என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்த கும்பல்
- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம்.
- சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் வாய்க்கால் மேடு தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி மனைவி காந்திமதி பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் வீட்டின் முன்பு பொறுத்தி இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கேமராக்களை உடைக்கும் முன்பு அதில் 6 பேர் உள்ளதாக தெரிகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சுமார் 26 ஆயிரம் மதிப்புள்ள 3 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்