search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தட்டார்மடம் அருகே 2 பேரை கொல்ல முயற்சி - கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    தட்டார்மடம் அருகே 2 பேரை கொல்ல முயற்சி - கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    • அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சாத்தான்குளம்:

    உடன்குடி அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த வர் ஜெயபாண்டி மகன் சரத்குமார் (வயது 28).

    கொல்ல முயற்சி

    இவர் முன்விரோதம் காரணமாக தட்டார்மடம் அருகே உள்ள தாமரை மொழியை சேர்ந்த அருண் பாண்டி (22), சீனி (28) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும், அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் சரத்கு மாரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் பவுலோஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    குண்டர் சட்டம் பாய்ந்தது

    இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரைத்தார்.

    அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், கைதான சரத்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ெஜயிலில் அடைக்கப் பட்டார்.

    Next Story
    ×