என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Work pressure"

    • 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாக கருதப்படுகிறார்.
    • பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

    ஐடி நிறுவனமான COGNIZANT தனது ஊழியர்கள் பணி செய்கிறார்களா என்பதை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.

    இதற்காக, 'ProHance' போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது.

    ProHance போன்ற ஒரு கருவி ஒரு ஊழியர் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தைக் கண்காணிக்கிறது.

    ஊழியர் பணியாற்றும் ஆபீஸ் கணினிகளில், மவுஸ் அல்லது கீ போர்டை 5 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் செயலற்று உள்ளதாக கருதப்படுகிறார். 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாக கருதப்படுகிறார்.

    இந்த கண்காணிப்பு அமைப்பு ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசமாக இருக்கும். இந்த செயல்முறை விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    அதாவது, இந்த கண்காணிப்பு தரவு, ஊழியர் செயல்திறனை மதிப்பிடவும், பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.  

    • மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது.
    • நோயாளிகளைப் பராமரித்து வந்த செவிலியர், அவர்களது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் தானே எஜமானி போல செயல்பட்டதாக தெரிவித்தார்.

    இரவுப்பணியில் அழுத்தத்தை குறைக்க தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

    ஜெர்மனியின் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் 2020 இல் செவிலியராக பணியில் சேர்ந்த அவர் தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளுக்கு தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொன்றுள்ளார்.

    இவ்வாறு அவர் 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது.

    டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகத் கூறப்படுகிறது.

    குற்றம் சாட்டப்பட்ட செவிலியரின் பெயர் வெளியிடப்படவில்லை. வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரித்து வந்த செவிலியர், அவர்களது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் தானே எஜமானி போல செயல்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

    இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிமன்றம், செவிலியருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வடக்கு ஜெர்மனியில் 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நீல்ஸ் ஹோஜெல் என்ற ஆண் நர்ஸ் ஒருவர் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்தார்.

    2019இல் ஆண்டில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என்று கருதப்படும் நிலையில் தற்போது அதே பாணியில் மற்றொரு செவிலியரின் கொடூர கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

    • அலுவலகத்திற்குச் செல்வதைக் குறிப்பிடும்போது அடிக்கடி கோபப்படுகிறார்கள்.
    • உலகப் பொருளாதாரம் 438 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

    உலகின் பல நாடுகளில் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மக்கள் காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்திற்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்களில் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மிகக் குறைவு.

    குறிப்பாக இந்தியாவில் ஏராளமான ஊழியர்கள் தங்கள் வேலைகளில் அதிருப்தி அடைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.

    சமீபத்தில் Gallup உலகளாவிய பணியிடத்தின் நிலை 2025 அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை உலகின் பணி கலாச்சாரத்தைப் பற்றி சொல்கிறது.

    தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி அழுத்தத்தை உணர்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

    வாரத்தின் தொடக்கமான திங்கட்கிழமை முதல் ஊழியர்கள் கவலையுடன் இருக்கிறார்கள். மேலும் அலுவலகத்திற்குச் செல்வதைக் குறிப்பிடும்போது அடிக்கடி கோபப்படுகிறார்கள்.

    இந்த விஷயங்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, இந்த முறையில் அலுவலகத்திற்குச் செல்வது, கோபப்படுவது, எரிச்சலடைவது, விடுப்புக்காகக் காத்திருப்பது, அலுவலகத்தில் பணியாளரின் ஈடுபாடு குறைவதற்கு வழிவகுக்கிறது.

    உலகெங்கிலும் உள்ள ஊழியர்கள், குறிப்பாக மேலாளர்கள், அலுவலகத்துடனான ஈடுபாட்டை விரைவாக இழந்து வருவதாக கேலப்பின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 2024 ஆம் ஆண்டில், பணியாளர் ஈடுபாடு 23% ஆக இருந்தது, இப்போது 21% ஆகக் குறைந்துள்ளது.

