search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Company"

    • பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்காக வந்து உள்ளனர்.

    அதில் 450-க்கும் மேற் பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

    நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ். வின் பாஸ்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிலை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மேலும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து விமான உதிரி பாகங்கள், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரானிக்ஸ், வேளாண் உணவு, பொறியியல் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அமர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இன்று 2-ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்துள்ளனர்.

    இதற்காக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மின் வாகனம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், ஜவுளி வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், விண்வெளி தொழில் நுட்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

    இதில் 20 நிறுவனங்கள் தமிழக அரசால் முதலீட்டு உதவி செய்யப்பட்டதாகும். மேலும் 10 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவையாகும். இதை முதலீட்டாளர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.

    முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விளக்கங்களை கூறினார்கள். இதற்கான அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் முன்னிலையில் இன்றும் தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். அப்போது அவரது முன்னிலையில் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது எத்தனை லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன என்ற தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • மணிவண்ணனுக்கு தனது புகை படத்தை முகநூலில் அனுப்பினார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே பண்ட சோழ நல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    மேலும் இவர் வாத்திய குழுவும் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் குமார் தனது பிறந்த நாளை யொட்டி கல் மண்டபத்தை சேர்ந்த தனது நண்பர் மணிவண்ணனுக்கு தனது புகை படத்தை முகநூலில் அனுப்பினார்.

    அந்த புகை படத்தை பண்ட சோழ நல்லூரை சேர்ந்த ஆதித்தியன்  என்பவர் தவறாக சித்தரித்து மணிவண்ணனுக்கு திருப்பி அனுப்பினார்.

    இதனையறிந்த அஜித் குமார் செல்போன் மூலம் ஆதித்தியனிடம் கேட்ட போது உன்னையும், உனது தம்பியையும் இன்று இரவுக்குள் கொலை செய்து விடுவேன் என்று ஆதித்தி யன் மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அன்று நள்ளிரவு ஆதித்தியன் தனது தந்தை ஏழுமலை, சகோதரி அம்சவள்ளி ஆகியோருடன் அஜித் குமார் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அஜித்குமாரையும், அவரது தம்பி பிரதாப்பையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

    மேலும் தடுக்க முயன்ற அஜித்குமாரின் தாயாரையும் அவர்கள் தாக்கியதோடு 3 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அஜித்குமார் அவரது சகோதரர் பிரதாப் மற்றும் இவர்களது தாய் ஆகிய 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து அஜித்குமார் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
    • இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

    இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • புத்தக விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இந்திய தண்டனை சட்டம் உள்பட பொது அறிவு நூல்களும் நிறைய விற்பனையாகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் கடந்த 14 ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து இந்த விழா நாளையுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது. இதில், முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    இது தவிர, உணவு அரங்கங்களும், பண்பாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் காலையில் இலக்கிய அரங்கமும், மாலையில் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை - சிந்தனை அரங்கமும் நடைபெறுகின்றன. இதனால், கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன.

    நாள்தோறும் சுமார் 11 ஆயிரம் போ் வந்து செல்கின்றனா். குறிப்பாக, மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து தினமும் சுமாா் 8 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பொதுமக்கள் சுமாா் 3 ஆயிரம் பேரும் வருகின்றனா். இதைவிட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 9 நாள்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் போ் வந்து சென்றுள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

    நாளையுடன் புத்தகத் திருவிழா முடிவடைய உள்ளதால் வருகை தந்த தந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்கும் .

    இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு பெரும்பான்மையாக மாணவ, மாணவிகளே வருகின்றனா். பாடப் புத்தகங்கள், கையேடுகள் மட்டுமல்லாமல், திருக்கு, பாரதியாா், பாரதிதாசன் கவிதைகள், தலைவா்கள் பற்றிய நூல்கள், படக்கதைகளுடன் கூடிய நூல்களை வாங்கிச் செல்கின்றனா். கல்லூரி மாணவா்களில் 50 சதவீத அளவில் போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள், நீட் தோ்வு நூல்கள், சாரண இயக்க நூல்கள் போன்றவற்றை வாங்குகின்றனா். பிற இலக்கிய நூல்கள், நாவல்களை வாங்கும் மாணவா்களும் கணிசமான அளவில் இருக்கின்றனா்.

    இலக்கிய ஆா்வலா்கள், புத்தக வாசிப்பு பழக்கம் உள்ளவா்கள் போன்றோா் வரலாற்று, சமூக நாவல்கள், ஐம்பெரும் காப்பியகள், கதைகள், மொழிபெயா்ப்பு நூல்களை அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். தவிர, இந்திய தண்டனை சட்டம் உள்பட பொது அறிவு நூல்களும் நிறைய விற்பனையாகின்றன.

    மாணவா்கள் வருகை அதிகமாக இருப்பதன் மூலம் புத்தக விற்பனையும் நன்றாக உள்ளது. இதன் மூலம் வாசிப்பு பழக்கம் மேம்பட்டு வருவது தெரிய வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புத்தக விற்பனை கூடுதலாக இருப்பதாக பபாசி செயலா் முருகன் தெரிவித்துள்ளார்.

    • பாலித்தீன் நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பேராலி ரோட்டில் தனியார் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மார்க்கெட்டிங் மேலாளராக கலைசெல்வன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈரோட்டை சேர்ந்த நடராஜன் வாசுதேவன் என்ற வியாபாரி அறிமுகமானார்.

    இதைத் தொடர்ந்து பல தவணைகளில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 351 மதிப்புக்கு நடராஜன் வாசுதேவன், கலைச்செல்வன் மூலமாக பாலித்தீன் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கினார். இதற்கான தொகை செலுத்துமாறு கலை ச்செல்வன் அவரிடம் கேட்ட போது, 15 நாட்களுக்குள் தொகையை முழுவதுமாக கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் விருதுநகருக்கு வந்த நடராஜன் வாசுதேவன், ரூ.16லட்சம் மதிப்புக்கு 2 காசோலைகளை கலைச்செல்வனிடம் கொடுத்தார். பின்னர் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.

    இதையடுத்து கலைச்செல்வன் ஈரோட்டுக்கு சென்று, நடராஜன் வாசுதேவனிடம் தொகையை ரொக்கமாக தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணம் கேட்டு நேரில் வந்து சந்திக்க கூடாது என்று கூறி, நடராஜன் வாசுதேவன் கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலை யத்தில் கலைச்செ ல்வன் புகார் செய்தார். அதன்பேரில் நடரா ஜன் வாசுதேவன் மீது போலீசார் வழக்கு ப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவரது மனைவி பிரேமா. பிரேமா வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 20.7.22 முதல் 24.07.22 வரை மன்னார்குடி பாலகிருஷ்ண நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

    இதற்கான செலவு ரூ.19,494-ஐ வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

    விண்ணப்பித்தும் காப்பீட்டுத்தொகை கொடுக்காததன் காரணமாக, ராஜேந்திரன் சென்னையில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது, புகார்தாரரின் மனைவி பிரேமாவுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 19,494-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

    புகார்தாரருக்கு எதிர்தரப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.

    இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்துக்குள் மேற்படி தொகைகளை புகார்தாரருக்கு வழங்க வேண்டும்.

    தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மற்றவைகளுக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • பள்ளத்தூர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் பைக் விற்பனை நிறுவனம் திறப்பு விழா நடந்தது.
    • மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி வ.உ.சி ரோடு செல்வி பெட்ரோல் பங்க் வளாகத்தில் பள்ளத்தூர் மோட்டார்ஸ் எல்.எல்.பி. எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தொடக்க விழா நடந்தது. நிர்வாகிகளான செல்வி குரூப் ஆப் கம்பெனி மாணிக்கம், விசாலம் சிட்பண்ட் இயக்குநர் அரு.உமாபதி வரவேற்றனர்.

    விசாலம் சிட்பண்ட் நிர்வாக இயக்குநா் அரு. விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் பி.எல்.படிக்காசு நிறுவனத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் வாகனத்தை தொழில் அதிபர் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.

    இதில் விசாலம் சிட் பண்ட் இயக்குநர் அரு. மீனாட்சி, தொழில் அதிபர் எம்.எம்.கணேசன், ஓ.பி. ஆர்.ராமையா, சன்னா ராமலிங்கம், எஸ்.கே.எம்.பெரியகருப்பன், கோவை ஒயிட் அண்டு கோ வெள்ளையன், தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, பல் மருத்துவர் பிரபாகரன், பிரபு டெண்டல் இயக்குநர் டாக்டர் பிரபு, வக்கீல் கமல் தயாளன், மூன் ஸ்டார்

    சி.சி.டி. லட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
    • 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அவர் பேசியதாவது:

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த 101-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 2012-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 301 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன .

    342 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ, மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன், கல்லூரி செயலர் கணேசன், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குனர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் சிவா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் திருத்துறைப்பூண்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஞானி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சிக்கந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர். இதில் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 68 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    • நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் பினாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

    சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பைனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரமும், துணிக்கடை களில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிறுவனங்கள் வாரியாக உள்ள புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைக்க வேண்டும்.
    • பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியிடத்தில் பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2013 குறித்து அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவன ங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பயிற்சி நிலைய ங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், தொழி ற்சாலைகள், நிதி நிறுவனங்கள், விற்பனை கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகிய நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் பணிபுரியும் இடங்களில், மகளிர்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்கள் தடுக்கவும், புகார் தெரிவிக்கவும் நிறுவனங்கள் வாரியாக உள்ளக புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைத்திட வேண்டும்.

    பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் பணிபுரியும் அலுவலகம், பிறதுறைகள் , பிற கிளைகள் , பிற பணியிடங்களில் இருந்து நியமிக்கலாம்.

    பெண்கள் சார்ந்த பிரச்ச னைகளை முன்னெடுத்து அவற்றை களை ந்திட விருப்பம் உடையவர் (அல்லது) சமூக பணிகளில் அனுபவம் (அ) சட்ட அறிவு பெற்ற இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமூக பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம் /மகளிர் சங்கங்களை சார்ந்த அல்லது

    பாலியல் வன்கொடு மைகள் குறித்தவிழிப்பு ணர்வுடைய நபர்களில் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். புகார் குழு அமைத்த நிறுவனங்கள் அதன் விவரத்தை வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.203, 3-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த புகார் குழு அமைக்காத நிறுவனத்திற்கு பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.
    • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால்
    வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட
    பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும்உ பயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளில் பயன்படுத்தினால்
    ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×