search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "supriya sule"

    • சான்சட் டிவி இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.
    • மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்.

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

    இன்று பாராளுமன்றத்தில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் உரையை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.

    இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே போல் இந்த விவகாரத்தை தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

    அவரது பதிவில், "ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் பேசும் உறுப்பினர்களின் பேச்சை ஹிந்தி மொழிமாற்றத்தை கொண்டு சான்சட் தொலைக்காட்சி ஒலிபரப்பி வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பேச்சை தங்களின் சொந்த மொழிகளில் கேட்பதற்கான மக்களின் உரிமையை பறிக்கும் செயல் இது" என்று தெரிவித்துள்ளார்.

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது

    இந்நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி சுனேத்ர பவார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்போது முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சரத் பவார் கட்சியை உடைத்து, அதை கைப்பற்றிக் கொண்டவர் அஜித் பவார்.
    • அரசியல் ரீதியாக மோதல் இருந்து வரும் நிலையில் சரத் பவார் மகள், அஜித் பவாரை சந்திக்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.

    இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.

    இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.

    எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.

    எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மோடி பார்க்க சென்றதால் இந்தியா தோல்வி என விமர்சனம்.
    • அதானியுடன் பிரதமர் மோடியை இணைத்து பேசும்போது பிக்பாக்கெட் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ்- பா.ஜனதா கட்சி தலைவர்கள் வளர்ச்சியை பற்றி பேசியதை விட, ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பேசியதுதான் அதிகம் என்றால் அது மிகையாகாது.

    அவ்வாறு விமர்சனம் செய்யும்போது, பயன்படுத்தும் சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாகி விடும். அப்படித்தான் ராகுல் காந்தில் தேர்தல் பிரசாரத்தின்போது, ஏற்கனவே மோடி குறித்து பேசிய வார்த்தை சர்ச்சைக்குள்ளானது. அதன் காரணமாக நீதிமன்றத்தை சந்தித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது பிரசாரத்தின்போது மோடிக்கு எதிராக பிக்பாக்கெட் (pickpocket), அபசகுணம் (Pannauti) ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே, ராகுல் காந்தி ஒரு போராளி, கண்ணியமான வகையில் பதில் அளிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''ராகுல் காந்தி வலிமையான மற்றும் நேர்மையான தலைவர். அவர் கண்ணியமான, நேர்மையான பதிலை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போராளி. அவரால் பயமின்றி இருக்க முடியும். ஏனென்றால் அவர் நேர்மையானவர்.

    ராகுல் காந்தியின் குடும்பம் பற்றி பா.ஜனதா பேசியதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். ஆகவே, தற்போது ராகுல் காந்தி சில விசயங்களை பேசும்போது, அதை ஏன் அவர்கள் மோசமானதாக உணர்கிறார்கள். ராகுல் காந்தியின் தாத்தாவின் அப்பாவை பற்றி கூட பேசியிருக்கிறார்கள்.

    • ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்
    • பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.

    அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஜூலை 2023ல் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறினார்
    • சின்னத்தை மட்டுமே நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை என சரத் பவார் கூறினார்

    1999 ஜூன் மாதம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் (82) தொடங்கியது, தேசிய காங்கிரஸ் கட்சி (NCP).

    கடந்த ஜூலை 2023ல் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் மகராஷ்டிர மாநிலத்தின் ஆளும் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து, அம்மாநில துணை முதல்வரானார்.

    இதன் காரணமாக என்.சி.பி. இரண்டாக உடைந்தது. கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் உரிமை கொண்டாடிய அஜித் பவார், இது தொடர்பாக தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் பிற பிரமுகர்களின் ஆதரவு கடிதத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

    சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, "கட்சியில் பிளவு ஏதும் இல்லை" என கூறி வந்தார்.

    தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்த முடிவையும் தான் ஏற்பதாக அஜித் பவார் கூறி வந்தார்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்க, தேர்தல் ஆணையத்தின் டெல்லி அலுவலகத்திற்கு வர இரு பிரிவு தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

    இதையடுத்து, டெல்லி அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவத் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் சரத் பவார், இன்று வருகை தந்தார். "வாக்காளர்கள் கட்சி சின்னத்தை மட்டுமே நம்பி வாக்களிப்பதில்லை" என முன்னரே சரத் பவார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அஜித் பவார் தரப்பில் பிரபல வழக்கறிஞர்கள் மகேஷ் ஜெத்மலானி மற்றும் மனிந்தர் சிங் ஆஜராகின்றனர். சரத் பவார் தரப்பில் காங்கிரஸ் முக்கிய தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.

    இரண்டு ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

    • இப்போது நான் வலுவாகிவிட்டேன்.
    • எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    மும்பை :

    ஒய்.பி. சவான் அரங்கில் சரத்பவார் தலைமையில் நடந்த கூட்டத்தில் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னையோ அல்லது வேறு எந்த நபரையோ ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் என் தந்தைக்கு எதிராக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். கட்சி தொண்டர்களுக்கு அவர் தந்தையை விட மேலானவர்.

    நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் இதேபோன்று பதவியேற்றப்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் இப்போது நான் வலுவாகிவிட்டேன். என்னை பலப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எங்கள் உண்மையான போராட்டம் பா.ஜனதாவின் செயல்பாட்டு முறைக்கு எதிராக இருக்கும். எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    நான் சிறிய வேதனை தரக்கூடிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு பெண் தான். ஆனால் நேரம் வந்தால் பெரிய மோதலுக்கு தயாராகும் வகையில் சத்ரபதி சிவாஜியின் தயார் ஜிஜாவாகவும், மராட்டிய பெண் ஆட்சியாளர் அகில்யாபாயாகவும் என்னை மாற்றிக்கொள்வேன்.

    தந்தைக்கு வயதாகி விட்டதாக கூறி வீட்டிற்குள் முடங்க வைக்க முயற்சிக்கும் மகன்களை விட மகள்களாகிய நாங்கள் மிக சிறந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அஜித்பவார் நேற்று தனது உரையின்போது சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அவரை ஓய்வெடுக்குமாறு வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    சரத்பவாரின் அணியில் இருக்கும் முக்கிய தலைவரான ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், "அஜித்பவார் சமீபத்தில் கட்சியின் மாநில தலைவராக விருப்பம் இருப்பதாக கூட்டத்தில் பேசினார். கட்சியில் சில உள் விவகாரங்களை பொது மேடையில் பேசக்கூடாது என்று தெரிந்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அஜித்பவார் எனது காதில் அவரது ஆசையை கிசுகிசுத்திருந்தால் கூட நான் அவருக்கு பதவியை கொடுத்திருப்பேன். சரத்பவார் ஒரே ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அனைவரும் முன்பே பார்த்து இருப்பீர்கள்.

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் காரட் மற்றும் சத்தாராவில் நடத்திய பொதுக்கூட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில் அவரது தாக்கத்தை நீங்கள் (அஜித்பவார் அணி) உணர்வீர்கள்" என்றார்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார்.
    • அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எது நடந்தாலும் வேதனையானது, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

     தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகுதான் எங்கள் நம்பகத்தன்மை உயரும்.

    அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது.

    ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என தெரிவித்தார்.

    • தேசிய செயல் தலைவர் பதவி சுப்ரியா சுலேவுக்கு ஒதுக்கப்பட்டது.
    • செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயல் தலைவர் பதவி சமீபத்தில் கட்சி தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவுக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் கட்சியின் நிறுவன தின நிகழ்ச்சியில் மூத்த தலைவர் அஜித்பவார் "எனக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை. கட்சி பணி செய்யவே விரும்புகிறேன்" என்று பேசினார்.

    இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    கட்சியில் உள்ள அதிகமான தலைவர்கள் தங்களை கட்சி பணியில் ஈடுபடுத்தி கொள்வது நல்லதுதான். கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சி அமைப்பில் பணியாற்றியவர்கள். அஜித்பவார் கட்சிபணி ஆற்றுவதாக தெரிவித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சேவை, கவுரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இலக்குகள் ஆகும். ஒரு சகோதரியாக, எனது சகோதரர் அஜித்பவாரின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் நிருபர்கள் அஜித்பவாருக்கு கட்சியில் மாநில அளவில் பதவி வழங்கப்படும் என்று வெளியாகும் தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "இது கட்சியின் உள் விவகாரம்" என்றார்.

    அதேபோல கடந்த ஆண்டு சிவசேனாவில் அதிருப்தி அணி முயற்சி தோல்வி அடைந்திருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டு இருப்பார் என்று தீபக் கேசர்கர் கூறியது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், "அவர் (தீபக் கேசர்க்கர்) பேசுவது உண்மையாக இருந்தால், அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.

    • அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை.
    • அஜித்பவார் வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவின.

    மும்பை :

    தேசியவாத காங்கிரசில் சுப்ரியா சுலேக்கு தேசிய செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை. இதற்கு அஜித்பவார் வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவின.

    இதுபற்றி மும்பையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அளித்த சுப்ரியா சுலே எம்.பி., "யார்- யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது எங்களது உள்கட்சி விவகாரம்.

    அஜித்பவார் மாநில அரசியலின் அமிதாப் பச்சன் போன்றவர். அஜித்பவார் செல்லும் இடங்களில் ஆட்டோகிராப் வாங்கவும், செல்பி எடுக்கவும் பலர் விரும்புகிறார்கள் " என்று குறிப்பிட்டார்.

    • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார்.
    • வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும்.

    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரசின் 25-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத்பவார், கட்சியின் தேசிய செயல் தலைவர்களாக தனது மகள் சுப்ரியா சுலே எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரை அறிவித்தார். தேர்தல் பணி, மாநிலங்களவை, மக்களவை பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சுப்ரியா சுலேவை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவராகவும் சரத் பவார் நியமித்தார். தேர்தல் குழு தலைவர் என்பதால், தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும். 

    சுப்ரியா சுலேக்கு மராட்டியம், அரியானா, பஞ்சாப் மாநில பொறுப்புகள் மற்றும் பெண்கள் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. பிரபுல் படேலுக்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், கோவா, மாநிலங்களவையின் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார். அதேசமயம், அவரது அண்ணன் மகனும் மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கவில்லை. அவரது முன்னிலையிலேயே புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×