ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்த மகாராஷ்டிரா அமைச்சர்: காரணம் இதுதான்

மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே.இவர் முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.
ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்த மகாராஷ்டிரா அமைச்சர்: காரணம் இதுதான்
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமாக இருந்து வருபவர் பங்கஜா முண்டே. இவர் முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.

இந்நிலையில், பங்கஜா முண்டே இன்று காலை லத்தூர் செல்வதற்காக புறப்பட்டார். மாவட்ட கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பங்கஜா முண்டே சம்பாஜி நகரில் இருந்து லத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.

அப்போது அவர் பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.

கடந்த வாரம் மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரியான அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்துச் சிதறியதில் அவர்  உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com