search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்திலியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா
    X

    கந்திலியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா

    • குற்ற செயலை தடுக்க நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துடன் கேமராக்கள் இணைப்பு

    திருப்பத்தூர்:

    கந்திலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடமான கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரி, கெஜல்நா யக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, ஆம்பள்ளி ரோடு, தோக்கியம் கூட்ரோடு, கந்திலி சந்தை போன்ற முக்கிய இடங்களில் குற்றங்களை தடுக்கவும் விபத்துக்களை குறைக்கவும் பொதுமக்கள் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கண்காணிப்பு கேமரா க்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று கேமராக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விபத்துக்களை குறைக்கவும் 3-வது கண் கண்காணிப்பு கேமரா பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. கந்திலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 10 இடங்களில் தற்போது கேமராக்கள் அமைக்க ப்பட்டுள்ளன.

    இந்த கேமராக்கள் நேரடியாக கந்திலி போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இதன் மூலம் மாவட்ட முழுவதும் குற்ற செயல் மற்றும் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×