search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS"

    • ராஜகோட் உள்பட 5 இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
    • கடந்த 70 ஆண்டில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தர பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரா) ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மற்றவர்களிடம் இருந்து நம்பிக்கை முடிவடையும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளாக நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. அதுவும் டெல்லியில் மட்டுமே இருந்தது. சுமார் 70 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுவும் முழுதாகக் கட்டி முடிக்கப்படவில்லை.

    தற்போது 10 நாட்களில் 7 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டன. அதனால்தான் கடந்த 70 ஆண்டில் இருந்ததைவிட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று கூறுகிறேன்.

    அதிக எண்ணிக்கையிலான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான எனது உத்தரவாதத்தை நிறைவேற்றி உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பா.ஜ.க. அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தேன். முந்தைய காங்கிரஸ் அரசு ரேபரேலியில் வெறும் அரசியல் மட்டுமே செய்தது. ஆனால் பா.ஜ.க. அரசு அங்கு உண்மையாக வேலை செய்தது.

    கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் கொரோனா தொற்று நோயை இந்தியாவால் தோற்கடிக்க முடிந்தது. நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிப்பதன் மூலம் நோய்கள் ஏற்படுவதை தடுப்பதே நமது அரசாங்கத்தின் முன்னுரிமை ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது என தெரிவித்தார்.

    • 720 படுக்கைகளுடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது.
    • இந்த மருத்துவமனையில் ஐ.சி.யு. மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளன.

    குஜராத் மாநிலத்தின் முதல் ஏய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ந்தேதி திறந்து வைக்க இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரிஷிகேஷ் பட்டேல் தெரிவித்து இருக்கிறார்.

    இதுகுறித்து பேசிய அமைச்சர் ரிஷிகேட் பட்டேல், "201 ஏக்கர்கள் பரப்பளவில் உருவாகி இருக்கும் ராஜ்கோட் ஏய்ம்ஸ் மருத்துவமனை 720 படுக்கைகளுடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் ஐ.சி.யு. மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளன."

    "இதே நாளில் 23 ஆபரேஷன் தியேட்டர்கள், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் வளாகம், 250 படுக்கைகளை கொண்ட ஐ.பி.டி. உள்ளிட்டவைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மற்ற படுக்கைகள் நாளடைவில் பயன்பாட்டிற்கு வரும்," என்று தெரிவித்தார்.

    இதற்காக குஜராத் செல்லும் பிரதமர் மோடி ஏய்ம்ஸ் மருத்துவமனையுடன் ஒகா மற்றும் பெய்ட் துவாரகா இடையிலான பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். 

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    • சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.


    சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.

    இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.
    • 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய கட்டடம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய தற்காலிக வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கு தற்காலிகமாக மதுரையில் வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மதுரை தோப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய மந்திரி கூறினார்.
    • இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் இன்று மதுரைக்கு வருகை தந்தார்.

    இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.சிங், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு ஜனவரி 2-ல் டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட 3 ஆண்டுகளில் கட்டுமானம் முடிவடையும். மருத்துவமனை கட்டுமான மதிப்பு தற்போது 20 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

    மேலும், ஜே.என்.1 வகை கொரோனா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் புதிய வகை கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என கூறினார்.

    • கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலை.
    • இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

    டெல்லியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    "நேற்று இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து விதமான பரிசோதனைக்கான வசதியும் உள்ளது. நுண்ணுயிரியல் பிரிவில் என் கண்காணிப்பின் கீழ் தனியாக 12 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது."

     


    "கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்துவோம். தங்களது வார்டுகளுக்கு கொரோனா அறிகுறிகளுடன் வருவோரை, அங்கேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து துறைகளைுக்கும் உத்தரவிட்டுள்ளோம்."

    "மருந்துகள், பி.பி.இ. கிட் மற்றும் இதர உபகரணங்கள் என கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் தேவையான அளவுக்கு தயார்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும், கொரோனா நிலை குறித்து கண்காணித்து வருகிறோம். தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது," என்று எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சஞ்சீவ் லால்வானி தெரிவித்துள்ளார்.

    • உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
    • 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது.

    ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி அன்று சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    மருத்துவமனைகளில், உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடையாளம் தெரியாமல் இன்னும் 52 உடல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்னா தாஸ் கூறியதாவது:-

    புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 81 உடல்கள் உள்ளன. ஒரே சடலத்தை அடையாளம் கண்டு பலர் உரிமைக் கோரி வருகின்றனர். இதனால், அவற்றின் மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

    இதில், 29 சடலங்களுக்கான உறுதிப்படுத்தல் பெறப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. மீதமுள்ள 52 உடல்களை அடையாளம் காண இதுவரை யாரும் வரவில்லை.

    மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, புவனேஸ்வர் நகராட்சி கார்ப்பரேஷன் (பிஎம்சி) உடல்களை அவர்களின் சொந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதோடு யாராவது உடலை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை என்றால், புவனேஸ்வரில் இரண்டு இடங்களில் தகனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம் எழுதினார்.
    • வருகிற 2026-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

    அதில், திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி முதற்கட்ட கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து 2023 ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கவும், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவை யான ஏற்பாடுகளை செய்ய வும் கோரிக்கை விடுத்தி ருந்தார்.

    இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியாவுக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதான் மந்திரி சுவாஷ்தியா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜப்பான் நாட்டின் ஜிக்கா ஏஜென்சியுடன் கடனுதவிக் கான ஒப்பந்தம் செய்துள் ளது.

    இந்த ஒப்பந்தம் கடந்த 2021-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முழு மையாக கட்டி முடிக்கப் படும்.

    மேலும் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வசதியாக முதன்மை இயக்குனர், துணை இயக்குனர் (நிர்வாகம்) கண்காணிப்பு மற்றும் முதன்மை பொறி யாளர், நிர்வாக அதிகாரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு விரைவாக செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி அசாம் மாநிலம் சென்றார்.
    • கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    கவுகாத்தி:

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார்.

    இந்நிலையில், கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1,120 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையானது அசாமில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, மற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும் மருத்துவ சேவையை வழங்கும்.

    இதனை தொடர்ந்து நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 மருத்துவக் கல்லூரிகளும் சுமார் ரூ.615 கோடி, ரூ.600 கோடி மற்றும் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • உதயநிதி இப்போது எய்ம்ஸ் பற்றி வாய் திறக்காதது ஏன்? என ஆர்ப்பாடடத்தில் ராஜன் செல்லப்பா பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இதில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல.ஏ பேசியதாவது:-

    தி.மு.க. அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம், மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்தது.தற்போது மின்கட்டணத்தை 53 சதவீதமும், வீட்டு வரியை 100 சதவீதமும் உயர்த்தி விட்டார்கள். பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

    தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செய்யும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போதைய விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிய ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றனர். அதற்குள் இந்த விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.

    தற்போது புயல், மழை காரணமாக மக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்திருக்கும் நிலையில் முதல்வர் தனது மகனுக்கு அமைச்சர் பதவியேற்பு விழா நடத்துகிறார். தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கூறி செங்கல்லை தூக்கி வாக்கு சேகரித்த உதயநிதி தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து வாய் திறக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடி மராமத்து பணி மூலம் தமிழகமெங்கும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். பொது மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

    வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆர்ப்பாட்டத்தில்

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்யன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் என எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
    • மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    உலக இருதய தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் தொடங்கிய ஊர்வலத்தை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் தொடங்கி வைத்தார்.

    பேராசிரியர்கள் ராமதாஸ், லீனா, சரவணன் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். இருதயத்தின்அவசியம், அதனை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளுடன் வழிவிடுமுருகன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக வந்தனர்.டாக்டர் ஹனுமந்தராவ் பேசியதாவது:-

    இருதய நோய் பாதிப்பால் ஆண்டு தோறும் அதிகளவில் இறக்கின்றனர். இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும். மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இயற்கை உணவு வகைகளை சாப்பிட வேண்டும். தினமும் உடற்ப யிற்சி, யோகா, மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம்.
    • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்படத் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, நேற்று நடைபெற்ற 49வது தேசிய மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் சிந்தியா மேலும் கூறியதாவது:-

    ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்கள் செயல்படத் தொடங்கும். அதன் முன்மொழிவுக்கான கோரிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அழைக்கப்படும். இதனால் விலைமதிப்பற்ற நேரத்தையும் உயிர்களையும் காப்பாற்ற ஹெலிகாப்டர்கள் சேவைக்கு ஒதுக்கப்படும்.

    ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம். சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எங்களிடம் உள்ள 'பொன்னான நேரம்', நெடுஞ்சாலைகளில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கும் அல்லது முதல் மையத்திற்கும் விரைவாக அழைத்து செல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் அமைச்சகம் பகிர்ந்து கொண்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்போது 49 ஏர் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளதாகவும், இவை 19 ஆபரேட்டர்களால் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    ×