search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity theft"

    • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ23.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துாத்துக்குடி மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஒட்டநத்தம், ஒட்டப்பிடாரம், கங்கை கொண்டான், தாழையூத்து, வெள்ளாரம், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி, துாத்துக்குடி, புதியம்புதூர், முப்புலிவெட்டி, அய்யன் பொம்மையபுரம், விளாத்தி குளம் மற்றும் இருவேலி ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 17 இடங்களில் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.22 லட்சத்து 18 ஆயிரத்து 576 அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை கோட்டத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வர்களிடம் ஒட்டு மொத்தமாக ரூ.23லட்சத்து 83ஆயிரத்து 576 அபராதம் பெறப்பட்டது. மதுரை கோட்டத்தில் மின்திருட்டு தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் மதுரை கோட்ட மின்வாரிய அமலாக்க பிரிவு செயல் பொறியாளர் தொலைபேசி எண் 94430 37508-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

    • மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மின் திருட்டு கண்டறியப்பட்டது.

    மதுரை

    மதுரை மின்வாரிய மண்டலத்துக்குட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது நிலக்கோட்டை, என்.ஆண்டிபட்டி, கன்னிவாடி, ஒட்டன் சத்திரம், க.கீரனுார், சித்தை யன்கோட்டை, ஜவ்வாது பட்டி, கே.எஸ்.பட்டி, தர்மத்துப்பட்டி, ஆத்தூர், கலிமந்தையம், வேலாயு தபுரம், கொசவ பட்டி, மார்க்கம்பட்டி இடையகோட்டை, சின்னக் களையம் புத்தூர், சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.9லட்சத்து 2ஆயிரத்து 96 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர்களிடம் 55ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக மின் திருட்டில் ஈடுபட்டதாக 9 லட்சத்து 57 ஆயிரத்து 96 ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

    மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் 94430-37508 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    • மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்ட லத்துக்குட்பட்ட திண்டு க்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் தேனிமின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது குள்ளபுரம், வைகை டேம், பாளையம், கோட்டூர், கோழையனூர், வீரபாண்டி, காமாட்சிபுரம், வேப்பம்பட்டி, உத்தமபாளையம், அங்கூர்பாளையம், கம்பம், எச்.என்.பட்டி, ஆண்டி ப்பட்டி, மார்கேயன் கோட்டை மற்றும் பெரிய குளம் உள்பட 18 இடங்களில் மின்திருட்டு கண்டறி யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கை யாளர்களிடம் ரூ. 24 லட்சத்து 57 ஆயிரத்து 325 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கை யாளர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ. 26 லட்சத்து 7 ஆயிரத்து 325 அபராதம் பெறப்பட்டுள்ளது.

    மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94430-37508 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று

    மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.18.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • மின் திருட்டு தொடர்பாக தகவல் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மதுரை

    மதுரை மண்டல அம லாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.அப்போது நெல்லை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட குருவிகுளம், திருவேங்கடம், தெற்கு அப்பர்குளம், மறுகால்குறிச்சி, களக்காடு, மீனவன்குளம், திருக்குறுங்குடி, ராஜாபுதூர் ஆகிய பகுதிகளில் 16 இடங்களில் மின் திருட்டு கண்டறியப் பட்டது. எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப் பட்ட வாடிக்கையாளர் களிடம் 16 லட்சத்து 92 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது. இதுதவிர வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 26 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.11.51 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
    • மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மேலக்கரந்தை, முத்துலாபுரம், தூத்துக்குடி டவுன், திருச்செந்தூர், குரும்பூர், கோவில்பட்டி, நாகலாபுரம், புதூர், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், மணப்பாடு ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொ ண்டு, ரூ.71 ஆயிரம் அபராதம் செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.11 லட்சத்து 51 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.4.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வா ரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    "மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்கு டியை சேர்ந்த மின்வாரிய அமலா க்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது நெல்லை மின் பகிர்மான வட்ட த்துக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, கடையம், குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 8 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

    எனவே மின் வாரி யத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் 4 லட்சத்து ரூ. 43 ஆயிரத்து 318 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இது தவிர வாடிக்கையா ளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ. 27 ஆயிரம் அபரா தம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக ரூ. 4 லட்சத்து 70 ஆயிரத்து 318 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டு உள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் மின்சாரம் திருட்டு; ரூ.32.19 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படை யில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அம லாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மீமிசல், கோட்டைப்பட்டினம், கொடிக்குளம், மணல்மேல்குடி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 9 இடங்களில் மின் திருட்டு கண்டறி யப்பட்டது.

    எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.29 லட்சத்து 55 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் மின்சாரம் திருடிய நுகர்வோர்களுக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக நுகர்வோர்களிடம் மொத்தம் ரூ.32 லட்சத்து 19 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன் எண்: 94430-37508 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×