என் மலர்
நீங்கள் தேடியது "beef"
மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசன்கவுடா பட்டில் யட்னால் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
விஜய்புரா:
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.
கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloods2018
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.
கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloods2018
சர்ச்சை கருத்துக்களால் தன்னை பிரபல படுத்த முயலும் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா, தற்போது மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் உண்ட நேரு பண்டிதரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். #GyanDevAhuja #BJP
ஜெய்ப்பூர்:
சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அஹுஜா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சியும், பன்றியின் இறைச்சியும் உண்டதால் அவர் பண்டிதர் அல்ல என தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டும் வருகிறது.
முன்னதாக, பசு காவலர்கள் என்ற பேரில் நடத்தப்பட்ட கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவாக, பசுவை கடத்துவதும், கொலை செய்வதற்குமான தண்டனையை அவர்கள் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தவர் கியான் தேவ் அஹுஜா என்பது குறிப்பிடத்தக்கது. #GyanDevAhuja #BJP
சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அஹுஜா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சியும், பன்றியின் இறைச்சியும் உண்டதால் அவர் பண்டிதர் அல்ல என தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டும் வருகிறது.
முன்னதாக, பசு காவலர்கள் என்ற பேரில் நடத்தப்பட்ட கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவாக, பசுவை கடத்துவதும், கொலை செய்வதற்குமான தண்டனையை அவர்கள் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தவர் கியான் தேவ் அஹுஜா என்பது குறிப்பிடத்தக்கது. #GyanDevAhuja #BJP