என் மலர்
நீங்கள் தேடியது "penalty"
- சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை கனரா வங்கி நீக்கியது
- இன்று (ஜூன் 1) முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது
சேமிப்புப் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை கனரா வங்கி ரத்து செய்தது
இன்று (ஜூன் 1) முதல் இது நடைமுறைக்கு வருவதாக கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கனரா வங்கியின் நகர கிளைகளில் ரூ.2,000, சிறுநகர கிளைகளில் ரூ.1,000 மற்றும் கிராம கிளைகளில் ரூ.500 என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியிருந்தது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க இல்லையெனில் ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன.
- போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வல்லூர் கூட்டு சாலையில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், கடல்நீரை குடிநீராக்கும் திட்ட நிலையம், ஐ.ஓ.சி.எல். நிறுவனம், நிலக்கரி முனையகம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு செல்வதற்காக தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் இந்த சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தும், பல போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து விபத்தினை தடுக்க செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலன் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன், தற்காலிக தடுப்பு சுவர்களை மீஞ்சூர் வல்லூர் சாலையில் பயன்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் சாலையின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். மேலும் கூட்டு சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைகிறது.
- சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
சென்னை :
வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு நிறைவடைகிறது. இந்த கால கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- 1000 வழக்குகள் பதிவு
- 10 லட்சம் வரை அபராதம் வசூல்
திருப்பத்தூர்:
தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க புதிய போக்குவரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றால் ரூ.1000 அபராதம் மது அருந்திவிட்டு வாகன ஓட்டினில் ரூ.10,000 அபராதம் விதிக்கும் சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய போலீஸ் உட்கோட்டங்களில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டியதாகவும், அதிவேகமாக வாகன ஓட்டியது என சுமார் 1000 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்
- போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
அரியலூர்
அரியலூர் தேரடி அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு புதிய அபராதம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடை–பெற்றது.
நிகழ்ச்சியில் போக்கு–வரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது
போக்குவரத்து விதி மீறல் புதிய அபராதம் விதிப்பது குறித்து அரசு அறிவித்துள்ளது, அரசின் உத்தரவை அமுல்படுத்துவது காவல்துறையின் கடமை–யாகும், போலீசார் வாகன தணிக்கையின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், முதல் முறை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், மறுமுறை மீறினால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடம் இருக்கி–ன்றது.
ஆவணம் இன்றி சென்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதமும், வாகனம் வேகமாக ஓட்டி–னால் ஐந்தாயிரமும், மறுமுறை ஓட்டினால் பத்தாயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தி–னால் ஆயிரமும்மறுமுறை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் அபராதம் விதிக்க–ப்படும் காவல்துறை–யின் மூலம் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென போக்கு–வரத்துதுறை போலீசார் எச்சரித்து–ள்ளனர்.
- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.18.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- மின் திருட்டு தொடர்பாக தகவல் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மதுரை
மதுரை மண்டல அம லாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.அப்போது நெல்லை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட குருவிகுளம், திருவேங்கடம், தெற்கு அப்பர்குளம், மறுகால்குறிச்சி, களக்காடு, மீனவன்குளம், திருக்குறுங்குடி, ராஜாபுதூர் ஆகிய பகுதிகளில் 16 இடங்களில் மின் திருட்டு கண்டறியப் பட்டது. எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப் பட்ட வாடிக்கையாளர் களிடம் 16 லட்சத்து 92 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது. இதுதவிர வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 26 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை.
- புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இ ன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை, சிவக்குமார் ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பன்னீர்செ ல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தனர்.
மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- திருச்சி ரோட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.
- இந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு விற்பனையை பெருக்குவதற்காக பொருட்கள் வாங்குவோருக்கு குலுக்கல் பரிசு திட்டத்தை அறிவித்தது.
நாமக்கல்:
நாமக்கல், திருச்சி ரோட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு விற்பனையை பெருக்குவதற்காக பொருட்கள் வாங்குவோருக்கு குலுக்கல் பரிசு திட்டத்தை அறிவித்தது. அதன்படி ரூ.2,000, ரூ.1,500 மற்றும் ரூ.1000-க்கு பொருட்கள் வாங்கினால் பரிசு குலுக்களில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள், ஏ.சி, வாஷிங் மெஷின் மற்றும் வெள்ளி காசு வெல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
அக்கடை வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 2015, ஆகஸ்ட் 3-ந் தேதி ரூ.1808-க்கு பொருட்கள் வாங்கினார். அதற்கான ரசீதும், கூப்பனும் பெற்றார். கூப்பனின் ஒரு பகுதியை அங்குள்ள பெட்டியில் போடுமாறு சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கூறினர்.
இந்நிலையில், பரிசுகள் கிடைக்கும் என்ற பேராசையை மக்களுக்கு தூண்டி, தன் நிறுவனத்தின் விற்பனையை பெருக்குவதே இதன் நோக்கம் எனவும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படியும் தமிழ்நாடு பரிசு திட்டங்கள் தடை சட்டத்தின் படியும் இது நேர்மையற்ற வணிக முறையாகும் என்று கூறி, அந்த வாடிக்கையாளர் தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் மூலம் 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம் சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் நிறுவனம் நுகர்வோர் நலநிதிக்கு ரூ.5000, வழக்கு செலவாக ரூ.23,000 என மொத்தம் ரூ. 28,000-ஐ 2 மாத காலத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்தவும் உத்தரவிட்டது.
- சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
- 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது.
அவினாசி, நவ.23-
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள 18 வார்டுகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தினசரி டன் கணக்கில் குப்பை சேருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 52 தள்ளுவண்டிகளில் துப்புரவு பணியாளர்கள் தினசரி குப்பையை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே வீடுகள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒருவாரத்திற்கு வீடுவீடாக சென்று குப்பையை தரம்பிரிக்காதவர்கள் யார் என்று ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனர். பெரிய வார்டுகள், வியாபார நிறுவனங்களில் அதிக அளவில் குப்பை சேருகிறது. பொதுமக்கள் தாங்களாகவே தரம் பிரித்து வழங்கினால் தூய்மை பணியாளர்களுக்கு வேலை பழு குறைவதுடன் அனைத்து பகுதிகளிலும் விரைவில் குப்பை சேகரிக்க ஏதுவாக இருக்கும்.
குப்பையில்லா பேரூராட்சியாக மாற்றும் நோக்குடன் குப்பைகள் தேங்காமல் தினசரி சேகரிப்பதற்காக 15-வது நிதிக்குழு மானியம் மூலம் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் ஒலிபெருக்கி வசதியுடன்4 ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 2-பகுதிகளாக பிரித்து குப்பைகள் சேகரிக்கப்படும். அதற்கு முன்பாக 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது. மேலும் தரம்பிரிக்காமல் குப்பையை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம் என்றார்.
- சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது.
- புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலூர்:
விருத்தாச்சலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் வனிதா என்பவருக்கும் பண்ருட்டி தாலுக்கா மேலிருப்பு கிராமம் சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் 2 வருடம் வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது மனைவி வனிதாவினால் தனக்கும் தனது குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுக்கும் பிரச்சனை அடிக்கடி வருவதை தவிர்க்க வேண்டி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மனுதாரர் வனிதா தனது கணவரை காணவில்லை என காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 23.01.2019 ல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல் போனவரை கண்டுபிடித்து வனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வனிதா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தி்ல் தனது கணவர் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டுதுன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே வனிதாவின் கணவர் ஜெகவீரபா ண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளி வந்தவர் நிபந்தனை ஜாமினின் பேரில் 30 நாட்கள் தினந்தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளார். தற்போது 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாடு (கத்தார்) சென்று விட்டார்.
இந்த தகவல் அவரது மனைவி வனிதாவிற்கு நன்குதெரியும் ஆனால் அவர் வெளிநாடு சென்றது பிடிக்காமல் அவரக்கு மன உளைச்சல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் .மேற்படி வனிதா 23.11.2022 ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 ல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என கொடுத்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது கணவர் உயிருடன் உள்ளாரா அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டாரா என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது சம்மந்தமாக காடாம்புலியூர் காவல் துறையினர் மேலிருப்பு கிராமம் சென்று ஜெகவீரபாண்டியனின் உறவினர்களிடம் விசாரணை செய்ததில் அவர் வெளிநாடு கத்தாரில் உள்ளதாகவும், அவருடன் வீடியோ காலில் பேசி அவருக்கும் அவரது மனைவிக்குமான பிரச்சனைக்கான காரணம் அறிந்து அவர் பேசிய வீடியோ வாக்குமூல பதிவினை பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவினை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்த உடன் நீதிமன்றம் சார்பில் மேற்படி காணாமல் போன ஜெகவீரபாண்டியனிடம் வீடியோ காலில் பேசி உண்மை தன்மையை வெளிப்படுத்தினார். இதனை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு மேற்படி மனுதாரர் மீது நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாலும் காவலர்களை அலைக்க ழித்ததாலும் உண்மைக்கு புறம்பான மனுவினை சுய லாபத்திற்க்காக பயன்படுத்தியதற்க்காக ரூ. 50,ஆயிரம்அபராதம் 4 வார காலத்திற்க்குள் கட்ட வேண்டும். அப்படி தவறு்ம் பட்சத்தில் சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் இந்த மனு வினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால், சப்.இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், திருநள்ளாறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வெளி மாநில பதிவு எண் கொண்ட கிரேன் வாகனம் ஒன்று வேகமாக வந்தது. உடனே அதை நிறுத்தி டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், மத்திய பிரதேசம், கந்த்வாணி மாவட்டம், ஜூவான் வெல் பெக்ல்யா மகன் ரமேஷ் முஜ்ஹஸ்டா சிங் (வயது39) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர். பின்னர், அவரை, காரைக்கால் கேர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நீதிபதி லிசி, மது போதையில் கிரேன் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.