search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vladimir Putin"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் 2036-ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில் ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், அவரது முடிவை ராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் விதிமுறைகளை 2020ல் அதிபர் புதின் மாற்றினார்
    • இத்தேர்தல், ஏமாற்றுவதில் வல்லுனருடன் விளையாடுவதை போன்றது என கிர்கின் கூறினார்

    ரஷியாவில், 2024 மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    பதவியில் இருந்த ஒருவரே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ரஷிய அரசியலமைப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிமுறையில் 2020ல் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மாற்றம் கொண்டு வந்தார்.

    தற்போதைய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி அதிபர் புதின் மீண்டும் போட்டியிட 2036 வரை தடையேதும் இல்லை.

    இந்நிலையில் ரஷிய உளவு பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரியும், புதினை தீவிரமாக விமர்சித்து வருபவருமான ஐகோர் கிர்கின் (52) அதிபர் தேர்தலில் நிற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கிர்கின் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி புதின் அரசு அவரை சிறையில் அடைத்துள்ளது.

    டெலிகிராம் சமூக வலைதளத்தில் ஸ்ட்ரெல்கோவ் எனும் பெயரில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கிர்கின் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் அதிபர் தேர்தல் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

    தற்போதைய சூழ்நிலையில் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சீட்டாட்டத்தில் ஏமாற்றுவதில் கைதேர்ந்த ஒருவருடன் சீட்டு விளையாடுவதை போன்றது. ஆனால், நம் நாட்டின் மீது பற்றுள்ள சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வரும் தேர்தலில் ஒரே மனிதரே மீண்டும் மீண்டும் தேர்தலில் எதிர்ப்பின்றி வெல்வதற்கான திட்டங்களை தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன். நாட்டின் முன் நிற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களிலிருந்து தேசத்தை இதன் மூலம் காக்கவும் முடியும். என் ஆதரவாளர்கள் என்னை முன்னிறுத்த பிரசாரத்தை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு கிர்கின் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷியாவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து வந்தவர் கிர்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேராவை 3.5 மணி நேரம் கான்யுஸ் சித்திரவதை செய்துள்ளார்
    • ரஷிய ராணுவத்திற்கு இளைஞர்கள் அதிகளவு தேவைப்படுகிறார்கள்

    ரஷியாவில் வசித்து வந்தவர் வேரா பெக்டெலேவா (Vera Pekhteleva). இவர் விளாடிஸ்லாவ் கான்யுஸ் (Vladislav Kanyus) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் உறவில் திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், வேரா, கான்யுஸை விட்டு பிரிந்தார்.

    இது குறித்து கான்யுஸ் அடிக்கடி வேராவுடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒரு முறை இவர்கள் இருவரின் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கான்யுஸ், வேராவை பாலியல் ரீதியாக தாக்கினார்.

    அதன் பிறகு அவரை சுமார் 111 முறை கத்தியால் குத்தினார். அதிலும் ஆத்திரம் அடங்காத கான்யுஸ், வேராவை சுமார் 3.5 மணி நேரம் சித்திரவதை செய்தார். பின் இரும்பு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    வேராவின் பரிதாப அலறலை கேட்ட அக்கம்பத்தினர், காவல்துறைக்கு 7 முறை தகவல் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வரவில்லை.

    இறுதியில் கான்யுஸின் இரக்கமற்ற தாக்குதலில் வேரா உயிரிழந்தார்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கான்யுஸிற்கு, நீதிமன்றம் 17 வருட சிறைதண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், வேராவின் தாயார் ஒக்ஸானா (Oksana), கான்யுஸ் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறையில் இருந்தவர், ராணுவ உடையில் காட்சியளிப்பது குறித்து ஒக்ஸானா விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்.

    ரஷியா, கடந்த 2022 பிப்ரவரி மாதம், அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இதனை எதிர்த்து உக்ரைன் ரஷியாவுடன் போர் புரிந்து வருகிறது.

    போர் 1.5 வருடங்களாக நீள்வதால், ரஷியாவிற்கு ராணுவத்தில் பணியாற்ற பல இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். எனவே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பல இள வயதினரை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி கான்யுஸ் செய்த குற்றங்கள், அதிபரின் "சிறப்பு அதிகாரம்" மூலம், புதினால் மன்னிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மிகுந்த ஆத்திரத்துடனும், சோகத்துடனும் ஒக்ஸானா கருத்து தெரிவித்தார்.

    "நான் மிகுந்த மன உறுதி உள்ள பெண். ஆனால், இந்த செய்தி என்னை நிலைதடுமாற செய்து விட்டது. என் மகள் கல்லறையில் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? எல்லாமே என்னை விட்டு போய் விட்டது. ஒரு கொடூர கொலைகாரனை எப்படி வெளியே விட்டார்கள்? கொலகாரன் எதற்கு ரஷியாவை பாதுகாக்க வேண்டும்? அவன் மனிதனே அல்ல. பழி வாங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் அவன் மீண்டும் கொல்லலாம்" என ஒக்சானா கூறினார்.

    "ரஷிய சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குற்ற நடத்தைக்காக வருந்தும் விதமாகத்தான் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்" என அரசின் செயலை நியாயப்படுத்தும் விதமாக ரஷிய பாராளுமன்ற செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய அதிபர் புதினுக்கு உடல்நல குறைவு என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அதிபர் புதின் நன்றாகவே இருக்கிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உடல்நிலை குறித்து அடிக்கடி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், அதிபர் புதினுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. புதின் தனது அறையில் இருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்றனர் என்றும், அப்போது புதின் தரையில் விழுந்து கிடந்தார் என்றும், அங்கிருந்த மேஜை கவிழ்ந்து கிடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    புதினுக்கு சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளை கொண்ட அறைக்கு புதினை டாக்டர்கள் கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் புதின் சுய நினைவுக்கு திரும்பினார் என்று தகவல் வெளியானது.

    இதற்கிடையே, அதிபர் புதின் உடல்நிலை குறித்து வெளியான தகவலை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மறுத்துள்ளது.

    அதிபர் புதின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் உடல்நலக் குறைவால் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரை போல தோற்றமளிக்கும் ஒருவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.

    அதிபர் புதின் கடந்த வாரம் சீனாவில் நடந்த சர்வதேச ஒத்துழைப்புக்கான சாலை மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீனா சென்றடைந்தார்.
    • சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக,

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனா சென்றுள்ளார்.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்றார்.

    அப்போது பேசிய அதிபர் புதின், பெல்ட் ரோடு திட்டத்தை சீனா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ரஷியா அதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இஸ்ரேல் பிரதமருடன் புதின் தொலைபேசியில் விவரமாக பேசியுள்ளார்

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்கள் மறைவிடங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதை முடிவுக்கு கொண்டு வர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

    இது குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    அரசியல் மற்றும் பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அதிபர் விளாடிமிர் புதின் விரும்புகிறார். இது குறித்து அவர் இஸ்ரேல் அதிபர், அரபு நாடுகளின் தலைவர்கள், ஈரான் நாட்டு அதிபர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்று, அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இது மட்டுமின்றி மத்திய தரைகடல் பகுதி தலைவர்களுடனும் அவர் தொடர்பில் உள்ளார். ஈரான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் புதின் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்களை இஸ்ரேல் பிரதமருடன் அவர் பகிர்ந்து கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உள்ள மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்க தற்காலிக போர் நிறுத்தம் தேவை என புதின் கருதுகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இந்த அறிக்கையில் ஐ.நா. கூட்டமைப்பின் பாதுகாப்பு சபை முன் ரஷியா முன்மொழிய கொண்டு வந்த தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இஸ்ரேல் ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருவது நல்லது என்பதால் புதினின் முயற்சியை அரசியல் விமர்சகர்களில் ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஆக்ரமிப்பு மற்றும் அது தொடர்பாக இரு நாடுகளுக்கும் நடைபெறும் போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சீரழிவு குறித்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவும் மற்றுமொரு சாரார் ரஷியாவின் இந்த முயற்சியை பார்க்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
    • அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சீனா சென்றுள்ளார்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீவுடன் பேசினார். அப்போது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய உக்ரைன் போர் 590 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவி அந்நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமாக சேதங்களும் உயிரிழப்புகளும் நடைபெற்றும் போர் 590 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்காவிற்கு உள்ள கடன் ரூ. 2,74,63,90,35,00,00,000 (33 டிரில்லியன் அமெரிக்க டாலர்) எனும் அளவை தொட்டு விட்டதால், அந்நாட்டில் செலவினங்களை குறைக்க கோரி பெரும் விவாதங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இந்த விவாதங்களில் ரஷிய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவி தடைபடும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.

    இப்பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஒரு சந்திப்பில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. உதவி நின்றால், ஒரு வாரத்தில் அனைத்தும் நின்று விடும். நிதியுதவி மட்டுமல்ல; ராணுவ தளவாட உதவிகளும் நிற்க தொடங்கினால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும். தற்போது வரை ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், உக்ரைன் 90 ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, "அமெரிக்காவை போன்று நிதியுதவியோ ராணுவ உதவியோ உக்ரைனுக்கு நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியாது," என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.

    புதின் கூறியவாறு அமெரிக்க உதவி தடைபட்டு, போர் ரஷியாவிற்கு சாதகமாக சென்றால் அதனால் எற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷியா வெற்றி பெற்றதாக கூறிய தேர்தலை உக்ரைன் புறக்கணித்தது
    • எந்த சர்வதேச சட்டங்களும் மீறப்படவில்லை என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் எண்ணிலடங்கா உயிர் பலிகளும், பெருமளவு கட்டிட சேதங்களும் ஏற்பட்டும் போர் முடிவுக்கு வராமல் 580 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    கடந்த ஆண்டு, உக்ரைனின் டோனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk), சப்போரிழியா (Zaporizhzhia) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளை ரஷியா தங்கள் நாட்டுடன் ஒவ்வொன்றாக இணைத்து கொண்டது. இணைக்கப்பட்ட இந்த 4 பகுதிகளில் சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி, அத்தேர்தலில் ரஷிய பிரதிநிதிகள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. ஆனால், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் இந்த தேர்தலை ஒப்பு கொள்ளாமல் புறக்கணித்தன.

    இந்த தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வீடியோ மூலமாக உரையாற்றினார். இந்த உரை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    ரஷியா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்து கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷிய உக்ரைன் போரே ஏற்பட்டது. நாம் நமது தாயகத்திற்காக போராடுகிறோம்; நமது ஒற்றுமைக்காகவும், வெற்றிக்காகவும் நாம் சண்டையிடுகிறோம். இதில் எந்த சர்வதேச சட்டங்களோ, வழிமுறைகளோ மீறப்படவில்லை. ரஷியாவுடன் தற்போது இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பகுதியை சேர்ந்த மக்களும் ரஷியாவுடன் இணையவே விரும்பினார்கள்.

    இவ்வாறு புதின் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நேட்டோ (NATO) கூட்டமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg), "ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் மெதுவாக முன்னேறி வருகிறது. உக்ரைன் மீண்டும் கையகப்படுத்தும் ஒவ்வொரு மீட்டர் இடமும் ரஷியா இழக்கும் இடமாக கருத வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
    • அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி

    2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

    "இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.

    2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin