search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank manager"

    • மேலாளர், 6 சதவீத வட்டி கிடைக்கும் என அறிவுறுத்தி ஸ்வேதாவை கணக்கு தொடங்க வைத்தார்
    • புது மேலாளர் பதவியேற்றதும் ஸ்வேதாவிற்கு பணம் திருடு போனது தெரிய வந்தது

    கடந்த 2016ல், வெளிநாடு வாழ் இந்தியர்களான ஸ்வேதா சர்மா (Shveta Sharma) என்பவரும் அவர் கணவரும் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளில் இரு தசாப்தங்களுக்கும் மேல் வசித்து விட்டு இந்தியாவிற்கு திரும்பினர்.

    இந்தியாவின் பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) மேலாளர் ஒருவர் அந்த தம்பதியினருக்கு அறிமுகமானார்கள்.

    அந்த மேலாளர், அமெரிக்காவில் அத்தம்பதியினர் ஈட்டிய வருவாயை அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்தால், வட்டி விகிதம் மிக குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவில் 6 சதவீதம் வரை வட்டி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறி அவர் வேலை பார்க்கும் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்ய அறிவுறுத்தினார்.

    ஸ்வேதா பெயரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கணக்கு ஒன்றை அந்த வங்கி மேலாளர், டெல்லியின் பழைய குருக்ராம் பகுதியில் உள்ள தான் வேலை பார்க்கும் ஐசிஐசிஐ வங்கியில் தொடங்க உதவி செய்தார்.

    2019 செப்டம்பர் மாதத்திலிருந்து 2023 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஸ்வேதா இந்த புதிய கணக்கிற்கு அமெரிக்காவிலிருந்து தனது சேமிப்புகளை மாற்றினார்.

    இந்த நிதி பரிமாற்றங்கள் அனைத்திற்கும் மேலாளர் வங்கி ரசீதுகள் வழங்கி மின்னஞ்சல்களையும் அனுப்பி வந்தார். இவை தவிர முறையாக உறையிட்ட கோப்புகளையும் அனுப்பி வந்தார்.

    2024 ஜனவரி மாதம் புது மேலாளர் அந்த வங்கியில் பதவியேற்றார். அவருடன் புதிய வங்கி சேமிப்பு திட்டங்கள் குறித்து பேசும் போது ஸ்வேதாவின் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஸ்வேதா இழந்துள்ள தொகை அசல் மட்டும் ரூ. 15,74,92,140.00 ($1.9 மில்லியன்) என தெரிய வந்துள்ளது. இதற்கான வட்டியுடன் கணக்கிட்டால் இது மேலும் பல லட்சங்கள் அதிகரிக்கும்.

    ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் (autoimmune disorder) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்வேதா, இந்த மோசடியினால் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தனியார் வங்கி நடத்திய ஆய்வில் மோசடி நடந்திருப்பது உண்மை என்றும், ஸ்வேதாவிற்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என்றும் அவரது பணம் மொத்தமும் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "நான் செய்யாத தவறுக்கு பழி வாங்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. எனக்கு உறக்கமே வரவில்லை" என வேதனையுடன் தெரிவித்தார் ஸ்வேதா.

    அந்த வங்கி மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு துறை மற்றும் வங்கி இணைந்து வழக்கை விசாரித்து வருகிறது.

    • 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
    • முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது.

    திருப்பூா்,செப்.26-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பதவிக்கான தோ்வில் வெற்றிபெற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பணிக்கான அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

    இத்தோ்வில் பங்கேற்க 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வரும் செப்டம்பா் 27 -ந் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த தோ்வு முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது. இந்தப்பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும்.இந்தத் தோ்வில் வெற்றி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் மூலமாக இலவச பயிற்சியை வழங்க தட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சியை பெற விரும்பும் மாணவா்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94450-29552, 0421-2971112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
    • கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

    பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.
    • 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருபவர் அணில் குமார்.

    மேற்கு கோதாவரி மாவட்டம் பீமா வரத்தை சேர்ந்த நஜிம், சக்கரபாணி இருவரும் வங்கி மேலாளர் அணில் குமாரை சந்தித்தனர். தாங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ. 1 கோடி தருகிறோம் பதிலுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.90 லட்சம் கொடுத்தால் போதும் என ஆசை வார்த்தை கூறினர்.

    இதையடுத்து அணில் குமார் தனது நண்பர் அணில் என்பவருடன் சேர்ந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு பார்வதிபுரம் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த நஜீம், சக்கரபாணியிடம் ரூ.90 லட்சத்தை கொடுத்தனர். பதிலுக்கு நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.

    பின்னர் வீட்டிற்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது ரூபாய் நோட்டின் மேல் பகுதியில் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளும் அடியில் கள்ள நோட்டுகளும் வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அணில் குமார் பார்வதிபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து நஜீம் சக்கரபாணி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகில் உள்ள மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 63). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதில் காயமடைந்த பெருமாள்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள் சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையரசன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    குமாரபாளையம்:

    பள்ளிபாளையம் அக்ர ஹாரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கி யில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12-ந் தேதி பணி முடிந்து இரவில் தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அதே நேரம், எதிர் திசை யில் சித்தோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கலையரசன்(22) மோட்டார்சைக்கிளில் வந்தார். அவருக்கு முன்னால் ஒரு லாரி வந்தது. லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையர சன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பிரசாந்த், கலையரசன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வங்கி மேலாளர் பலியானார்.
    • இவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளது.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் கிளாட்வே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கிரண்குமார். இவர் அவனியாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று வழக்கம்போல் வீட்டிலிருந்து வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    அவனியாபுரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தார். அவரது மோட்டார் சைக்கிள் கிரண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கிரண்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவர் அவனியாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான கிரண்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாதம் ஆன கைக்குழந்தையும் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

    • ரூ.1.52 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • மூன்று கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார்.

