என் மலர்
நீங்கள் தேடியது "திருட்டு"
- தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தா
- அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தசரதன் வெளியில் சென்று விட்டு மீண்டும் தங்கிய அறையில் வந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
- கடந்த 1 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காப்பர் ஒயர்கள் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையம்,
அன்னூர் அருகே காட்டம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது.
இதில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனிடையே ஊராட்சிக்குட்பட்ட வரதயம்பாளையம் செங்காடு, காட்டம்பட்டி குளம், ரோஜா நகர், முதலிபாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில், கடத்தூர் ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடம், கிணறு ஆகிய பகுதிகளில் மின் மோட்டாகளில் இருந்து காப்பர் வயர்களை மர்ம நபர்கள் வெட்டி திருடி எடுத்து சென்றனர்.
இதனை பார்த்த அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பி னர் லட்சுமிகாந்த் மற்றும் அன்னூர் போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அன்னூர் போலீசார் இப்பகுதியி லுள்ள சி.சி.டி.வி கண்கா ணிப்பு காமிராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 1 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காப்பர் ஒயர்கள் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கட்டுமானப் பொருட்கள் இருப்பு வைக்க இரும்பு கூரை தகடுகளால் அறை அமைக்கப்பட்டது.
- மின் மயான நிர்வாகம் சார்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் மின் மயானம் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் சிமெண்ட், மற்றும் கட்டுமானப் பொருட்கள் இருப்பு வைக்க இரும்பு கூரை தகடுகளால் அறை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக கட்டடப் பணிகள் நடைபெறாமல் இருந்ததால், இருப்பு அறையில் பொருட்கள் எதுவும் இல்லை.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் திட்டம் போட்டு இருப்பு அறையை சுற்றி மாட்டப்பட்டிருந்த இரும்பு கூரை தகடுகளை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து மின் மயான நிர்வாகம் சார்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பு அறையின் இரும்பு கூரை தகடுகளை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேனை எடுத்துச் சென்று வாடகைக்கு ஓட்டி விட்டு மீண்டும் வேன் ஸ்டேன்டிலேயே நிறுத்திவிடுவார்.
- யாருக்கும வேன் குறித்த தகவல் தெரியவில்லை.
கடலூர்டு
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 43). இவர் சொந்த மான வேன் வைத்துள்ளார். இந்த வேனை சிதம்பரம் மேம்பாலம் அருகில் உள்ள வேன் ஸ்டேன்டில் நிறுத்தி வைப்பார். சவாரி வரும் போது, வேனை எடுத்துச் சென்று வாடகைக்கு ஓட்டி விட்டு மீண்டும் வேன் ஸ்டேன்டிலேயே நிறுத்திவிடு வார். அதன்படி, நேற்று இரவு வேனை ஸ்டான்டில் நிறுத்தினார். அனைத்து கதவுகளை மூடி பூட்டு போட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை வேன் ஸ்டேன்டிற்கு வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு, தனது வேன் குறித்து ஸ்டேன்டில் இருந்த டிரைவர்கள் மற்றும் வேன் உரிமையாளர்களிடம் விசாரித்தார். யாருக்கும வேன் குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்து வேன் உரிமையாளர் பிரபு சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் கதவை உடைத்து, கள்ளச் சாவி போட்டு திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- துறையூரில் தி.மு.க.பிரமுகரிடம் பட்டப்பகலில் ரூ.2 லட்சம் அபேஸ் செய்யப்பட்டு உள்ளது
- வங்கியிலிருந்து எடுத்து வந்த போது மர்ம நபர்கள் கைவரிசை
துறையூர்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது45). இவர் உப்பிலி யபுரம் தெற்கு தி.மு.க. ஒன்றிய துணைச் செயலா ளராக இருந்து வருகிறார். துறையூர் - திருச்சி சாலையில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கி லிருந்து ரூ. 2 லட்சம் பண த்தை எடுத்து, இரு சக்கர வாகனத்தின் பின்பகுதியில் வைத்துக்கொண்டு சென்று ள்ளார். நீதிமன்றம் எதிரே உள்ள கடையின் முன்பு இரு சக் கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்து ள்ளார். அப்பொழுது அடை யாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியை கள்ள சாவி மூலம் திறந்து, பணத்தை எடுத்துள்ளார். இதனைப் பார்த்த சுப்பிர மணியன் திருடன், திருடன் என சத்தம் போட்டு உள் ளார். இதனை அறிந்த மர்ம நபர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தன்னு டைய கூட்டாளியின் இருச க்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அப்பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் வங்கியில் இருந்து எடுத்துவரப்பட்ட பணத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.
- இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் அறைக்குள் சென்று பார்த்தனர்.
- விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள விளையாட்டு உபகர ணங்கள் வைக்கப்பட்ட அறையின் பூட்டு உடைக் கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் அறைக்குள் சென்று பார்த்தனர். அறை யில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது.
இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இரவு நேர காவலர் பணி யிடம் காலியாக உள்ளது. இதனால் இப்பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். இதனைத் தொடர்ந்தே பள்ளியில் உள்ள விளை யாட்டு உபகரங்கள் வைக்கும் அறையில் நேற்று இரவு திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். பள்ளியில் திருடிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வங்கி மேலாளர் உள்பட 2 வீடுகளில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
- அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சிந்தாமணி விநாயகர் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் சண்முக குமார் (வயது36). இவர் அப்பலம் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் பின்னர் இரவு வீடு திரும்பினார்.
இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். அதிகாலை எழுந்து பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.
இது குறித்து சண்முக குமார் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணி விநாயகர் தெரு கண்ணன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (30). இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்குச்சென்று திரும்பியவர் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் காலை எழுந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 இடங்களிலும் நடந்த பைக் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்கு பின் திருட்டு ஆசாமிகளை அடையாளம் தெரிந்தது. அதை தொடர்ந்து சிந்தா மணி கண்ணன் காலனியை சேர்ந்த பெரிய கருப்பு மகன் கருப்புசாமி என்ற குதிரை வண்டி (37), திருப்பதி மகன் பாலமுருகன் (26) என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணிபுரியும் அலுவலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
- சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் செங்கழுநீரோடை பகுதியில் தான் பணிபுரியும் அலுவலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரையும் கூட்டாளி ஒருவனையும் மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவர்களிடம் சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரியலூர் மாவட்டம் செந்துறை பேன்சி கடையில் திருட்டு நடைபெற்று உள்ளது
- செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறை பஸ் நிலையத்தின் எதிரே பெண்ணாடம் அடுத்த கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மெய்கண்டன் என்பவர் பேன்சி ஸ்டோர் மற்றும் குளிர்பான கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் உள்ளே புகுந்த 4 மர்ம ஆசாமிகள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து மெய்கண்டன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- தவுட்டுப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருட்டு நடந்துள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் 3-வது தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி( 60). இவரது மனைவி மீனாட்சி (வயது 53) . இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6பவுன் தங்க நகை மற்றும் பணம் 10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மீனாட்சி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சற்று தூரம் ஓடி சென்று நின்று கொண்டது. பட்டப் பகலில் வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வேலாயுதம்பாளையத்தில் தொடர்ந்து கொள்ளையடித்துச் செல்வதும் ,சாலை வழியாக வரும் பெண்களை குறி வைத்து வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளை நடப்பதும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் பைக் திருட்டு நடப்பதும் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.