28 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை- சென்னையில் பரபரப்பு

காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று.ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
28 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை- சென்னையில் பரபரப்பு
Published on

சென்னையில் துறைமுகத்தில், எருமை மாட்டுக் கறி என கூறி, 28 மெட்ரிக் டன் காளை மாட்டுக் கறியை ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததை தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதியை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று அளித்திருந்தது.

சந்தேகத்தின்பேரில், இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதைதொடர்ந்து, தவறான தகவலை கூறி, ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக, டெல்லியை சேர்ந்த யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது சுங்கவரி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாளர் முகமது காலித் ஆலம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com