    திருச்சி , ஜூலை.7-

    திருச்சி மாநகரம் தில்லை நகர் பத்தாவது குறுக்கு மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் தனக்கு சொந்தமான கிங் பாரடைஸ் என்ற உணவகத்தை மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.இந்நிலையில் பின் கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் நிறுவனத்தின் பணியாளர் மற்றும் உதவி மேலாளர் லட்சுமி காந்த் ஆகியோர் ராம்குமாரை அணுகி தங்களுடைய வங்கியில் இந்த பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ராம்குமார் தன்னுடைய சகோதரர் அழகுராஜா மற்றும் தன்னுடைய தாய் லலிதா ஆக்கி ஆகியோர் பேரில் மூன்று கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார்.இதில் உதவி மேலாளர் லட்சுமி காந்த் தனியாக ஒரு கணக்கு ராம்குமாருக்கு தெரியாமல் துவங்கி ஒரு கோடியே 52 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை அந்த தனி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதனை அறிந்த ராம்குமார் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் தன்னை உதவி மேலாளர் லட்சுமி காந்த் என்பவர் ஏமாற்றி விட்டதாக கூறி புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அரசு வங்கியில் இரவில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுரை மெயின்ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. நேற்று மாலை வழக்கம்போல் பணி முடித்து ஊழியர்கள் வங்கியை பூட்டி சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென வங்கியின் அலாரம் அலறத் தொடங்கியது. தொடர்ந்து அலாரம் அடிக்கவே அந்தப்பகுதி மக்கள் இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது அலாரம் அடித்துக் கொண்டிருந்தது.

    இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வந்து வங்கியை திறந்து பார்த்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அலாரம் அடித்தபடியே இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஊழியர்கள் அலாரத்தை நிறுத்தினர்.

    இந்த சம்பவம் நேற்று இரவு திருமங்கலம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கானத்தூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    கானத்தூரை அடுத்த உத்தண்டி காட்டகிரண்ட் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவர் தரமணியில் உள்ளவர் உலக வங்கி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 90 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

    இது குறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.

    எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர். #tamilnews
    நிலம் வாங்கித்தருவதாக கூறி வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடி மோசடி செய்தததாக அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் பாஸ்கர் (வயது 56). மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், அங்கு தொழில் செய்து வருகிறார்.

    இவர் மதுரை காளவாசலில் உள்ள அரசு வங்கியில் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரையில் நிலம் வாங்க முடிவு செய்து செய்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளர் நல்லபெருமாள் என்பவர் ராஜமாணிக்கம் பாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு மானகிரி பகுதியில் நிலம் விலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதை நம்பி அவர் முன் பணமாக ரூ.20 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து நிலம் வாங்குவதற்கும், பத்திரப்பதிவுக்கும் செலவுகள் ஏற்படும். எனவே கையெழுத்திட்ட பணம் நிரப்பாத காசோலையை அனுப்புமாறு நல்ல பெருமாள் கூறியுள்ளார். இதை நம்பி அவரும் தான் கையெழுத்திட்ட காசோலையை அனுப்பினார்.

    இந்த நிலையில் ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் நிலம் வாங்குவதற்காக தான் கொடுத்த காசோலை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்தை நல்ல பெருமாள் எடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி பராசக்தி, பாலாஜி வெங்கடேசன் ஆகியோர் இருந்துள்ளனர்.

    மேலும் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை வாங்கியதாகவும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். எனவே அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நல்லபெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களது வீட்டின் கீழ் பகுதியில் வேலைக்கார பெண் ராணி என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி வீட்டில் இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் வேலைக்கார பெண் ராணி ஆகியோரை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களது வாயில் துணியை திணித்து விட்டு பீரோவில் இருந்த 206 பவுன் நகையை அள்ளி தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முகமூடி கும்பலை பிடிக்க துணை கமி‌ஷனர் முத்துசாமி தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளையர்களின் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    யோகசேரன் தனது மனைவியின் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். மதுரையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நகைகளை வங்கியில் இருந்து எடுத்து வந்திருந்தார்.

    நேற்று காலைதான் மதுரையில் இருந்து திரும்பி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்நேற்று மதியம் வீட்டுக்கு வந்த முகப்பேரில் வசிக்கும் அவர்களது மகள் செந்தமிழ் காவியா தனது 175 பவுன் நகைகளையும் வங்கி லாக்கரில் வைக்கும்படி பெற்றோரிடம் கொடுத்து சென்று உள்ளார். அந்த நகையுடன் சேர்த்து மொத்தம் 206 பவுன் நகையை கொள்ளையர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    இந்த கொள்ளையில் வேலைக்கார பெண் ராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முகமூடி கொள்ளை கும்பல் கதவை தட்டிய போது ராணிதான் கதவை திறந்து விட்டு உள்ளார். அவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிடாதது ஏன்? யோகசேரன் வீட்டில் நகை இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து ராணியை தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திட்டமிட்டு முகமூடி கும்பலை வரவழைத்து நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ராணியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். முகமூடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணியின் செல்போனை கைப்பற்றி கொள்ளை நடந்த நாளில் அவர் யார்? யாருடன் பேசினார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர். #PallavaramRobbery 
    ×