search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்கி மேலாளரிடம் போலி 2,000 ரூபாய் நோட்டு வழங்கி ரூ.90 லட்சம் மோசடி- 2 பேர் கைது
    X

    வங்கி மேலாளரிடம் போலி 2,000 ரூபாய் நோட்டு வழங்கி ரூ.90 லட்சம் மோசடி- 2 பேர் கைது

    • நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.
    • 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருபவர் அணில் குமார்.

    மேற்கு கோதாவரி மாவட்டம் பீமா வரத்தை சேர்ந்த நஜிம், சக்கரபாணி இருவரும் வங்கி மேலாளர் அணில் குமாரை சந்தித்தனர். தாங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ. 1 கோடி தருகிறோம் பதிலுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.90 லட்சம் கொடுத்தால் போதும் என ஆசை வார்த்தை கூறினர்.

    இதையடுத்து அணில் குமார் தனது நண்பர் அணில் என்பவருடன் சேர்ந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு பார்வதிபுரம் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த நஜீம், சக்கரபாணியிடம் ரூ.90 லட்சத்தை கொடுத்தனர். பதிலுக்கு நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.

    பின்னர் வீட்டிற்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது ரூபாய் நோட்டின் மேல் பகுதியில் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளும் அடியில் கள்ள நோட்டுகளும் வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அணில் குமார் பார்வதிபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து நஜீம் சக்கரபாணி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×