என் மலர்

    நீங்கள் தேடியது "Wrestlers"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    • பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்த இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என பலரும் 'ரீல்ஸ்' நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் முதல் முறையாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற 'டபிள்யூ.டபிள்யூ.ஈ.' போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் ட்ரூ மிக்கின்டைர், ஜிண்டர்மகால், சாமிஜெயின், கெவின் ஓவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி நடந்த மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதைப்பார்த்த பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. எம்.பி. மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது
    • பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் கடந்த 15-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராடி வந்தனர்.

    அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் கடந்த 15-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், பாலியல் வழக்கில் ஜூலை 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்குக்கு டெல்லி கோர்ட் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    மேலும், நீக்கப்பட்ட மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமரும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும்.
    • செல்வி போகட் மற்றும் திருமதி மாலிக் ஆகியோர் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

    இந்நிலையில், "இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல.

    மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சீர்திருத்தம் குறித்து, வாக்குறுதி அளித்தபடி, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் காத்திருப்போம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த பதிவு வெளியிட்ட சில நிமிடங்களில், செல்வி போகட் மற்றும் மாலிக் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக டுவீட் செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் இருக்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    இவர்கள் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 28ம் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

    இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அவர்கள் அறிவித்தனர். விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

    பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு
    • வீரர்- வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் இருக்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கொதித்தனர்.

    கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அத்து மீறியதாக கூறி போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.

    இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் ஷாக்ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு 11 மணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

    பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    இந்த சந்திப்புக்கு பிறகு பஜ்ரங் புனியா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    "பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரினோம். அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அமித்ஷா எங்களிடம் உறுதியளித்தார். சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் எங்களிடம் தெரிவித்தார்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
    • ஏன் அரசும், பா.ஜனதாவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில்கள் உள்ளதா? என்று கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதில் அவர் மீது கடுமையான குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு இருப்பது குறித்து ஊடகத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 'பிரதமர் மோடி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை படித்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து நாட்டுக்கு பதில் சொல்லுங்கள்.

    பிரிஜ்பூஷன் சிங்கை பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டின் பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அமைதியாக இருக்கிறார். விளையாட்டுத்துறை மந்திரி கண்ணை மூடிக் கொள்கிறார்.

    பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். தாமதப்படுத்தி வருகின்றனர். இவரை ஏன் அரசும், பா.ஜனதாவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில்கள் உள்ளதா? என்று கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
    • "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி பானர்ஜி பங்கேற்றார்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார். கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஸ்ரா சாலையில் இருந்து ரவீந்திர சதன் வரை நடைபெற்ற பேரணியில் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி, பானர்ஜி பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் மல்யுத்த வீரர்களால் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். மல்யுத்த வீரர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இது உலகளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்துவிட்டது. எனது ஒற்றுமை அவர்களுடன் உள்ளது. அவர்களின் போராட்டத்தை தொடரச் சொன்னேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
    • அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    இதனையடுத்து பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவெடுத்துள்ளனர்.

    மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர்கள் சட்டம் ஒழுங்கை மீறியதாக போலீசார் கைது செய்தனர்.

    மும்பை :

    இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் முன்னாள் தலைவர் பிரிஷ் பூஷன் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை போலீசார் சட்டம் ஒழுங்கை மீறியதாக கைது செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகம் தான் வீரர்கள் மீது இந்த அத்துமீறலை மேற்கொள்ள அனுமதி வழங்கியதா?. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்படி இழிவாக நடத்தப்படுவதை கண்டு நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். விளையாட்டுகளின் மூலம் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் நீதிக்காக இதுபோன்ற போராட்டங்களை நடத்த நிர்ப்பந்திக்கப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. அனைவராலும் பாராட்டப்பட்ட வெற்றியாளர்கள் திடீரென தங்களுக்கு நீதி கேட்கும்போது வில்லன்களாகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறுகையில், "மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அவர்களே, எங்கள் பெண் மல்யுத்த வீரர்கள், அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பாருங்கள். நீங்கள் இந்தியாவின் பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி, இவர்களை பாதுகாப்பதும், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதும் உங்களின் கடமையல்லவா. இதை விட்டுவிட்டு ராகுல் காந்தி தொடர்பான பிரச்சினைகளில் மட்டுமே நீங்கள் பேசுவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்த முயன்றனர்.
    • மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட்

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதை ஒட்டி போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், தடையை மீறி பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களாலும், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பாலும் நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது.

    பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகளின் குரலை அரசு இரக்கமின்றி மிதித்து வருகிறது.

    இது முற்றிலும் தவறு. அரசின் திமிரையும், அநீதியையும் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin