என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிக் கடன்"

    • கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தது.
    • 555 குடும்பங்களைச் சேர்ந்த 1,620 கடன்களை அரசே செலுத்தும்

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, உடமைகளை இழந்த 555 பேரின் வங்கி கடன் தொகை 18,75,69,037.90 ரூபாயை கேரள அரசே ஏற்றுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்த நிலையில், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வங்கிகளுக்கு செலுத்தப்பட உள்ளன. அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    "நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிகளின் கீழ் இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு மாநில அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தது.

    எனினும், மத்திய அரசு இந்த விதியைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை நீதிமன்றம் 'மனிதாபிமானமற்றது' என்று குறிப்பிட்டதாக அமைச்சர் கூறினார்.

    மேலும் இப்போது, கேரள அரசு, ரூ.18,75,69,037.90 மதிப்புள்ள கடன்களின் பொறுப்பை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 555 கடன் வாங்கியவர்களின் முழு கடனையும் அரசே செலுத்தும். இந்தக் கடனுக்கான நிதி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்படும்." என தெரிவித்தார். 

    முன்னதாக, மாநில அரசின் கீழ் இயங்கும் கேரள வங்கி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர்.
    • அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார்.

    வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று வரும் அழைப்பை நம்பி தினமும் பலர் ஏமாறுகின்றனர். ஆனால் சத்தீஸ்கரில் விவசாயிக்கு கடன் தருகிறேன் என கூறி வங்கி மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில் வங்கி மேனேஜர், விவசாயியிடம் ரூ.12 லட்சம் கடன் தருவதாக கூறி விவசாயியிடம் உள்ள மொத்தம் 900 கோழிகளையும் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார் வங்கி மேனேஜர்.

     

    பாதிக்கப்பட்ட விவசாயி ரூப்சந்த் மன்ஹர், மஸ்தூரியில் நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி கடனுக்காக [ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா] வங்கியை அணுகினார். அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். இதை நம்பிய மன்ஹர் பணத்தை ஏற்பாடு செய்து மேனேஜருக்கு கொடுத்தார்.

    ஆனாலும் ஆசை அடங்காத மேனேஜர், கோழிக் கறி மீது தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமை மன்ஹரை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மன்ஹர் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.

     

    இருந்தும் வங்கி மேலாளர் கடன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹர் சம்பவத்தின் விவரங்களையும், தான் சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் போலீசிடம் சமர்ப்பித்து புகார் அளித்தார்.

    தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறி, மன்ஹர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×