    ஊழியர் ஈடுபாடு வெறும் இரண்டு சதவீதம் குறைவது உற்பத்தித்திறனில் பெரும் குறைவை ஏற்படுத்தும் என்றும், உலகப் பொருளாதாரம் 438 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பணியாளர் ஈடுபாடு கடந்த ஆண்டு 33 சதவீதமாக இருந்தது. இப்போது அது 30 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவிலும், ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் செல்லும்போது மன அழுத்தத்தையும் கோபத்தையும் உணர்கிறார்கள்.

    கணக்கெடுக்கப்பட்ட மக்களில் 30% பேர் தினமும் மன அழுத்தத்தை அனுபவிப்பதாகக் கூறினர். இந்திய ஊழியர்களில் 34% பேர் தினமும் வேலைக்குச் செல்லும்போது கோபமாகவும் மன அழுத்தமாகவும் உணர்கிறார்கள், அதேசமயம் சீனாவில் இது 18% மட்டுமே, பின்லாந்தில் 6% ஊழியர்கள் மட்டுமே வேலைக்குச் செல்லும்போது கோபமாகவும் மன அழுத்தமாகவும் உணர்கிறார்கள்.

    இந்திய ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுவதாகவும் கேலப் அறிக்கை கண்டறிந்துள்ளது. இது அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அவர்கள் தற்போது வகிக்கும் பதவியில் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது. 49% இந்தியர்கள் புதிய வேலையைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.  

    • குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
    • பணிச்சுமை இருந்ததாக மேலாளரின் மனைவி தெரிவித்தார்.

    பொதுத்துறை வங்கி மேலாளர் ஒருவர் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (செப்டம்பர் 30) காலை சுமார் 10 மணி அளவில் அந்த நபர், பாலத்தின் தெற்கு பகுதியில் தனது காரை நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து கீழே இறங்கிய நபர் திடீரென பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

    தற்கொலை செய்து கொண்ட நபரின் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவருக்கு மனைவி, ஏழு வயது மகள் மற்றும் மாமியாருடன் பரேலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார் என்று தெரியவந்தது.

    இது குறித்து மூத்த காவல் ஆய்வாளர் ரோஹித் கோட் கூறும் போது, "போக்குவரத்துத் துறையிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது, அதன் பிறகு அந்த நபரைக் கண்டுபிடிக்க குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன."

    "வாகனத்தின் பதிவு எண்ணை ஆர்டிஓவுக்கு அனுப்பியுள்ளோம், அவர் உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன் எங்களுக்கு உதவினார். சக்ரவர்த்தி தனது தொலைபேசி மற்றும் கார் சாவியுடன் கடலில் குதித்ததால், எங்களால் அவரை அணுக முடியவில்லை, அதைத் தொடர்ந்து பரேலில் உள்ள அவரது முகவரிக்கு ஒரு குழுவை அனுப்பினோம்."

    "நாங்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்தோம், விசாரணையின் போது, அவர் பணி அழுத்தத்தில் இருப்பதாக சக்ரவர்த்தியின் மனைவி எங்களிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.

    *தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது!!

    *தற்கொலை தடுப்பு சார்ந்த உதவிக்கு தயங்காமல் 044 2464 0050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!!

    • சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர்
    • வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும்

    ஆபீசில் வேலையின்போது அசதியில் தூங்கிய நபர் வேலையிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் அவருக்கு ரூ. 41.6 லட்சம் நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

    சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். வேலையின்போது தூங்கி கம்பெனியில் நெறிமுறைகளை அவர் மீறியதாக HR டிபார்ட்மென்ட் கூறியுள்ளது.

     

    இதுதொடர்பாக அந்நிறுவனம் அவருக்கு அனுப்பிய நோட்டீஸில், ஜாங், நீங்கள் 2004 இல் ஓபன் கான்டிராக்ட்டில் கையெழுத்துப்போட்டு நிறுவனத்தில் சேர்ந்தீர்கள்.

    வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும். இதன் விளைவாக, தொழிற்சங்கத்தின் ஒப்புதலுடன், நிறுவனம் உங்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளது கூறப்பட்டிருந்ததது.

