search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு கேமரா, காவலாளிகள் அமர்த்த வேண்டும்
    X

    ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு கேமரா, காவலாளிகள் அமர்த்த வேண்டும்

    • வங்கி ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
    • பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கோபால் தலை மையில் நடைபெற்றது.

    அப்போது 15 நாட்களுக்குள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அது செயல்பாட்டில் இருக்க வேண்டும், ஒவ்வொரு ஏடிஎம் மையங்களில் கண்டிப்பாக காவலாளிகள் அமர்த்தப்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை 15 நாட்களுக்குள் அமல் படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இதனால் ஏடிஎம் மையங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதோடு வங்கிகளில் ஏற்படும் கொள்ளை சம்பவங்க ளிலும் தடுக்க இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் கொள்ளை நடைபெறும் சம்பவங்கள் எளிதில் போலீசார் பிடிப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.

    வங்கிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×