என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thattarmadam"
- அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
- சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சாத்தான்குளம்:
உடன்குடி அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த வர் ஜெயபாண்டி மகன் சரத்குமார் (வயது 28).
கொல்ல முயற்சி
இவர் முன்விரோதம் காரணமாக தட்டார்மடம் அருகே உள்ள தாமரை மொழியை சேர்ந்த அருண் பாண்டி (22), சீனி (28) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும், அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சரத்கு மாரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் பவுலோஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரைத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், கைதான சரத்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ெஜயிலில் அடைக்கப் பட்டார்.
- தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் 4 கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டது
- கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது.
சாத்தான்குளம்:
தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் நான்கு திசையிலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் 4 கண்காணிப்பு காமிராக் கள் அமைக்கப்பட்டன.
இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் போலீசார் கண்காணிப்பில் பஜாரில் உள்ள தனி–யார் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தட்டார்மடம் பஜாரில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் கண்காணிப்பு காமிராவில் கோப்புகளை வைத்து கண்டுபிடிக்க ஏதுவாக இருந்து வந்தது. இந்த கண்காணிப்பு காமிரா பதிவு செய்யும் கணினி முன்புள்ள கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பு காமிரா கட்டுபாட்டு அறைக்கு செல்லும் வயர் அப்பகுதியில் சென்ற லாரியால் அறுந்து போனது. இதனால் கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது. அதனால் சேதமாகி காணப்படும் கண்காணிப்பு காமிராவை சீரமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்