search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collected"

    • மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்க ப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, கொங்கனாகுறிச்சி என்.சுப்பலாபுரம், செங்கமலநாச்சியார்புரம், வத்திராயிருப்பு, முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.55 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சில வாடிக்கையாளர்கள் மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டு ரூ.38 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர்.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளரின் 94430-37508 செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
    • உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. திருச்செ–ங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையில், கோவில் தக்கார் பிரதிநிதி குகன், கோவில் செயல் அலுவலர் அருள்குமார், பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    இதில், நிரந்தர உண்டியலில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 546 ரூபாய் பணமும், 34 கிராம் தங்கம் மற்றும் ஆயிரத்து 953 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    அதேபோல் திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 627 ரூபாய் பணம் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல் களிலும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 173 ரூபாயினை பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.

    • மதுரை மாவட்டத்தில் மின்சாரம் திருட்டு; ரூ.32.19 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படை யில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அம லாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மீமிசல், கோட்டைப்பட்டினம், கொடிக்குளம், மணல்மேல்குடி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 9 இடங்களில் மின் திருட்டு கண்டறி யப்பட்டது.

    எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.29 லட்சத்து 55 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் மின்சாரம் திருடிய நுகர்வோர்களுக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக நுகர்வோர்களிடம் மொத்தம் ரூ.32 லட்சத்து 19 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன் எண்: 94430-37508 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.வரிவிதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில்மொத்த வருவாயாக 93 ஆயிரத்து 960 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. #AugustGSTrevenue #AugustGSTRs93960
    புதுடெல்லி:

    சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் மாதந்தோறும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து ஜி.எஸ்.டி. முறையை செயல்படுத்தி வருகிறது. அந்த இலக்கையும் கடந்து சில மாதங்களில் வருவாய் கிட்டியுள்ளது. மேலும் சில மாதங்களில் இந்த இலக்குக்கு சற்று நெருக்கமான வருவாய் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் மொத்த வருவாயாக  93 ஆயிரத்து 960 கோடிகோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் வருவாய்த்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக 15 ஆயிரத்து 303 கோடி ரூபாயும், மாநிலங்களின் மூலம் ஜி.எஸ்.டி. 21 ஆயிரத்து 154 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரி உள்பட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 49 ஆயிரத்து 876 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

    இறக்குமதிக்கான செஸ் வரி 849 கோடி ரூபாய் உள்பட 7 ஆயிரத்து 628 கோடி ரூபாய் அளவுக்கு செஸ் வரியும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. #AugustGSTrevenue #AugustGSTRs93960 
    ×