search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samajwadi party"

    • நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
    • ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களின் பெயர்கள் துறவிகள் (Saints) மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களால் மறுபெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

    அதன்படி, காசிம்பூர் ஹால்ட் ரெயில் நிலையம் இனி ஜெய்ஸ் சிட்டி ரெயில் நிலையம் என்றும், நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.

    இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து, ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு பதிலாக ரெயில் நிலையங்களின் நிலையை மேம்படுத்துவதிலும், ரெயில் விபத்துகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, அமேதியின் கலாச்சார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அமேதியின் முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து இந்த ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • சமஜ்வாதி கட்சியின் தலைவர் மொயித் கான் கைது.
    • இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

     


    சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் சமஜ்வாதி கட்சியின் தலைவரான மொயித் கானை ஜூலை 30 ஆம் தேதி கைது செய்தனர்.

    சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்தார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "தவறுகள் நடக்கும் போது, நீதியை பெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களிடனம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் யார் தவறு செய்தார்கள் என்று கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது."

    "யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். டிஎன்ஏ பரிசோதனையில் முடிவுகள் தலைகீழாக மாறினால், தவறு செய்த அரசு அதிகாரிகள் யாரும் தப்பிக்கக்கூடாது. இதுவே நீதிக்கான கோரிக்கை," என்று தெரிவித்தார்.

    அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அமித் மால்வியா, "குற்றம்சாட்டப்பட்டவர் முஸ்லீம் என்பதாலும், பாதிக்கப்பட்ட சிறுமி நிஷாத் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர்களை காப்பாற்ற இப்படி துடிக்கின்றனர்." 

    "சமாஜ்வாடி கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சுரண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்தமுறை அநீதி எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படாது. நிச்சயம் தண்டனை வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.

     


    அகிலேஷ் யாதவ் கருத்துக்கு பதிலளித்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி, "அயோத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு மிக பொருத்தமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி கோரிக்கைக்கு நாம் என்ன செய்வது?"

    "அகிலேஷ் யாதவ் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை இதுபோன்ற டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதை சமாஜ்வாடி கட்சி தெளிவுப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்தார்.

    தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த பிரியண்க் கனோங்கோவும் அகிலேஷ் யாதவ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பான பதிவில் அவர், "மைனர் சிறுமி கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள், குற்றச்சாட்டு உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூறப்படுகிறது. ஆனால், நீங்கள் அவற்றை பாதுகாக்கின்றீர்கள். இந்த டிஎன்ஏ தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு "ஆண்கள் தவறு செய்வார்கள்," என்று கூறியது," என குறிப்பிட்டுள்ளார்.

    • மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
    • சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி சமஜ்வாதி கட்சியின் தலைவரான மொயித் கானை ஜூலை 30 ஆம் தேதி கைது செய்தனர்.

    முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்வதாக கூறினர்.

    இந்த நிலையில், பணத்தை வாங்கிக் கொண்டு இந்த வழக்கை முடித்துக் கொள்ள தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து உள்ளூர் தலைவரான ரஷித் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரஷித் பத்ரஸா நகர் பஞ்சாயத்திற்கான சமாஜ்வாதி கட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர், சிறுமியின் தாயார் வழக்கில் சமரசம் எட்ட தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார்.

    • பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
    • சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    பின்னர், சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். பேக்கரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையால் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் புல்டோர் மூலம் பேக்கரியை இடித்தது.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்த அமைச்சரும், நிஷாத் கட்சி தலைவருமான சஞ்சய் நிஷாத், செய்தியாளர்கள் முன் மனம் உடைந்து அழுதார். அப்போது அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சி மொயீத் கானை கட்சியில் இருந்து நீக்கவோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எதுவும் கூறுவோ இல்லை. குற்றவாளியைப் பாதுகாக்கிறது என்று கூறினார்.

    • சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.
    • பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன்பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரி கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,

    * சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.

    * பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோல்.

    * செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக்கணிப்புகளை முறியடித்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக அருகில் வந்துள்ளது.

    முக்கியமாக இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கைகள் ஓங்கியுள்ளது. மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளை இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி கைப்பற்றியுள்ளது. 6 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    உத்தர பிரதேசத்தில் பாஜகவின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக வந்துள்ள இந்த தேர்தல் முடிவுகளுக்கு முக்கிய காரணாமாக அகிலேஷ் யாதவ் உள்ளார். முக்கியமாக இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் அவரது குடும்பத்திலிருந்து 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கன்னோஜ் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்றுள்ளார்.

    மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அகிலேஷ் யாதவின் உறவினர்களான அக்ஷய் யாதவ் அயோத்தி ராமர் கோவில் உள்ள பிரோசாபாத் தொகுதியிலும், தர்மேந்திர யாதவ் ஆசாம்கர் தொகுதியிலும், ஆதித்யா யாதவ் பதவுன் தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

    இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், " இந்திய கூட்டணியின் வெற்றி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தலித்-பகுஜன் மக்களின் நம்பிக்கையின் வெற்றியாகும்.

    ஒடுக்கப்பட்டோர், உயர் சாதியினரிடையே பிற்படுத்தப்பட்டோர், சமத்துவம், மரியாதை, சுயமரியாதை, கண்ணியமான வாழ்க்கை, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான உரிமையை வழங்கும் அரசியலமைப்பைக் காப்பாற்ற தோளோடு தோள் நின்ற மக்களின் வெற்றி இது" என்று தெரிவித்துள்ளார்.  

    • பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
    • ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பொதுமக்கள் உறுதி செய்துள்ளனர். நல்ல நோக்கங்கள், கொள்கைகள் காரணமாக 3-வது முறையாக பா.ஜ.க-தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது. அத்தகைய பிரதமர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா? தனது பதவியை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கும் ஒரு பிரதமரால் நாட்டை நடத்த முடியுமா?

    எனவே வலிமையான நாட்டை உருவாக்க வலிமையான பிரதமரை கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வகுப்புவாத குணம் கொண்டவர்கள். மிகவும் சாதிவெறி உள்ளவர்கள் என்பதை அறிவார்கள். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    உத்தர பிரதேச மக்கள் அரசியலை புரிந்து கொண்டுள்ளனர். எந்த அறிவாளியும் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் கட்சியில் முதலீடு செய்யமாட்டார்.

    சட்டம்-ஒழுங்கும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றுக்கொன்று எதிரானது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அரசு வாக்கு வங்கியின் ஒரு பகுதியாக மாபியாக்களை எதிர்நோக்கியிருந்தது.

    ஆனால் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமாஜ்வாடி கட்சிக்காக தங்கள் வாக்குகளை யாரும் வீணாக்க விரும்பவில்லை.

    சமாஜ்வாடி, காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அர்ப்பணித்துள்ளன. நான் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து உழைக்கிறேன் என தெரிவித்தார்.

    • சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது.
    • 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    மோடிக்கு 400-க்கும் அதிகமான இடங்களை வழங்கி, மீண்டும் மத்தியில் ஆட்சியை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள் அவர்கள் மனதில் உருவாக்கிவிட்டனர். உத்தர பிரதேசத்தில் நாங்கள் 80 இடங்களிலும் வெற்றி பெறுவோம். இது என்னுடைய நம்பிக்கை.

    சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது. அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. மக்கள் தற்போது சமாஜ்வாடி கட்சியை சமாப்த் (samapt- முடிந்தது) கட்சி (முடிந்து போன கட்சி) என சொல்கிறா்ரகள். 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என நம்புகிறேன்.
    • சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் சமாஜ்வாதி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

    மக்கள் இடங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியபோது காங்கிரசுக்கு இவ்வளவு சீட் ஏன் கொடுத்தீர்கள் என்றார்கள்?

    கூட்டணியில் வரவேண்டும் என்பதனால் காங்கிரசுக்கு 17 இடங்கள் கொடுத்துள்ளேன்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன்.

    அவர்கள் (பா.ஜ.க.) 400ல் வெற்றி பெறப் போவதில்லை. தோற்கப் போகிறார்கள்.

    அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என கனவு காண்பவர்களை 400 இடங்களில் தோற்கடிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.
    • 3-வது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி 8 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

    மூன்றாவது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
    • பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

    அதன்படி, யஷ்வீர் சிங் (பிஜ்னோர்), மனோஜ் குமார் (நாகினா), பானு பிரதாப் சிங் (மீரட்), பிஜேந்திர சிங் (அலிகார்), ஜஸ்வீர் வால்மீகி (ஹத்ராஸ்) மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×