என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
- 1000 வழக்குகள் பதிவு
- 10 லட்சம் வரை அபராதம் வசூல்
திருப்பத்தூர்:
தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க புதிய போக்குவரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றால் ரூ.1000 அபராதம் மது அருந்திவிட்டு வாகன ஓட்டினில் ரூ.10,000 அபராதம் விதிக்கும் சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய போலீஸ் உட்கோட்டங்களில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டியதாகவும், அதிவேகமாக வாகன ஓட்டியது என சுமார் 1000 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Next Story






