search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poultry"

    • பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
    • வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

     பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான மோகனூர், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.500

    வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

    இந்த வாரம் வார சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் அசைவ பிரியர்கள் வரும் தீபாவளி அன்று சமைப்பதற்கு முன்கூட்டியே வாங்கிச் சென்றதால் நாட்டுக்கோழி அனைத்தும் விற்பனையானது.

    நாட்டுக்கோழி விலை உயர்வால் நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
    • தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்த நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கி செல்வர்.

    விலை சரிந்தது

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக் கோழி 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனால் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் அதிகளவில் அசைவம் உணவு சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுக் கோழிகள் விலை சரிவடைந்தது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை விரும்புவதில்லை .அதனால் நேற்று நடந்த வார சந்தையில் நாட்டுக்கோழிகள் ் விலை சரிந்துள்ளது. தற்போது கோழி விலை குறைவாக உள்ளதால் தற்போது கோழிகளை உயிருடன் வாங்கி வைத்துக்கொண்டு புரட்டாசி முடிந்ததும் பயன்படுத்த அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர், என்றனர்.

    • நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
    • தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35).

    இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து இடுப்புலிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எர்ணாபுரம் சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப னைக்காக கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழி களை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர்.

    இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனை யானது. ஆனால், நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கு விற்பனை யானது. விலை உயர்ந்ததால், நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 2023–-24-ம் நிதி ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு, சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஒசூர் அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 2023–-24-ம் நிதி ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு, சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதில், மாவட்டம் ஒன்றுக்கு, 3-6 பயனாளிகள் அல்லது குறைந்த பட்சம், 3 பயனாளிகளை தேர்வு செய்து, இத்திட்டதை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதி உள்ள பய னாளிகள், தங்கள் குடியி ருப்புக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்த கத்திற்கு சென்று விண்ணப் பம் அளித்து பயன்பெறலாம். விண்ணப்பம் அளிக்க கடைசிநாள், ஜூன் 12-ந் தேதி ஆகும். பயனாளி திட்ட செலவினத்தில், 50 சதவீதம் அல்லது உச்சபட்ச வரையறை களை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 625-க்கு எஞ்சி யுள்ள திட்ட செலவினத்தை, சொந்த செலவு அல்லது வங்கிக் கடன் மூலம் திரட்ட வேண்டும்.

    நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவை யான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகர ணங்கள் வாங்கும் செலவு, 4 மாத தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகிய வற்றுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் மாநில அரசால் மானியமாக வழங்கப்படும்.

    ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஒசூர் அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளிகளில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில், 30 சதவீதம் பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். மேலும் வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை தவிர்க்கின்றனர்.

    ஒரு சில வியாபாரிகள், பண்ணைக் கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
    • இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் புரட்டாசி மாதம், மற்றும் மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர் மோகனூர் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிசந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    சந்தைக்கு வீட்டில் வளர்க்கும் சிறுவிடை, பெருவிடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    நாட்டுக் கோழிகளுக்கு இப் பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்வர். தரமான நாட்டு கோழிகள் கடந்த மாதங்களில் கிலோ ஒன்று ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தை முன்னிட்டும், மகாளய அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு குறைந்த அளவிலே விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் நாட்டுகோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. வாத்துக்கோழி ஒன்று ரூ.280 முதல் 300 வரையிலும் விற்பனையானது. இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மீன் சந்தையில், ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளும் வெளிச்சோடி காணப்பட்டது.

    தெரு நாய்கள் கடித்து குதறிய 20 கோழிகளுடன் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாயி தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். தற்போது நிலத்தடி நீர் இல்லாததால் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்து குதறியது.மேலும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அந்த நாய்கள் கடித்தது. 

    இது குறித்து அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள்  ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் இது வரைக்கும்பொது மக்களை கடித்து குதறிய நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இன்று காலை சுமார் 4 மணியளவில் ஆனந்த் வளர்த்துள்ள கோழிகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் 20 கோழிகள் இறந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த் இன்று காலை ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு இறந்த கோழிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கர்நாடகா அரசு போக்குவரத்து பஸ்சில் கோழிக்கு அரை கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    பெங்களூர்:

    பஸ்களில் பயணிகளுடன் கோழிகள், ஆடுகள், நாய்கள் போன்றவை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக மாநில அரசு பஸ்களில் அவை பயணம் செய்ய அனுமதிப்பதுடன் அவற்றுக்கு டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் சிகாபலாபுரா மாவட்டத்தில் உள்ள பெட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயி ஆன இவர் கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு காலை 7.10 மணியளவில் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது தன்னுடன் 2 கோழிகளை எடுத்து சென்றார். அவற்றை தலா 150 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பஸ்சில் அவரிடம் கண்டக்டர் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.

    அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை கொடுத்தார். கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு செல்ல ரூ.26 டிக்கெட் கட்டணம். எனவே கண்டக்டர் மீதம் ரூ.24 தருவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் 2 ரூபாய் மட்டுமே வழங்கினார்.

    இதனால் ஒன்றும் புரியாத அவர் இது குறித்து கண்டக்டரிடம் கேட்டார். அதற்கு அவர் தலா அரை டிக்கெட் வீதம் ரூ.24 வசூலித்து இருப்பதாக கூறினார். அவரது பதில் புரியாத விவசாயி ஸ்ரீனிவாஸ் நான் மட்டும்தானே பயணம் செய்கிறேன்.

    என்னுடன் குழந்தைகள் யாரும் பயணம் செய்யவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், கோழிகளுக்கு தலா அரை டிக்கெட் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாஸ் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் 6 முதல் 12 வயது வரை பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக் கெட்கட்டணம் வசூலிக்கப்படும்.

    அவர்கள் 23 முதல் 30 கிலோ எடை இருப்பார்கள். ஆனால் கோழி தலா 2½ கிலோ எடை மட்டுமே உள்ளது. அவற்றை நான் இருக்கையில் அமர வைக்கவில்லை. அப்படியிருக்க 30 நிமிட நேர பயண தூரத்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? என ஆதங்கப்பட்டார்.

    ஆனால் கர்நாடக அரசு பஸ் நிர்வாகம் கோழி, நாய், ஆடு போன்ற வீட்டு வளர்ப்பு பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவல் கர்நாடக அரசு பஸ் இணைய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதில் முயல்கள், நாய்கள், பூனைகள், பறவைகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து பஸ்களில் எடுத்து வரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தலா அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அது குறித்து கவுரி பிதானூர் அரசு பஸ் டெப்போ மேலாளர் ஏ.யூ. ‌ஷரிப்பீடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் போக்குவரத்து கழக சட்டப்படிதான் விவசாயி ஸ்ரீனிவாசிடம் கோழிகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
    ×