என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் பி.எஸ்.என்.எல் ஆபீசில் ரூ.24 லட்சம் மதிப்பு கேபிள்கள் திருட்டு
- சேலம் பி.எஸ்.என்.எல் ஆபீசில் ரூ.24 லட்சம் மதிப்பு கேபிள்கள் திருட்டாள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் காந்தி ரோடு பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் துணை பொது மேலாளர் பாஸ்கரன் (வயது 57), அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் இருந்த ரூ.23,88,982 மதிப்புள்ள பழைய மற்றும் புதிய கேபிள்களை, இங்கு காவலாளிகளாக பணியாற்றிய செந்தில்குமார், ஜெயக்குமார், சேட்டு மற்றும் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து திருடியதாக ெதரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