    ஆனால் தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமற்ற செயல் என கூறி அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூ குய், ஜாங் வேலையிடத்தில் தூங்கியது நிறுவனத்திற்கு எந்த தீங்கு விளைவிக்கவில்லை, ஜாங்கின் அந்த நிறுவனத்துக்கு 20 வருடங்களாக உழைத்துள்ளார்.

    அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே இது நியமற்றது என கூறிய நீதிபதி, ஜாங்கிற்கு 350,000 யுவான் [ரூ. 41.6 லட்சம்] இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார். 

    • ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்
    • இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள்

    ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாகத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது.

     

    நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஊழியர்களைக் கொத்தடிமைகளாக்க நாராயண மூர்த்தி வழி சொல்கிறார் என்று இணையவாசிகளும் ஐடி ஊழியர்களும் புலம்பித் தள்ளினர்.

    இந்நிலையில் தனது 70 மணி நேர ஐடியாவுக்கு நாராயண மூர்த்தி விளக்கம் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவை முதல் இடத்திற்கு உயர்ந்த நமது இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள், அப்படியென்றால் 800 மில்லியன் பேர் இன்னும் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நமக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

     

    அதற்காகத்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார். 

    ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் எனப்படும் ‘கிரியேட்டிவிட்டி’ குறைந்து விடுகிறது.
    பெண்களிடம் அபார ஆற்றல் ஒன்று இருக்கிறது, அது ‘மல்டி டாஸ்க்’ எனப்படும் பன்முகத்திறன். அதனால் அவர் களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும். இது அவர்கள் வீட்டு வேலைகளை பார்ப்பதிலும், அலுவலக வேலைகளை பார்ப்பதிலும் கைகொடுக்கிறது. இது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், இதில் சில அபாயங்களும் அடங்கியிருக்கின்றன.

    பெண்களுக்கு உழைப்பு எவ்வளவு அவசியமோ அதுபோல் ஓய்வும் மிக அவசியம். தங்களால் இயன்ற வேலையை அளவுடன் செய்துவிட்டு மூளைக்கும், உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டியது அவசியம். சரியான ஓய்வு கொடுக்காவிட்டால், நாளடைவில் மனஅழுத்தம் ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்பு களுக்கு வழி வகுக்கும். ஆண்கள் சாதாரண நிலையில் நிதானமாக தங்கள் வேலைகளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் ‘மல்டிடாஸ்கிங்’ எனப்படும் பன் முகப் பணியால், ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் எளிதில் சோர்வடைந்து விடுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து அதிக பணிஅழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது.

    பெண்கள், ஒரு வேலையை நேரத்தோடு செய்து முடிப்பது மட்டும் சாதனையல்ல. அந்த வேலை அவர்களது மனதுக்கோ, உடலுக்கோ அழுத்தம் கொடுக்காத அளவுக்கு செய்து முடிப்பதுதான் அந்த வேலையின் வெற்றி. ஒன்றுக்கு மேற்பட்ட வேலை எல்லோருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்போது ஒவ்வொரு வேலைக்கும் உண்டான நுணுக்கத்தை கையாண்டு திறம்பட அந்த வேலைகளை செய்து முடிக்க கொஞ்சம் பொறுமை தேவை.

    ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களால் தங்கள் வேலைகளை பொறுமையாக செய்ய முடியாது. ஒன்றை செய்துகொண்டிருக்கும் போதே இடையில் அடுத்த வேலையின் நினைவு வந்து பயமுறுத்தி பொறுமையை இழக்கச்செய்யும். அப்போது துரிதமாக அந்த வேலைகளை செய்துமுடிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யும்போது அதில் முழுகவனத்தையும் செலுத்தமுடியும்.

