search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS"

    • மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
    • இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வால் அகற்றப்பட்டது.

    தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மருத்துவர்கள், மூன்று மாத கைக்குழந்தையின் வாலை அகற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், குழந்தையின் லும்போசாக்ரல் பகுதியில் அமைந்துள்ள 15 செ.மீ வால் அகற்றப்பட்டது.

    எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள குழந்தைகள் துறையின் தலைவர் டாக்டர் ஷஷாங்க் பாண்டா தலைமையிலான இந்த அறுவை சிகிச்சை, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான 40 அறுவை சிகிச்சையில் இதுவும் ஒன்றாகும்.

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை, 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மனித வால் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வெளியேறி பிறந்தது.

    மனித வால்கள் ஒரு அரிய பிறவி குறைபாடு ஆகும். இதைத்தவிர, குழந்தைக்கு S1 முதல் S5 முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பு நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடைய முதுகெலும்பு டிஸ்ராபிசம் இருந்தது. இது அறுவை சிகிச்சையின் சிக்கலை மேலும் அதிகரித்தது.

    இருப்பினும், எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கடந்த ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வாலை அகற்றி, குழந்தையின் முதுகெலும்பு சரிசெய்யப்பட்டது.

    ஐந்து நாட்களுக்குப் பிறகு, குழந்தை நரம்பியல் குறைபாடுகள் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு காயம் ஆறியதோடு, சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் அறிவித்துள்ளனர்.

    • ராஜ்நாத் சிங்குக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.
    • ராஜ்நாத் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ரிமா டாடா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு (வயது 73) நேற்று அதிகாலையில் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அவர் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ரிமா டாடா கூறியுள்ளார்.

    ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தொடர்ச்சியாக மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே உள்ளார்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நேற்றிரவு திடீர் உல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் தொடர்ச்சியாக மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே உள்ளார்.

     

    1942 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.-இல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி 1986 முதல் 1990 பிறகு 1993 முதல் 1998 மற்றும் 2004 முதல் 2005 ஆகிய காலக்கட்டங்களில் பா.ஜ.க.வின் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார்.

    மத்தியில் கிட்டத்தட்ட மூன்று முறை ஆட்சியமைக்க தவறிய பா.ஜ.க. 1999-இல் ஆட்சி பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் எல்.கே. அத்வானி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் முதல் உள்துறை அமைச்சராக தேர்வானார். பிறகு இவர் துணை பிரதமராகவும் பதவி வகித்தார்.

    பிறகு 2009 ஆம் ஆண்டு தேர்தலில் எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

    • பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது.
    • சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    டேராடூன்:

    ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நர்சிங் அதிகாரியை கைது செய்ய போலீஸ் வாகனம் அம்மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு வந்தது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனம் செல்ல வழி செய்தனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை நடந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது.

    இச்சம்பவம் தொடர்பான முழு விவரம் வருமாறு:-

    எய்ம்ஸ் ஆபரேஷன் தியேட்டரில் பணிபுரியும் நர்சிங் அதிகாரி சதீஷ் குமார் மீது எய்ம்ஸ் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்கு மட்டுமே போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சதீஷ் குமாரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், அவர் பணிபுரியும் மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு போலீசார் வாகனத்துடன் நுழைந்தனர். இருபுறமும் படுக்கைகளில் நோயாளிகள் வரிசையாக படுத்து இருந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்த போலீஸ் வாகனத்தை கண்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்தனர். இதையடுத்து போலீஸ் வாகனம் செல்ல வழி சீர்செய்யப்பட்டது. 6-வது மாடிக்கு சென்ற போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

    இச்சம்பவங்கள் தொடர்பாக 26 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    மேலும் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


    • மார்ச் 14-ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.
    • இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். இதன்பிறகு, நீண்டகாலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

    கடந்த 2023-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல்&டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.

    நீண்டகாலம் கழித்து கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்ப்பித்தது.

    இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த 10-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வழங்கியது.

    இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. எல் & டி நிறுவனம் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன்செய்யும் வாஸ்து பூஜை போடப்பட்டது.

    • மார்ச் 14 ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின.
    • இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத வா்கில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். இதன்பிறகு, நீண்டகாலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல்&டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின.

