என் மலர்

    நீங்கள் தேடியது "penalty"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
    • அபராத தொகையை 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராய்ப்பூர் :

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறிவிழுந்த தனது செல்போனை மீட்க ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவுப்பொருள் ஆய்வாளர் அணை நீரை 'காலி' செய்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அதிகாரி ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் அதிகாரி ராஜேசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உரிய அனுமதி பெறாமல் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி 4 ஆயிரத்து 104 கனஅடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்டவிரோத செயலாகும்.

    இதற்காக ஒரு கனஅடி நீருக்கு ரூ.10.50 வீதம் மொத்தமாக ரூ.43 ஆயிரத்து 92-ஐ செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதியின்றி நீரை வெளியேற்றியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.53 ஆயிரத்து 92-ஐ 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயணி அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
    • டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

    2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது.

    இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல்.

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும்.

    அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர்.

    முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாடுகளை பிடித்து நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
    • அபராதம் செலுத்தாவிட்டால் மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் ரத வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி தெரிவதாக பொதுமக்கள் புகார் கூறிவந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இதையடுத்து நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இன்று தூய்மை பணியாளர்கள் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையப்பர் கோவில் முன்பு சுற்றி திரிந்த 3 மாடுகளை பிடித்து நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து இன்று மாலைக்குள் ஒவ்வொரு மாடுகளுக்கும் தலா ரூ.1000 அபராதமாக செலுத்தி பெற்று செல்லுமாறு மாட்டின் உரிமை யாளர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ள தவறினால் மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    மாடு பிடிக்கும் பணியை மேஸ்திரி சிவக்குமார் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், சேக், உதவி மேஸ்திரி கள் அருணாச்சலம், ஆறுமுகம் மற்றும் தூய்மை பணி யாளர்கள் மேற்கொண்டார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகி றார்கள்.
    • வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை களை வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகி றார்கள். இதையொட்டி அவர்கள் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதன்படி, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட்டுடன் இயக்கப்படுகிறதா? என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அபராதம்

    அந்த வகையில் கடந்த மாதத்தில் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி சென்ற வாகனங்க ளுக்கும், விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது, விதிமுறைகளை மீறி இயக்கிய 1,557 வாகனங்களிடம் இருந்து ரூ.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 56 லாரிகள், 20 ஆட்டோக்கள் உள்பட 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளதாக போக்கு வரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லைசென்ஸ் ரத்து

    இதுதவிர, கடந்த மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 31 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலி கமாக ரத்து செய்யப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
    • அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் வசதி மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய மாற்றங்களை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன்படி நுகர்வோர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 7 நாட்களில் புதிய மின் இணைப்பு வழங்கவும், வழங்க தாமதமானால் நுகர்வோர் அபராதம் கோரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது ஒருவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

    இந்த புதிய திருத்தங்களின்படி 48 மணி நேரத்திற்குள் தற்காலிக மின் விநியோகத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் குறைபாடு உள்ள மீட்டர்களை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து ஏழு நாட்களை தாண்டினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரவுள்ளது.

    மேலும் கிரிட் இன்டராக்ட் சோலார் (ஜி.ஐ.எஸ்.எஸ்.) நிறுவ தாமதத்திற்கு ரூ.71 ஆயிரம் மற்றும் குறைகளை கையாள்வதில் தோல்வி அடைந்தால் ரூ.250, நுகர்வோரின் புகார்களுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.250 வரையிலும் நுகர்வோர் அபராதம் கோரலாம்.

    மேலும் பழுதடைந்த மீட்டர்களை ஏழு நாட்களுக்குள் மாற்றாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அபராதம் விதிக்க ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடமையாக இருப்பதால் ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் மின் தடைக்கும் நுகர்வோருக்கு ரூ.50 அபராதம் செலுத்த நேரிடும் என புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை
    • வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார இயக்கம் ஜூன் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பிரச்சார இயக்கத்துக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், நம்ம ஊரு சூப்பரு பிரசார முனைப்பு இயக்கத்தினை அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தி, கிராமங்கள் தோறும் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு, சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றை பொதுமக்களோடு, கிராம துப்புரவு பணியாளர்களை ஒருங்கிணைத்து, அரசு பணியாளர்களும் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.இந்த பணியை அனைத்துதுறை அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியினை (பிளாஸ்டிக் பைகள்) பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    செப்டிக் டேங்க் கழிவுகளை நீரு நிலைகள் மற்றும் பொது இடங்களில் வெளியேற்றும் நிலயைத் தடுக்கும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் மலக்கசடு மேலாண்மை மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.இதை மீறும் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும், என்றார்.இதில் வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.
    • உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது.உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறிவித்த மின் கட்டண உயர்வில் இருந்து 50 சதவீதத்தை அரசு குறைத்தது. மேலும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக வழங்கவும் அறிவிப்பு வெளியானது.

    போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதை தவணை முறையில் செலுத்த அவகாசம் வேண்டும் என விசைத்தறியாளர்கள், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விசைத்தறியாளர் கோரிக்கையை ஏற்று தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    தற்போது பயன்பாட்டில் உள்ளதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் என்ற முறையில் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். விசைத்தறியாளர் நலனை கருத்தில் கொண்டு அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மீண்டும் மின் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது.
    • திருமணி முத்தாற்றில் கழிவு நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர்.

    சேலம், ஏப்.23-

    சேலம் திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்ட லாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது. இந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், நிலத்தடி நீர் மாசு அடைந்து வருவதா கவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, திருமணி முத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகை யில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். திருமணி முத்தாற்றில் கழிவு

    நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர். இதைத்தவிர மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவு நீரை வெளியேற்றும் சாயப் பட்டறையை மூடி யும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் விதிமுறையை மீறி செயல்படும் சாயப்பட்ட றைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவு நீரை வெளியேற்றிய 30க்கும் மேற்பட்ட சாயப்பட்ட றைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு வாட கைக்கு இடம் அளித்தால், அந்த உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அந்த உரிமையாளரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
    • மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை கே.புதூர் கற்பக விநாயகர் காலனியை சேர்ந்தவர் மைதீன் மதார். இவருக்கு சுந்தர்ராஜன்பட்டியில் ஒரு வீடு உள்ளது.

    அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப், முகமது அனிபா ஆகியோர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மூலம் மைதீன் மதார் வீட்டுக்கான மின் இணைப்பு பெற்றதாக தெரிகிறது.

    இது தொடர்பாக மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும், அவருக்கு நிவாரணமாக மின்வாரிய அதிகாரிகள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீர்காழியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
    • விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ கப்புகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் வாசுதேவன் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, களபணி உதவியாளர் சீதாலெட்சுமி, இளநிலை உதவியாளர் நல்லதம்பி மற்றும் பரப்புரை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் சீர்காழி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப்பை விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து கடைகள் மற்றும் குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப்பைகள், டீ கப்புகள் என சுமார் 400 கிலோ நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.

    ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

    மேலும் இதுபோன்று திடீர் அதிரடி ஆய்வு தொடரும் எனவும் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin