search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
    X

    கைது செய்யப்பட்ட பாலகணேஷ், நாகராஜ்.

    கோவிலில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

    • கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு.
    • தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் - திருச்சி சாலையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் நதியா, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், தனிப்படை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முதல்நிலை காவலர்கள் புவனேஷ், சிவக்குமார், இரண்டா–ம்நிலை காவலர்கள் வினோத்பாண்டின், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று தனிப்படை போலீஸார் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த 2 கொள்ளையர்களை சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.

    போலீஸார் விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவ பாலகணேஷ் மற்றும் திருச்சி திருவவெறும்பூரை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது.பின்னர் கொள்ளையர்கள் திருடிய கோவில் நகைகள் மற்றும் பணத்தை போலீஸார் மீட்டனர். இது குறித்து வல்லம் போலீஸார் பாலகணேஷ் (வயது 22), நாகராஜ் (வயது 21) இருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பாநாசம் சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.

    Next Story
    ×