என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Employees"

    • விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
    • பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் (என்.பி.எஸ்.), ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சமீபத்தில் 'மத்திய சிவில் சர்வீசஸ் (தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்) விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.

    அந்த விதியின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விதிகள், 20 ஆண்டுகள் பணிக்கு பிறகு விருப்ப ஓய்வுபெற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.

    பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவர் ஓய்வு பெறும் நாளில் இருந்து இத்தொகை வழங்கப்படும்.

    தனிப்பட்ட தொகுப்பில் 60 சதவீதத்தை இறுதியாக திரும்பப்பெறுதல், ஒவ்வொரு 6 மாத பணிக்கும் அகவிலைப்படி, ஓய்வு பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல், மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளையும் ஓய்வு பெறும்போது பெறலாம்.

    ஒருவேளை, விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் இறந்து விட்டால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட அவரது கணவர்/மனைவிக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும். இத்தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.

    சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.

    இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.

    ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.

    • இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார்.
    • போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி மேனேஜர் இனி வங்கி அலுவலகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டக்கூடாது என்று உத்தரவு போட்டதும், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

    சமீபத்தில் பொறுப்பேற்ற பீகாரைச் சேர்ந்த மேனேஜர், ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் தடை விதித்தது குறித்து தெரியவந்ததை அடுத்து ஊழியர்கள் இதனை பிரதானமாக கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் குறித்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) தலைவர் கூறுகையில், இங்கே ஒரு சிறிய உணவகம் இயங்குகிறது, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது. இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார். இந்த வங்கி அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. உணவு என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில், ஒவ்வொருவருக்கும் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை. இது எங்கள் போராட்ட வடிவம் மட்டுமே என்றார்.

    இந்தப் போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடை விற்பனையை கட்டுப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக, இதேபோன்ற பல மாட்டிறைச்சி போராட்டங்களை மாநிலம் கண்டது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது.
    • தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகம் முழுக்கவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏ.ஐ. வரவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இந்த ஆண்டு அதன் உலகம் முழுவதிலும் இருந்து பணி புரியும் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு சந்தையில் ரூ .28,148 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது.

    நேற்று மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது. தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.

    • அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர்.
    • இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.

    வெளிநாட்டு Client தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை நடனமாடி வரவேற்ற இந்திய ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

    அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர். இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ஊழியர்கள் அலுவலகத்தில் நடனமாடி வெளிநாட்டு Client -ஐ வரவேற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? நடனமாடாத ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா? என்று நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த மோசமான நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
    • நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

    முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.

    • ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.
    • தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பட்டது.

    இதற்கு மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:

    ஊழியர்களின் ஓய்வு காரணமாக ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தக் கொள்கையும் இல்லை.

    அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.

    தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.

    மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறித்த விஷயம் மாநிலப் பட்டியலில் வருவதால், அத்தகைய தரவு எதுவும் அரசாங்கத்தில் மையமாகப் பராமரிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

    • தமிழகம் முழுவதும் சுமார் 25 தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விபத்து நேரத்தில் துரிதமாக செயல்படும் போது எங்களுக்கு இறப்பு நேர்ந்தால் எங்கள் குடும்பத்திற்கு நிதிஉதவி கிடைப்பதில்லை.

    நெல்லை:

    தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தனியார் ஆம்புலன்ஸ்

    தமிழகம் முழுவதும் சுமார் 25 தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றோம். முன்கள பணியாளர்களான நாங்கள் இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம்.

    ஆனால் எங்களுக்கு விபத்து காப்பீடு, நலவாரியம் உள்ளிட்டவைகள் இல்லை. விபத்து நேரத்தில் துரிதமாக செயல்படும் போது எங்களுக்கு இறப்பு நேர்ந்தால் எங்கள் குடும்பத்திற்கு நிதிஉதவி கிடைப்பதில்லை.

    மேலும் எங்கள் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு தனிநல வாரியம், அரசு காப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நடவடிக்கை வேண்டும்

    பாளை தியாகராஜ நகர் 14-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெசி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் செல்லப்பா இறந்துவிட்டார். எனது மகள் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இதனால் நான் மட்டும் தனியாக வசித்து வந்தேன்.

    இந்நிலையில் எனது உறவினர் ஒருவரின் மகன் என்னை கவனித்துக் கொள்வதாக சொல்லி என்னுடன் தங்கியிருந்தார். அவர் சிறிது நாட்களுக்குப் பின்னர் என்னை ஏமாற்றி என்னிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகள், என்னுடைய மோட்டார் சைக்கிள் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தற்போது என்னை கவனிக்க மறுத்து விட்டார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த எனது சொத்துக்களை மீட்டு தர வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சில விதிமீறல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த சில வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் பஸ் இயக்கப்படும் போது லைெசன்ஸ் பெற்ற ஒரு பணியாளர் மட்டுமே பஸ்களை நகர்த்த வேண்டும். வேறு ஒருவர் இயக்க கூடாது. பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஓய்வறைகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மதுஅருந்திய நிலையில் பணிக்கு வருபவர் குறித்து பாதுகாவலர் கண்காணிக்க வேண்டும். பஸ்சில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், வெடி பொருட்களை ஏற்ற எந்த நேரத்திலும் அனுமதிக்க கூடாது. பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து கிளை மண்டல மேலாளர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    • இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
    • எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

    எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
    • தூய்மை பணியாளர்கள் மற்றும் பலரை பாராட்டி கவுரவித்தார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம், உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு பேசியதாவது,

    முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

    அந்த வகையில் உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து கலெக்டர் தூய்மை பாரத் இயக்கம் திட்டத்தின் கீழ் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பர் இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கிராம சபை மூலம் பாராட்டி கவுரவித்தார்.

    இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நமச்சிவாயம், உதவி இயக்குனர் (வேளாண்மை துறை) சுதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய குழு தலைவர் செல்வம் சவுந்தர்ராஜன், ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணன், குமரவடிவேல், ஊராட்சி செயலர் மருதாசலமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.
    • சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை சார்பாக தஞ்சை ஆற்றுப்பாலத்தில் ஒட்டி உள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    அதேபோல் தஞ்சை மேம்பாலம், ரயிலடியில் உள்ள கீழ்பாலம், மேரிஸ் கார்னரில் உள்ள மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.

    மேலும் இதே போல் சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி, மாநகராட்சி துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    ×