search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surveillance camera"

    • ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
    • இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

    இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்

    • கண்காணிப்பு காமிராக்களை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.
    • அதன்படி, அமுதா நகர் மெயின் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும், திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றை தடுப்பதில் போலீசாருக்கு உதவியாக இருப்பது சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள்.

    இந்த சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் குற்ற சம்ப வங்கள், சமூக விரோதி களின் நடமாட்டங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனவே, கண்காணிப்பு காமிராக்களை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட கணேசன் காலனி 3-வது தெரு சந்திப்பு மற்றும் அமுதா நகர் மெயின் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இயக்கத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் சரவணகுமார், வட்ட செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா, கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    • சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் ஓம்சக்தி நகர் உள்ளது. அறச்சலூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயிக்கு சொந்தமான 7 மாத கன்றுக்குட்டியை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவில் மர்மவிலங்கு ஒன்று இழுத்து சென்றுவிட்டது.

    அந்த பகுதியில் மழைபெய்த மறுநாள் நடந்த இந்த சம்பவத்தின் போது பதிந்த விலங்கின் கால்தடத்தை வைத்து வனத்துறையினர் கன்றுக்குட்டியை இழுத்து சென்ற விலங்கு எந்த வகையை சேர்ந்தது என்பதை தெரிவிக்காமல் உள்ளனர். மேலும் அந்த மர்மவிலங்கை அறிந்து கொள்ள அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களையும் பொருத்திவிட்டு விலங்கை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.

    விலங்கின் நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அறச்சலூர் பகுதியில் அமைந்துள்ள ஊர்களான கிழக்கு தலவுமலை, ஓம்சக்திநகர், சங்கரன்காடு, வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, ஊஞ்சப்பாளையம், பழைய பாளையம், முருங்க தொழுவு, மேற்கு தலவு மலை, கத்தக்கொடிக்காடு, மூலக்கடை, மீனாட்சி புரம், வீரப்பம்பாளையம், ஊசிப்பாளையம், நடுப்பாளையம் மற்றும் மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற விலங்கு எது? என்பது குறித்து வனத்துறையினர் இன்னும் அறிவிக்காத நிலையில் நேற்று அந்த விலங்கை பிடிக்க கூடுதலாக ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளாகியுள்ளனர்.

    அறச்சலூர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரின் தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதாகவும், அந்த புகைப்படத்தில் உள்ள பதிவு தேதிகள் 18 மற்றும் 19 என்றும் அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரமும் பதிவாகியிருந்ததால் மக்கள் வெளியான தகவலால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    இதனால் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் கரும்பு பயிர்களுக்கான நீர்பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் உயிர்பயம் காரணமாக நின்றுபோயுள்ளன.

    இந்நிலையில் அறச்சலூரில் இருந்து கொடுமுடி நோக்கி பிரிந்து செல்லும் கீழ்பவானி கிளை சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.

    இதனை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை தேடி கொண்டுள்ளனர் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து பீதி அறச்சலூரை கடந்து சுற்றுப்புற பகுதிகளையும் ஆட்கொண்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
    • பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தடபெரும்பாக்கம் கிருஷ்ணாபுரம், திருவாயர்பாடி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.

    இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் குற்ற செயல்களும் குறைந்து இருந்தன. இந்நிலையில் இந்த கண்காணிப்பு காமிராக்களில் பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    எனவே கண்காணிப்பு காமிராக்களை சீரமைத்து குற்றச்செயல்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
    • காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் பஜார் வீதி, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள புறக்காவல் நிலையத்தை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களை கமிஷனர் சங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பழுதான கேமராக்களை அகற்றி புதிய கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவேற்காடு மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் மாடுகள் காணப்படுவதால் அதிகமாக விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதால் முதலாவதாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு பின்னர் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ராஜராபர்ட், போக்குவரத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபிதாஸ்,மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் முத்துக்குமார் உடன் இருந்தனர்.

    • வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • சில போலீஸ் நிலையங்கள் வாடகை கட்டிடங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி ஆகிய 4 பிராந்தியத்திலும் சட்டம் ஒழுங்கை போலீஸ் நிலை யங்கள் கட்டுப்படுத்துகிறது. இந்த போலீஸ் நிலையங்க ளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிக, மிக குறைவாக உள்ளது. சில போலீஸ் நிலையங்களில் கட்டணம் செலுத்தாததால் தொலைபேசி நீண்டகாலம் இயங்கவில்லை. சில போலீஸ் நிலையங்கள் வாடகை கட்டிடங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    மக்கள் தொகைக்கேற்ப போலீஸ் நிலையங்கள் கூடுதலாக்கப்படாமல் உள்ளது. பெருகி வரும் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, மக்கள் பாது காப்பு நடவடிக்கை விரைவுபடுத்திட கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைத்திட வேண்டும். அனைத்து போலீஸ் நிலை யங்களிலும் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாது காப்பை உறுதிபடுத்தவும், குற்றச் செயல்களை தடுத்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், எல்லையோர போலீஸ் ரோந்து பணிகளை முடுக்கி விட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 6½ சவரன் தங்க நகை கொள்ளை
    • சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பி மோட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயம்மாள் (வயது 80).

    மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத மர்ம பெண் ஒருவர் மூதாட்டி ஜெயம்மா ளிடம் அரசு முதியவர்க ளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    அதற்கான விண்ணப்பம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வழங்குவதாகவும் கூறினார்.

    நகை அணிந்து வந்தால் உதவி தொகை தரமாட்டார்கள். அதனால் நகையை வீட்டில் வைத்து விட்டு வந்துவிடலாம் என கூறி மூதாட்டியை பைக்கில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மூதாட்டி தான் அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை வீட்டில் கழட்டி வைத்துள்ளார். அதனை அடையாளம் தெரியாத பெண் ஜன்னல் வழியாக நகைகளை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டார்.

    பின்னர் மர்ம பெண் மூதாட்டியை தனது மொபட்டில் உட்கார வைத்து கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றார்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய மணி பர்சை மூதாட்டியின் வீட்டிலேயே மறந்து விட்டு விட்டதாக கூறினார்.

    அதனை நம்பி மூதாட்டி அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தார். அதனை பயன்படுத்தி அந்த பெண் வீட்டை திறந்து 6½ சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பெண் மூதாட்டியை பைக்கில் அழைத்து செல்வது வீட்டின் கதவை திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் திருட்டில் ஈடுபட்ட பெண் சேலம் பகுதியை சேர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடிக்க சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.

    • கண்காணிப்பு கேமிராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
    • 2 பெண் யானைகள் குதூகலமாக விளையாடி கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை அந்த பகுதியில் கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்ப ட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது.

    இதனை அடுத்து கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என தாளவாடி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே மூன்று முறை கும்கி யானைகள் வரவழை க்கப்பட்டு கருப்பனை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கிட்டத்தட்ட 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறை யினரிடம் இருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இதனைத் தொடர்ந்து 4 -வது முறையாக கருப்பன் யானையைப் பிடிக்க மாரியப்பன், சின்னத்தம்பி என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து வனத்துறை யினர் யானை வரும் வழித்தடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர். தாள வாடி அடுத்த மகாராஜன் புரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கரும்பு தோட்டத்தி ற்கு கருப்பன் யானை வந்தது.

    அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவி னர் கருப்பன் யானை மீது மயக்க ஊசி செலுத்தி னர். சிறிது நேரத்தில் மயங்கி யபடி நின்ற கருப்பன் யானையை உடனடியாக வனத்துறையில் கும்கி யானை மாரியப்பன் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு கருப்பன் யானையை லாரியில் ஏற்றினர்.

    இதையடுத்து தமிழக -கர்நாடகா எல்லை பகுதியான அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தட்டகரை வனப் பகுதியில் கருப்பன் யானையை வனத்துறையி னர் கொண்டு போய் விட்டனர்.

    இதை தொடர்ந்து கருப்பன் யானை நடமா ட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்ட கரை வனப்பகுதியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அடர்ந்த வனப் பகுதியை விட்டு கருப்பன்யானை வெளியேறாமல் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தட்ட கரை பயணியர் விடுதியில் 2 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பர்கூர் தட்டக்கரை வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமி ராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது தட்டக்கரை கிழக்கு பகுதியில் 7-வது கிலோமீட்டர் தொலைவில் தானியங்கி கேமிராவில் 2 பெண் யானைகள் குதூக லமாக விளையாடி கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

    மேலும் கருப்பன் யானை மற்ற யானைகளுடன் கூட்டாக சேர்ந்து சண்டையிட்டு கொள்ளாமல் செல்கின்ற னவா மேலும் மயக்கம் தெளிந்த நிலையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் மருத்துவ குழுவினர் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து பார்த்து வருகின்றார்கள்.

    • போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டாக 42 வது வார்டு உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக கே.வி.ஆர்.நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக கேவிஆர் நகர் பகுதியில் .வி.ஆர் நகர் மைதானம், அன்னமார் கோவில், கேவிஆர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    இதனை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும் 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் 42 வது வார்டு முழுவதும் இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சிசிடிவி கேமராக்களை பார்வையிடும் போது பெயரளவில் மட்டும் இயங்கி வருகிறது.
    • பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து பொருத்தி பரா மரிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சி பகுதியில் நகராட்சி போலீசார், மக்கள் பங்களிப்போடு 252 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு கட்டுப்பாட்டு அறையை போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பல்லடம் தாலுகா செம்மியம்பாளையம் ஊராட்சியில் கிராமத்தில் உள்ள பிரதான வீதிகள் நுழைவாயில், வளைவு என முக்கிய இடங்களில் நவீனமான 31 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாடுக்கு வந்தது. மாவட்டத்தில் இரு இடங்களும் பிற இடங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியதாவது:-  இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகவும், குற்றங்களை தடுப்பதில், பேருதவியாகவும் சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஒவ்வொரு வழக்குகளில் குற்றங்கள் நடக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளப்படுத்தி காட்டி கொடுக்கிறது. சிசிடிவி.கேமராக்கள் குறித்து கிராமங்களில் கூட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் நகரங்களில் மக்கள் இதன் பயன்குறித்து இன்னும் அறிவதில்லை.

    நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் இடத்தில் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிடும் போது பெயரளவில் மட்டும் இயங்கி வருகிறது. ஏதோ பெயருக்கு வைக்காமல் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து இவற்றை பொருத்தி பராமரிக்க வேண்டும்.

    ஒரு முறை செலவு செய்து நவீனமான கேமராக்களை பொருத்தினால் காலத்துக்கும் அவை இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்களை பொருத்தலாம்.

    கடந்த ஆண்டு மாநகரில் நடந்த நகை கொள்ளை சம்பவம், வாலிபரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு, அசாம் மாநில பெண்ணை கொன்று சூட்கேசில்அடைத்து சாக்கடை கால்வாயில் வீசி சென்ற வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக சிசிடிவி. கேமரா இருந்தது. திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 12 கோடி ரூபாய் செலவில் 442 இடங்களில் ஆயிரத்து 200 சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    அதுபோக மாநகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்பு, போலீசார், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்கள் பொருத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • வங்கி ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
    • பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கோபால் தலை மையில் நடைபெற்றது.

    அப்போது 15 நாட்களுக்குள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அது செயல்பாட்டில் இருக்க வேண்டும், ஒவ்வொரு ஏடிஎம் மையங்களில் கண்டிப்பாக காவலாளிகள் அமர்த்தப்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை 15 நாட்களுக்குள் அமல் படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இதனால் ஏடிஎம் மையங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதோடு வங்கிகளில் ஏற்படும் கொள்ளை சம்பவங்க ளிலும் தடுக்க இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் கொள்ளை நடைபெறும் சம்பவங்கள் எளிதில் போலீசார் பிடிப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.

    வங்கிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்கின்றனர்.

    திருப்பூர்:

    போக்குவரத்துத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்துக்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 500 பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஸ்களிலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பஸ் பயணத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையின்போது, அவசர அழைப்பு பொத்தானை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.

    அப்போது எழுப்பப்படும் ஒலியால் செயலியை இயக்குபவர் நிலைமையை கண்காணித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும்.

    திருப்பூரில் பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்கின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களில் பலர் செல்கி ன்றனர். இருப்பினும் அனைவருக்கும் இது சாத்தியமாவதில்லை. எனவே பெண்கள் பலர் நகர பஸ்களைத்தான் பயன்படுத்துகின்றனர். சென்னையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம் நடைமுறையில் எந்த அளவுக்கு உதவும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    அதைப் பொறுத்துதான் திருப்பூரிலும் இத்தகைய திட்டத்தை கொண்டுவர முடியும். பெண்களுக்கு பாதுகாப்பான நகராக திருப்பூர் இருக்கிறது. இருப்பினும் இரவு நேரங்களில்பணியை முடித்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பெண்கள் பலர் பயத்துடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு தக்க பாதுகாப்பு அவசியமானது. எனவே திருப்பூரில் இயங்கும் நகர பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×