    மல்டி டாஸ்க்கை பயன்படுத்தும்போது கவனம் சிதறும். இது பற்றி பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆய்வு நடந்தது. அதில், ‘ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் பெண்களுக்கு அதிக தவறுகள் நிகழ்ந்துவிடுவதாக’ தெரியவந் திருக்கிறது. காரணம் பெண்களுக்கு தவிர்க்க முடியாத உணர்வுபூர்வமான சில வேலைகளும் உள்ளன. உதாரணமாக ‘பிளே ஸ்கூலில்’ விட்டுவிட்டு வந்த குழந்தையை திரும்ப வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டும். இந்நேரம் குழந்தை அம்மாவை காணாமல் அழுதுகொண்டிருக்கும். வீட்டில் வயதானவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டும்’ என்பன போன்ற சிந்தனைகள் அவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.



    இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான சிந்தனை அவர்களை ஆட்கொள்ளும்போது அதைக் கடந்து அவர்களால் இதர வேலைகளில் முழுகவனம் செலுத்தமுடியாது. இதுதான் பெண்களின் நிலை. இந்த நிலையில், அவர்கள் செய்யும் வேலைகளில் அவர்களை அறியாமலே சில தவறுகள் நடந்துவிடும். அந்த தவறுகளில் சிலவற்றை சரிசெய்வது கடினமான கூடுதல் வேலையாகிவிடும். அதனால் சில பின்விளைவுகளோ, எதிர்விளைவுகளோ உருவாகிவிடும். அப்போது ஏற்படும் மனஉளைச்சல் உடலையும், மனதையும் பாதிக்கும்.

    ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது செயல்வேகம் குறைந்து, குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துமுடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் ஒன்றன்பின் ஒன்றாக பல வேலைகள் தாமதமாகின்றன. பல வேலைகளை ஒன்றாக முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்யும் பெண்களால் எதையுமே நேரத்தோடு செய்து முடிக்க முடிவதில்லை. காலம் கடந்து முடிக்கும் சில வேலைகள் பயனில்லாமல் போய்விடுகிறது. இதுவும் பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

    ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் எனப்படும் ‘கிரியேட்டிவிட்டி’ குறைந்து விடுகிறது. அப்போது தனது அத்தனை திறமைகளையும் ஒருமுகப்படுத்தி அந்த வேலையை எப்படி செய்து முடிப்பது என்று சிந்திப்பதற்கு பதில், அவர்களது மூளை அந்த வேலையை எப்படி எளிதாக செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடும். அப்போது ‘இன்னும் கொஞ்சம் புதுமையாக என்ன செய்யலாம்? முன்பைவிட சிறப்பாக அதை எப்படி செய்யலாம்?’ என்று சிந்தித்து செயல்பட மூளைக்கு அவகாசம் இருக்காது.

    அமைதியான மனநிலையில்தான் மூளை புதுமைகளைப் பற்றி சிந்திக்கும். அவசரத்தில் எந்த புதுமையையும் எந்த பெண்ணாலும் படைக்க முடியாது. மூளை ஒரு இயந்திரத்தைப் போல செயல்பட ஆரம்பித்துவிட்டால், செய்யும் வேலையில் எந்த மாற்றமும் இருக்காது. அச்சுஅசலாக ஒரே மாதிரிதான் அந்த வேலை அமையும். அப்படி எல்லா பெண்களும் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், வேலையில் புதுமை- வித்தியாசம் என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.

    மல்டி டாஸ்க் பணியில் நிரந்தரமாக ஈடுபடும் பெண்களின் மூளை எளிதாக சோர்ந்துவிடும். மூளை சோர்ந்து போகும்போது உற்சாகம் குறையும். ஞாபகமறதியும் தோன்றும். ஒரே நேரத்தில் பல வேலைகளை மூளையில் தேக்கி வைத்துக்கொண்டு செயல்படுவது, பெண்கள் மூளைக்கு தரும் ‘ஓவர்லோடு’ ஆகிவிடுகிறது. ஓவர் லோடு வேலை ஒருபோதும் பெண்களுக்கு நலனாக அமையாது. அதனால் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து முடித்து, உங்கள் மனதையும், உடலையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கு வதைவிட, செய்கிற வேலையை ரசித்து செய்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது. மகிழ்ச்சியான வேலையே மனம் நிறைந்த வேலை.
    ×