என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு காமிரா வயர் அறுந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.
தட்டார்மடத்தில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு காமிராவை சீரமைக்க வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை
- தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் 4 கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டது
- கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது.
சாத்தான்குளம்:
தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் நான்கு திசையிலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் 4 கண்காணிப்பு காமிராக் கள் அமைக்கப்பட்டன.
இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் போலீசார் கண்காணிப்பில் பஜாரில் உள்ள தனி–யார் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தட்டார்மடம் பஜாரில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் கண்காணிப்பு காமிராவில் கோப்புகளை வைத்து கண்டுபிடிக்க ஏதுவாக இருந்து வந்தது. இந்த கண்காணிப்பு காமிரா பதிவு செய்யும் கணினி முன்புள்ள கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பு காமிரா கட்டுபாட்டு அறைக்கு செல்லும் வயர் அப்பகுதியில் சென்ற லாரியால் அறுந்து போனது. இதனால் கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது. அதனால் சேதமாகி காணப்படும் கண்காணிப்பு காமிராவை சீரமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.