    நீண்ட காலம் கழித்து கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்பித்தது.

    இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று கடந்த 10 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு இன்று வழங்கியது.

    • ராஜகோட் உள்பட 5 இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
    • கடந்த 70 ஆண்டில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தர பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரா) ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மற்றவர்களிடம் இருந்து நம்பிக்கை முடிவடையும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளாக நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. அதுவும் டெல்லியில் மட்டுமே இருந்தது. சுமார் 70 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுவும் முழுதாகக் கட்டி முடிக்கப்படவில்லை.

    தற்போது 10 நாட்களில் 7 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டன. அதனால்தான் கடந்த 70 ஆண்டில் இருந்ததைவிட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று கூறுகிறேன்.

    அதிக எண்ணிக்கையிலான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான எனது உத்தரவாதத்தை நிறைவேற்றி உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பா.ஜ.க. அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தேன். முந்தைய காங்கிரஸ் அரசு ரேபரேலியில் வெறும் அரசியல் மட்டுமே செய்தது. ஆனால் பா.ஜ.க. அரசு அங்கு உண்மையாக வேலை செய்தது.

    கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் கொரோனா தொற்று நோயை இந்தியாவால் தோற்கடிக்க முடிந்தது. நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிப்பதன் மூலம் நோய்கள் ஏற்படுவதை தடுப்பதே நமது அரசாங்கத்தின் முன்னுரிமை ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது என தெரிவித்தார்.

    • 720 படுக்கைகளுடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது.
    • இந்த மருத்துவமனையில் ஐ.சி.யு. மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளன.

    குஜராத் மாநிலத்தின் முதல் ஏய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ந்தேதி திறந்து வைக்க இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரிஷிகேஷ் பட்டேல் தெரிவித்து இருக்கிறார்.

    இதுகுறித்து பேசிய அமைச்சர் ரிஷிகேட் பட்டேல், "201 ஏக்கர்கள் பரப்பளவில் உருவாகி இருக்கும் ராஜ்கோட் ஏய்ம்ஸ் மருத்துவமனை 720 படுக்கைகளுடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் ஐ.சி.யு. மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளன."

    "இதே நாளில் 23 ஆபரேஷன் தியேட்டர்கள், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் வளாகம், 250 படுக்கைகளை கொண்ட ஐ.பி.டி. உள்ளிட்டவைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மற்ற படுக்கைகள் நாளடைவில் பயன்பாட்டிற்கு வரும்," என்று தெரிவித்தார்.

    இதற்காக குஜராத் செல்லும் பிரதமர் மோடி ஏய்ம்ஸ் மருத்துவமனையுடன் ஒகா மற்றும் பெய்ட் துவாரகா இடையிலான பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். 

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    • சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.


    சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.

    இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.
    • 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய கட்டடம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய தற்காலிக வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கு தற்காலிகமாக மதுரையில் வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மதுரை தோப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய மந்திரி கூறினார்.
    • இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் இன்று மதுரைக்கு வருகை தந்தார்.

    இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.சிங், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு ஜனவரி 2-ல் டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட 3 ஆண்டுகளில் கட்டுமானம் முடிவடையும். மருத்துவமனை கட்டுமான மதிப்பு தற்போது 20 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

    மேலும், ஜே.என்.1 வகை கொரோனா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் புதிய வகை கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என கூறினார்.

    • கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலை.
    • இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

    டெல்லியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    "நேற்று இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து விதமான பரிசோதனைக்கான வசதியும் உள்ளது. நுண்ணுயிரியல் பிரிவில் என் கண்காணிப்பின் கீழ் தனியாக 12 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது."

     


    "கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்துவோம். தங்களது வார்டுகளுக்கு கொரோனா அறிகுறிகளுடன் வருவோரை, அங்கேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து துறைகளைுக்கும் உத்தரவிட்டுள்ளோம்."

    "மருந்துகள், பி.பி.இ. கிட் மற்றும் இதர உபகரணங்கள் என கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் தேவையான அளவுக்கு தயார்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும், கொரோனா நிலை குறித்து கண்காணித்து வருகிறோம். தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது," என்று எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சஞ்சீவ் லால்வானி தெரிவித்துள்ளார்.

    ×