search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Contribution"

    • தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கான நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்கப்படும் என மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
    • வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை புது ஜெயில் ரோட்டில் கரிமேடு பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் மதுரை மாநகருக்குள் அதிகாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் அங்கிருந்த கட்டடங்கள் சிதிலமடையத் தொடங்கின. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாகவும் கரிமேடு மீன் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, மலர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநகருக்குள் லோடு வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த பழைய கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து நகரின் முக்கிய பகுதியில் மத்திய மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 20 ஆயிரம் சதுர அடி காலி இடம் உள்ளது.

    கடந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்த காலி இடம் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து பேசிய 58-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயராமன் அந்த இடத்தை பொதுமக்கள் நலனுக்கு பயன்படுத்துவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த மேயர் இந்திராணி அந்த இடத்தில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தனியார் நிறுவன பங்களிப்புடன் பழைய கரிமேடு மார்க்கெட் காலி இடத்தின் ஒரு பகுதியில் அறிவியல் மையம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த மையத்தில் மாணவர்கள் அறிவியல் பயன்பாடுகளை செய்முறையில் கற்று தெரிந்து கொள்ள உதவும் நவீன உபகரணங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ரோபாட்டிக் தொழில்நுட்ம் ஆகியவற்றுக்கு தனித்தனி ஆய்வகங்கள், நேரடி செய்முறை சாதனங்கள் ஆகியவை அமைக்கப்படும் பார்வையிடுவது, அங்கு உள்ள சாதனங்களை பயன்படுத்துவதன் வாயிலாக நேரடியாக அறிவியல் கூறுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும் நூலகம், கருத்தரங்கம், வாசிப்பறை, நவீன கற்றுணர் வகுப்பறை களும் அமைக்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த மையம் இருக்கும் என்றார்.

    கோவிட் தொற்று காலத்தில் கரிமேடு மீன் மார்க்கெட்டை அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்ய முதலில் திட்டமிடப்

    பட்டிருந்த தாகவும், ஆனால் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் நகருக்குள் அதிகாலையில் லோடு வாகனங்களின் போக்குவரத்து ஓரளவு குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    திருப்பூர்:

    தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரி கே.ஜி.முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, புத்தகம் வாங்க உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித்தொகையை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
    • எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

    எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.
    • தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.

    தஞ்சாவூர் :

    தஞ்சாவூர் தமிழ் பல்கலை க்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் தமிழறிஞருமான சுப்புரெட்டியாா் 100 கல்வி அறக்கட்டளை சாா்பாக 2021 ஆம் ஆண்டுக்கான திறனாய்வுச் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது.

    தமிழ் மொழி, இலக்கியம், தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.

    2022 ஆம் ஆண்டுக்கான விருது 2020 - 21 ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்த ஆய்வுகளைச் செய்தோா், உரிய நூல்கள், தன் விவரக்குறிப்புடன் விண்ணப்பிக்கலாம்.

    தகுதி உடையோரைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.

    விருதுக்குத் தனியொரு நூலோ, ஒட்டுமொத்தப் பங்களிப்போ கவனத்தில் கொள்ளப்படும்.

    விண்ண ப்பங்கள், பரிந்துரைகள் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் ந. சுப்புரெட்டியாா் - திறனாய்வுச் செம்மல் விருது, பதிவாளா் (பொறுப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவையில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே முதல்-அமைச்சர் ரங்கசாமி தான்.
    • ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்ற செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    பட்ஜெட் மீதான விவாதத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவையில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே முதல்-அமைச்சர் ரங்கசாமி தான். அந்த சாதனையை இனிமேல் யாரும் சமன் செய்ய முடியுமா? என்பது கேள்விக் குறிதான். அதற்காக எனது பாராட்டுக்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்ற செயல்படுகிறார். மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. அவரது நோக்கம் மிகப் பெரியது. அதற்கு தகுந்தார்போல் அவருடைய கூட்டணி கட்சி இல்லை. சபாநாயகரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்கிறார்கள்.

    ஆனால் முதல்-அமைச்சரின் கோரிக்கையான ரூ.2000 கோடி கூடுதல் தொகை, அமைச்சர் லட்சுமி நாராயணன் கேட்ட இழப்பீடு தொகை ஆகியவற்றை வாங்கி கொடுத்து, முதல்-அமைச்சருக்கு உதவிகரமாக இருக்கலாம். ஆனால் இருவரும் மாநிலத்தை கைவிட்டு விட்டார்கள்.

    ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.73,562 கடன் சுமை ஏற்றி இருக்கீறீர்கள். வரியில்லா பட்ஜெட் என்று சொல்லி மின்சார வரி, வீட்டு வரி, சொத்து வரி என பல்வேறு வரிகளைப் போட உள்ளதற்கு முன்னோட்டமா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். பட்ஜெட்டில் வெறும் 7.37 சதவீதம் நிதி மட்டுமே மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது மத்திய அரசின் ஓரவஞ்சனை.

    10 அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் போடாமல் இருப்பது நியாயமா? தாக்கல் செய்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

    இது வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. இதில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. புதுவையில் கவிஞர் பாரதிதாசனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் பெரிய அளவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டுள்ளது.
    • பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு காவல்துறையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக முதல் முதலாக இரண்டாம் நிலை காவலராக 1993-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ஒரே ஆண்டில் அதாவது ஜூன் 9 ,16 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் வெவ்வேறு மாவட்டங்களில் சுமார் 3500 காவலர்கள் பயிற்சி பெற்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த 2019-ம் ஆண்டு வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டது.

    இந்த வாட்ஸ் அப் குழு மூலம் காக்கும் கரங்கள் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை இறந்த காவலர்களுக்கு 10 பங்களிப்பு பகிர்ந்து அளித்து அதில் மறைந்த மற்றும் பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை மாவட்டத்தில் மறைந்த தஞ்சை நகர போக்குவரத்து புலன் விசாரணை பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 6000 வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    மறைந்த முருகேசன் மனைவி தனரேகா, மகன்கள் ஜெகன், ஆதித்யா ஆகியோரிடம் அந்த நிதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 1993-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×