search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் அருகே 2 பைக்குகள் மோதல்வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயம்
    X

    குமாரபாளையம் அருகே 2 பைக்குகள் மோதல்வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயம்

    • பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையரசன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    குமாரபாளையம்:

    பள்ளிபாளையம் அக்ர ஹாரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கி யில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12-ந் தேதி பணி முடிந்து இரவில் தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அதே நேரம், எதிர் திசை யில் சித்தோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கலையரசன்(22) மோட்டார்சைக்கிளில் வந்தார். அவருக்கு முன்னால் ஒரு லாரி வந்தது. லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையர சன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பிரசாந்த், கலையரசன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×