், மீட்பு பணி வராததால் பொது மக்கள் உதவியுடன் ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • 24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு
    • இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய எல்லையில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

    24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஷ்மீரின் லடாக் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இங்கு செல்வதற்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    ராணுவத்துக்காக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.) துருவ் என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்தது. இந்த ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் இரவு நேரத்தில் லடாக் பனிமலைப் பகுதிக்கு செல்கின்றனர்.

    இதுகுறித்து சீத்தல் ரக ஹெலிகாப்டரின் பைலட் கூறியதாவது:-

    "ஹெலிகாப்டரில் பகல் நேரத்தில் பறப்பதை விட இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி. சூரியன் மறைந்து இருண்டு விட்டால், தொலைவில் உள்ளவை எதுவும் தெரியாது. அதனால் இரவில் பறக்கும்போது, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்களைத் தான் நாம் அதிகம் சார்ந்திருக்க வேண்டும்.

    இரவு நேரத்தில் பயணம் செய்வதற்கு முன் பலவித மான விளக்கங்கள் அளிக் கப்படும். செல்ல வேண்டிய இடம், வானிலை குறித்து விளக்கம் அளிக்கப்படும். அதன்பின்பே இரவு நேர பயணத்தை தொடர்வோம்" என்றார்.

    தொழில்நுட்ப மேற்பார்வையாளர் மேஜர் ஆயுஷ் தேவிஜ்யால் கூறுகையில், "இரவு நேர பயணத்துக்கு முன்பாக, ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களின் செயல்பாடுகளையும் சரிபார்க்க வேண்டும்.

    ஹெலிகாப்டரின் என்ஜினை இயக்கி சோதனை செய்தபின், என்ஜின் அதிகாரி பறந்து செல்வதற்கு ஒப்புதல் அளிப்பார். மீட்பு பணி, இரவு நேர கண்காணிப்புக்கு இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் தான் பயன் உள்ளதாக இருக்கும்" என்றார்.

    • காயம் அடைந்த ஒருவரை கரைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் சென்றது.
    • வீரர்களுடன் கடலில் தரையிறங்கி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

    குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் எண்ணெய் உற்பத்தி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் டேங்கர் ஹரி லீலா என்ற இந்த கப்பலில் உள்ள பணியாளர் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்தது.

    அதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவரை கரைக்கு கொண்டு வர இந்திய கடற்படை வீரர்கள் நான்கு பேருடன் லைட் ஹெலிகாப்டர் நேற்றிரவு புறப்பட்டது.

    ஹெலிகாப்டர் கப்பல் அருகே சென்றபோது தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடலில் அவசரமாக தரையிறங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்களும் மாயமானர்கள். அதில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற மூன்று பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இதற்கிடையே ஹெலிகாப்டர் பாகங்கள் கிடக்கும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று வீரர்களை தேடும் பணியில் நான்கு கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    • மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தினர்.
    • மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனத் தகவல்.

    ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு நேற்று புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது.

    இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர்.

    மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில், காணாமல் போன ரஷிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    • எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 1960 களில் வடிவமைக்கப்பட்டது.

    ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடர்பை துண்டித்தது.

    இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகாப்டர் நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

    முன்னதாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி, 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகாப்டர் ரஷியாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது.

    கம்சட்கா தீபகற்பம் அதன் இயல்புக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இது மாஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கிமீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது

    ஆஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

     

    விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றியெரிந்த நிலையில் விமானி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விபத்துக்குப் பின் ஹெலிகாப்டர் தீப்பற்றியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    • ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்தது.
    • ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், 3 மணி நேரத்திற்கான கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடந்தது. வருகிற 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த 2 மாதங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அதிலும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இன்னும் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் டெல்லியில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் கடந்த 2 மாதங்களாகவே வாடகை ஹெலிகாப்டர்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் வாடகை ஹெலிகாப்டர்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்திருந்தனர். குறிப்பாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வசதியாக ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்திருந்தனர்.

    மேலும் இந்த முறை மாநில கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரம் செய்ய ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தினார்கள். இதனால் இந்த பாராளுமன்ற தேர்தலின் போது வாடகை ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரித்தது. இதனால் ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்தது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வருமானம் கிடைத்துஉள்ளது.

    இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது:-

    7 பேர் அமரக்கூடிய ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை ரூ.1.50 லட்சமாக அதிகரித்துள்ளது. 8 பேர் அமரக்கூடிய இரட்டை என்ஜின் ஹெலிகாப்டரின் வாடகை ரூ.3 லட்சம் ஆகும். 15 பேர் வரை அமரக்கூடிய ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேர வாடகை ரூ.4 லட்சம் ஆகும்.

    கடந்த தேர்தலின் போது, வழக்கத்தை விட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக 50 சதவீதம் வரை வசூலித்தனர். ஹெலிகாப்டர்களின் தேவைகள் அதிகரித்துள்ளதால் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 200 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. பாராளுமன்ற தேர்தலின் போது, ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான நீண்ட கால வாடகை ஒப்பந்தங்களை செய்துள்ளன. தேசிய கட்சிகள் ஹெலிகாப்டர்களை முன்கூட்டியே வாடகைக்கு எடுத்து விட்டன. இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 3 மணி நேரம் வாடகை செலுத்த வேண்டும்.

    ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், 3 மணி நேரத்திற்கான கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். எனவே 60 நாட்களுக்கு 180 மணி நேரம் வாடகை செலுத்த வேண்டும். இது போக கூடுதல் நேரம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் கட்டணம் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2 மாதங்களில் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார்தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.

     

    இந்த பயணம் பொதுவாக ஏப்ரல்-மே முதல் அக்டோபர்-நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளதால் சார்தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 10 அன்று தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    இந்நிலையில் இன்று (மே 24) பக்தர்களை கேதார்நாத்துக்கு ஏற்றி வந்த ஹெலிகாப்டர் ஒன்று அந்தரத்தில் நிலைதடுமாறி சுழன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிர்சி ஹெலிபேடில் இருந்து கேதார்நாத் தாமுக்கு விமானியுடன் 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த கெஸ்ட்ரல் ஏவியேஷன் கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 7.05 மணி அளவில் கேதார்நாத் தாம் ஹெலிபேடுக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்ததால் சுமார் 100 மீட்டர் முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் இருந்த 6 பயணிகளும் விமானியும் பத்திரமாக உள்ளனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் சுழலும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹெலிபேடில் நின்றுகொண்டிருந்த நபர்கள் மீது மோதுவதுபோல் ஹெலிகாப்டர் மிகவும் அருகில் வந்ததால் அவர்கள் அங்கிருந்து பயத்தில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. 

     

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியது.
    • அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்பொழுது ஈரானி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவ இடத்தில் இருந்து ஒருவர் மீட்பு படையினருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பிரதமரான ஜோ பைடன் விபத்துக்குள்ளான ஹெலிக்காப்டரை கண்டுப்பிடிப்பதற்கு  அவர்களது சாடிலைட் மேப்பிங் தொழில் நுட்பத்தை வழங்கி உதியுள்ளார்.

    இந்த விபத்தை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கவலை பதிவை பதிவிட்டுள்ளார் அதில் இப்ராஹிம் ரைசி மற்றும் சக அதிகாரகளின் நல்வாழ்வுக்காக பிராத்திக்கிறேன் என்று அவரது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



     


    ×