என் மலர்
நீங்கள் தேடியது "Emmanuel Macron"
- தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார்.
பாரிஸ்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். ஆனால் இந்தியா இதனை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, 7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என அதிபர் டிரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:
காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும்.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய நபராக டிரம்ப் இருக்கிறார்.
காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.
காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்குவதில்லை.
நாங்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக இருக்கமாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களைப் பாதுகாப்போம் என தெரிவித்தார்.
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார்.
- பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படத்துடன் அவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் என்று கூறப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பள்ளி ஆசிரியராக இருந்தார்.
மேக்ரான் தற்போது பிரான்சின் அதிபராக இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தில் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே மேக்ரான்ஒரு வினோதமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளார்.
அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேக்ரான் உடைய மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் பல காலமாக வதந்திகள் பரவி வருகின்றன.
உண்மையில் இந்த சர்ச்சை 2017 இல் பிரான்சில் தொடங்கியது. நடாஷா ரே என்பர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பிரிஜிட் மேக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார்.
மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் வீடியோவில் நடாஷா கூறியிருந்தார்.

இதுதொடர்பான அவதூறு வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மேக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார். அவருக்கு எதிராக மேக்ரான் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மேக்ரான் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மேக்ரானின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார்.
- பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார்.
பிரான்சில் அதிபர் மேக்ரானின் 'ரினைசன்ஸ்' கட்சி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி தயவை நம்பி ஆட்சியில் உள்ளது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர்.
இதற்கிடையே பொது விடுமுறை நாட்களை குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாதது, மருத்துவம், கல்வி, வீட்டு வசதி, மானியங்கள் போன்ற மக்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அண்மையில் பட்ஜெட் குறைப்பு மசோதாவை தாக்கல் செய்ய, பிரதமராக இருந்த பிராங்காய்ஸ் பாய்ரு முயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா நிறைவேறவில்லை. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிராங்காய்ஸ் பாய்ரு கோரினார். அதில் தோல்வியடைந்ததால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே கடந்த திங்களன்று புதிய பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார். இவ்வாறு பிரதமர்கள் தொடந்து மாறுவதும் பட்ஜெட் குறைப்பும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நேற்று பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் 80,000 போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வரும் 18ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
- பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
- தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட , மோடி, " அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பிட்டோம்.
உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் உட்பட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என்று தெரிவித்தார்.
- பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
- உக்ரைன் விவகாரம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசப்பட்டது.
புதுடெல்லி:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இந்த உரையாடலின்போது உக்ரைன் விவகாரம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் மிகச் சிறந்த உரையாடலை நடத்தினேன். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியுடன் பேசினேன். உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், நீடித்த அமைதியை நோக்கி நகர்வதற்காக, உக்ரைன் போர் குறித்த எங்கள் நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.
- 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
- அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.
ரஃபேல் போர் விமானம் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
"ரஃபேல் இஸ் காலிங்" என்று அதன் படத்துடன் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் "நமது ஐரோப்பாவைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.
இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மேக்ரான் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மோதலின்போது இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.
- கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
மேக்ரான் கூறுகையில், "15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூட்டு முடிவு எடுக்குமா என்பதைப் பார்க்க சில மாதங்கள் காத்திருப்போம். EU-விடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், பிரெஞ்சு அரசாங்கமே இந்தத் தடையை அமல்படுத்தும்" என்றார்.
இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கும், குழந்தைகள் மேற்பார்வையின்றி டிஜிட்டல் தளங்களை அணுகுவதற்கும் சமூக ஊடகங்களே முக்கிய காரணம் என்று மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
- சுதாரித்துக்கொண்ட இருவரும் பின்பு கீழே இறங்கினர்.
- பிரிஜிட் மேக்ரானை விட 25 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அவரது மனைவி பிரிஜிட் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, வியட்நாமின் தலைநகரான ஹனோய் விமான நிலையத்தில் மேக்ரான் தரையிறங்கினார்.
விமானத்தின் கதவு திறக்கப்பட்டபோது மேக்ரான் இறங்குவதற்கு முன், அவரது முகத்தை நோக்கி மனைவி பிரிஜிட் இரண்டு கைகள் நீட்டி தாக்குவதுபோல் பாவனை செய்தது கேமராவில் பதிவானது.
