என் மலர்
நீங்கள் தேடியது "gang"
- 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது
- உரங்களின் சேமிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தகவல்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவை யான மரநாற்றுகள் குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும்.
அங்கக வேளாண்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீலகிரி கூட்டுறவு வணிக சங்கம் மூலம் உரங்களை சிறியளவில் சில்லரை விற்பனை மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு 5 முதல் 10 கிலோ வரையிலான உரங்களை வழங்குமாறு கோரிய விவசாயிகளின் கோரிக்ைக குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும் என்.சி.எம்.எஸ் மூலம் உரங்களிடம் சேமிப்பிடம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.
விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு நர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவபணி கள்) பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கழிவுப் பொருட்களை கொட்ட கூடாது என அறிவுறுத்தல்
- மின்வேலிகளை சீரமைக்கவும், நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தேக்கம் பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மனித வன உயிரின மோதல் குறித்து விழிப்புணர்வு நிகர்ச்சி நடந்தது.
இதற்கு வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்முகாமில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது, கிளி உள்ளிட்ட தடை செய்யப் பட்ட விலங்கினங்களை வளர்ப்பது உள்ளிட்டவை சட்டப்படி குற்றம்.
வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை மேட்டுப்பாளை யம் வனத்துறையினரிடமோ, காவல்துறையினரிடமோ, பஞ்சாயத்து தலைவரிடமோ ஒப்படைக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் வேலிகள் விதியின் படி பழைய மின்வேலிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய மின்வேலி களுக்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
துப்பாக்கி, நாட்டுவெடி, அவுட்டுக்காய், சுருக்கு கம்பி வலை போன்ற வற்றை பயன்படுத்தி வனப்பகுதியில் முயல், பன்றி, மான் போன்ற வனவிலங்குகளை வேட்டை யாடுவது கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் வனத்துறையினர் அல்லது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண் டும். மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கழிவுப் பொருட்களையோ, கழிவுகளையும் கொட்ட கூடாது.
இதனால் வனவி லங்குகள் ஊருக்குள் நுழைந்து மனித - வன உயிரின மோதல் உருவாகும் சூழல் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இடையே கலந்து ஆலோ சிக்கப்பட்டது.
அப்போது பேசிய விவசாயிகள் வனப்பகுதி யில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாத வண்ணம் அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். அதற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.
மின்வேலிகளை சீர மைக்க வேண்டும். மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட்டால் ஏற்படும் இழப்புகளுக்கு தற்போது அரசால் வழங்கப் படும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. எனவே நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வனவி லங்குகள் ஊருக்குள் நுழை யாத வகையில் வனத்து றையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வனத்துறையினர், பொது மக்கள், விவசாயிகள், வன ஆர்வலர்கள், தன்னார்வ லர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- தண்ணீர் பாட்டில் குளிர்ச்சியாக இல்லை எனக்கூறி பணம் தர மறுத்து வாக்குவாதம்
- காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேரிடம் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (வயது 29). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கடையில் இருந்த போது மது போதையில் 3 பேர் பேக்கரிக்கு வந்து சாப்பிட்டனர். பின்னர் தண்ணீர் பாட்டில் கேட்டு உள்ளனர். இதனையடுத்து சரண்குமார் அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அப்போது அந்த 3 பேரும் பிரிட்ஜ் இல்லையா, தண்ணீர் குளிர்ச்சியாகவே இல்லை. நீ எல்லாம் எதற்கு கடை வைத்து நடத்துகிறாய் என கூறி பணம் கொடுக்காமல் அங்கு இருந்து செல்ல முயன்றனர்.
இதனையடுத்து சரண்குமார் அவர்களிடம் பணத்தை கேட்டார். அதற்கு இவர்கள் மில்டரிக்காரன் கிட்டேயே பணம் கேட்கிறாயா என 3 பேரும் சேர்ந்து சரண்குமாரை தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேக்கரி கடை உரிமையாளரை மீட்டனர்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பேக்கரி கடை உரிமையாளர் சரண்குமாரை தாக்கியது காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.
அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தீவிர ஆலோசனை
- வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்குழு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட அளவில் நடக்கும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
கோவையில் கலைஞர் மகளிர் உரிம தொகைக்காக 3 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு, அங்கு 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 2,80,837 மனுக்கள் தொடர்பாக களஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சி, தோட்டக்கலைத்துறை மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் நேரடியாக களஆய்வு செய்யப்பட்டு உள்ளன.
ேகாவை மாநகராட்சியில் கடந்த 2 நிதியாண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு, எஸ்.எப்.சி, என்.எஸ்.எம்.டி ஆகிய திட்டங்கள் மூலம் ரூ.278.74 கோடி மதிப்பீட்டில் 3743 சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் 942 பணிகள் முடிந்து விட்டன.
உக்கடம் ஆத்துப்பாலம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை மேம்பால நீட்டிப்பு பணிகள் நடக்கிறது.
கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் முதல்கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி செலவில் 11.80 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மதுக்கரை முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, தென்ச ங்கம்பாளையம், கிணத்துக்கடவு, வடசித்தூர், மதுக்கரை, செட்டிபாளையம், எஸ்.எஸ்.குளம், வெள்ளைமடை ஆகிய வட்டார பகுதிகளில் ரூ.1.58 கோடி செலவில் 317 வீடுகள் புனரமைக்கப்பட்டு உள்ளன.
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத் தின்கீழ் கோவை மாவட் டத்தில் ஒட்டுமொத்தமாக 995 அரசு மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் 62, 209 மாணவர்கள் பலன்பெற்று வருகின்றனர். காலை உணவு தரமாகவும், சுவையாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக்அலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோகிலா (பொது), கமலக்கண்ணன் (வளர்ச்சி), வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் துவராகநாத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர் பரப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.செயலாளர் வேலுமணி, துணை தலைவர் ரங்கசாமி, துணை செயலாளர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கனகராஜ் அனைவரையும் வரவேற்றார். இரும்பறை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இங்கு விவசாயம் செய்வதால் வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் என சிலர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளனர். நாங்கள் வன விலங்குக ளுக்கு காவலாளிதானே தவிர தொல்லை கொடுப்பவர்கள் இல்லை என்பதை களத்தில் வந்து பார்த்தால் தெரியும்.
மேலும் இந்த வழக்குகளால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாயம் பாதிக்கப்படுவதுடன் அதனை நம்பியுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் நிலை உருவாகும்.
இப்பகுதியில் விவசாயம் செய்தால் காட்டு யானைகள் ஊருக்குள் வராது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.
- திருட்டு கும்பல் தலைவனை பிடிக்க மதுரைக்கு விரைந்துள்ள போலீசார்
- ஆம்னி வேனில் பின்தொடர்ந்து கைவரிசை
கள்ளக்குறிச்சி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டது. இந்த லாரியை திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த முத்துமணி (வயது 45) என்பவர் ஓட்டிவந்தார். தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி வழியாக வேலூர் செல்லும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பினார்.
அப்போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்ப ட்டிருந்தது. இத்தகவலை டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார். அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கினர். இதில் 45 பெட்டிகளை காணவில்லை. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்தை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்துள்ளனர். எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டி ல்களை கொள்ளையடித்து, வேனில் ஏற்றிச் சென்று அனைவரும் பிரித்துக் கொண்டதாக கூறினார்கள். இதனையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார், மதுபாட்டில்களை திருடும் கும்பல் தலைவன் பொட்ராசு மற்றும் 4 பேரை பிடிக்க மதுரை விரைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை திருடப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
- மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.
காங்கயம்,
நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.
அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.
எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
- நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.
சூலூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).
இவர் தென்னம்பாளையத்தில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் லோகநாதன், அருண், கார்த்திகேயன்.
சம்பவத்தன்று நள்ளிரவு விக்னேஷ் தனது நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
விக்னேஷ், லோகநாதன் ஒரு வாகனத்திலும், அருண் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தனர்.
இவர்கள் தென்னம்பாளையம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓட்டல் அருகே வந்த போது, 3 பேர் கும்பல் நின்று கொண்டிருந்தனர். திடீரென அந்த கும்பல் இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
அப்போது, விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.
அப்போது திடீரென அதில் இருந்த ஒருவர் கார்த்திகேயனின் (25) கையை வெட்டினார். மேலும் மற்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதுடன், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
- பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய விளம்பர பதாகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது விடுமுறை நாளில் மதுபான பாட்டில்கள் போட்டது யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
- 10 பவுன் மதிப்புள்ள 2 தாலி செயின்களை முகமூடி அணிந்து வந்த கும்பல் பறித்து சென்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது மனைவி பாக்யா (33).
இவர்கள் இருவரும் நாச்சியார்கோவிலில் உள்ள உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தென்கரையில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர்.
அப்போது புதுக்குடி என்கிற இடத்தில் 3 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் இந்த தம்பதி யினரை வழிமறித்துள்ளது.
கத்தியை காட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டி பாக்யாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறித்ததுடன் அவரது கணவரிடம் இருந்துசெல்போ னையும் பறித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் வந்த இருசக்கர வாக னத்தையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சிறிது தூரத்தில் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32) பானுமதி 26) என்கிற இருவரும் திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களையும் இந்த முகமூடி கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பானுமதி கழுத்தில் இருந்த தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.
மொத்தம் 10 பவுன் மதிப்புள்ள இரண்டு தாலிச் செயின்களை அடுத்தடுத்து இந்த முகமூடி கும்பல் பறித்து சென்றுள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காட்சிகள் இருள் சூழ்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த நான்கு மாதத்தில் இதே இடத்தில் வழிப்பறி பணத்தை அடித்து பறிப்பது போன்ற ஐந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பகுதியில் இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமிராக்களை பொருத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.