search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீரம்பூரில் இரும்பு கம்பிகள், எந்திரம் திருட்டு
    X

    கீரம்பூரில் இரும்பு கம்பிகள், எந்திரம் திருட்டு

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக‌ போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கட்டிட பணியில் ஈடுபட்டு வரும் கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக‌ போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து பொதுப்ப ணித்துறை காண்ட்ராக்டர் மாதேஸ்வரன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×