சுதாரித்துக்கொண்ட இருவரும் பின்பு கீழே இறங்கினர். அப்போது மேக்ரான் கைகளை கோர்க முயன்றும் இறுக்கமான முகத்துடன் பிரிஜிட் தனியாக இறங்கினார். இதனால் முன்னதாக வாக்குவாதத்தில் மேக்ரானை பிரிஜிட் தாக்கியதாக ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில் வைரலான இந்த காட்சிகளுக்கு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனை விளக்கமளித்துள்ளது.
விமானத்தில் நடந்தது அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும் அவரது மனைவி பிரிஜிட்டிற்கும் இடையிலான பாசத்தின் வெளிப்பாடே தவிர அது ஒரு வாக்குவாதம் அல்ல என்று எலிசி அரண்மனை தெரிவித்தது.
காணொளியில் உள்ள காட்சிகள் போலியானவை அல்ல என்றும், ஆனால் தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகிறது என்றும் மேக்ரான் விளக்கினார். பிரிஜிட் மேக்ரோனை விட 25 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போரை முடிவுக்கு கொண்டு வர புதினை சந்திக்க தயார் என ஜோ பைடன் தகவல்.
- அமெரிக்காவும், பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்க முடிவு.
ரஷியா உக்ரைன் போர் கடந்த 9 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மேக்ரனை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்றார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷிய அதிபர் புதின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கவும் தயார். ஆனால், புதின் அவ்வாறு தேடவில்லை. அமெரிக்காவும், பிரான்ஸும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'பின்னர் பேசிய மேக்ரன், ரஷியாவுடன் சமரசமாக செல்லுமாறு உக்ரைனை நாங்கள் வற்புறுத்த மாட்டோம், அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை ரஷியா வெளிப்படுத்தி உள்ளது.
மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், சமரச பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதேநேரத்தில், அதற்கு முன்பாக உக்ரைனை விட்டு ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று அது நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிபந்தனையை ரஷியா ஒருபோதும் ஏற்காது. அதோடு, ரஷியாவுடன் இணைக்கப்பட்ட புதிய உக்ரைன் பகுதிகளை அமெரிக்கா இன்னும் அங்கீகரிக்கவில்லை. அந்தப் பகுதிகளுக்கு ரஷியா சட்டவிரோதமாக உரிமை கோருவதாகவே அமெரிக்கா தெரிவித்து வருகிறது. எனவே, இத்தகைய சூழலில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
- ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
- இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.
பாரிஸ்:
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது! எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவிற்கு அதிபர் மேக்ரான் பாராட்டு
- இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேட்டி.
லுசைல்:
கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார். இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸ் அதிபர் மேக்ரானும், பிரதமர் மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர்
- உக்ரைன் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான இந்தியாவால் தீர்வு காணமுடியும் என்றார் பிரான்ஸ் அதிபர்.
பாரிஸ்:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எழுந்துள்ள கடினமான சூழலில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் வெற்றி பெற நாங்கள் உழைத்து வருகிறோம்.
உங்கள் (பிரதமர் மோடி) தலைமையின் கீழ் இந்தியா, முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். அத்துடன் நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்சினையை (உக்ரைன் விவகாரம்) தீர்க்க நமக்கு உதவ முடியும்.
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தமானது, இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஆழமான உறவு மற்றும் நட்பில் விளைந்த மைல்கல் சாதனைகளில் ஒன்றாகும். ஏர்பஸ் மற்றும் சப்ரான் உள்பட அதன் பங்காளிகள் அனைத்தும், இந்தியாவுடன் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இருப்பதையும், விண்வெளி முதல் சைபர் வரை, பாதுகாப்பு முதல் கலாசாரம் வரை, ஆரோக்கியம் முதல் ஆற்றல் மாற்றம் வரை பல துறைகளில் இந்தியாவுடன் நாங்கள் சாதித்துள்ளோம் என்பதையும் இந்த சாதனை காட்டுகிறது.
இந்தியாவிற்கு அதிநவீன மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்சிடம் ஆழமான உறுதிப்பாடு உள்ளது. பிரெஞ்சு தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பதில் எங்கள் அரசு முழு ஆற்றலையும் செலுத்தியுள்ளது. அத்துடன் அணுசக்தி, மைக்ரோசிப்ஸ், சைபர் மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் ஒரு புதிய லட்சியத்தை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.






