என் மலர்
நீங்கள் தேடியது "அபராதம்"
- நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு செய்வதற்கு டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.
- இரும்பு சக்கரத்தை கழற்றி விட்டு மீண்டும் டயர் சக்கரத்தை மாட்டி கொண்டு சாலைகளில் செல்ல வேண்டும்.
காங்கயம்:
முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் 19- ந் தேதி முதல் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாைலத்துறை, ஊராட்சி ஒன்றியம் மூலம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
முத்தூர், நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு செய்வதற்கு டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் நெல் நாற்று நடவு உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் உழவு பணிகளை முடித்துக்கொண்டு இரும்பு சக்கரத்துடன் அப்படியே கிராம தார்ச்சாலைகள் மற்றும் பிரதான தார்ச்சாலைகளில் ஓட்டி செல்லப்படும் சூழ்நிலையில் தார்ச்சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விடும். இதுபோன்ற சூழலில் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் வயல்களில் உழவு பணிகளை முடித்துக்கொண்டு வரும்போது கிராம சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் இரும்பு சக்கரத்துடன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே உழவு பணிகளை முடித்தவுடன் டிராக்டரில் இருந்து உடனடியாக இரும்பு சக்கரத்தை கழற்றி விட்டு மீண்டும் டயர் சக்கரத்தை மாட்டி கொண்டு சாலைகளில் செல்ல வேண்டும். மேலும் இரும்பு சக்கரத்துடன் தார்ச்சாலைகளில் ஓட்டிச்செல்லும் டிராக்டர் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் மூலம் அபராதத்துடன் உரிய சட்ட ரீதியான நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
- போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் காலமாக, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் சந்தேகப்படும் படியான நபர்களை சுவாச பரிசோ தனை கருவி (பிரீத் அனலை சர்) மூலம் பரிசோதனை செய்து, மது அருந்தி வாகனம் ஓட்டினால், அவரது புகைப்படத்துடன், கோர்ட்டுக்கு சார்ஜ்சீட் அனுப்பி வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
இத்திட்டம் ஏற்கனவே இருந்தாலும், இரவுநேர விபத்தை தடுக்கும் பொருட்டு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால்ரமேஷ் உத்தர வின் பேரில், காரைக்கால் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மரிகிறிஸ்டியன் பால் மற்றும் போக்குவரத்து போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். இந்த பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேக மாக வும் வாக னம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள னர்.
- புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம்.
- மேலும், கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி சீர்காழி நகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் முக்கூட்டு சாலையில் இயங்கி வந்த பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கு புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் தேனீர் கப்புகள் இருந்ததை கண்டறிந்து பெட்டிக்கடை உரிமையாளரிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரிடம் மாவட்ட கலெக்டர் எச்சரித்தார்.
மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெருவில் இயங்கி வரும் பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்க ளுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.
தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை மேற்கூரை கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததை யொட்டி, மாவட்ட கலெக்டர் துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி சமையலறை, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் எடுக்க ப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆணையரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் ஹேமலதா , நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன் , நகர் மன்ற உறுப்பினர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
- கெட்டுப்போன 40 கிலோ இறைச்சி பறிமுதல்
- 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம்
நாகர்கோவில்:
நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கர நாராயணன் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
மேலும் காலாவதியான மீன் குழம்பு 1½ கிலோ, சூடு படுத்தி பயன்படுத்தி எண்ணெய் 2 லிட்டரும், மாட்டு இறைச்சி 3 கிலோ, கெட்டுப்போன பால் 11 லிட்டர், புரோட்டா 4 கிலோ, வேகவைத்த மீன் குழம்பு ½ கிலோ, வத்த குழம்பு 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி 2 கிலோ பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி உணவு தயார் செய்த 7 உணவுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவர்மா, மீன், கோழி, ஆடு, மாட்டு இறைச்சி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் படி உணவு பாதுகாப்பு உரிமை அல்லது பதிவு சான்றிதழ் பெற்று பொது மக்களின் பார்வைக்கு தெரியும்படி தொங்கவிட வேண்டும். அசைவ உணவு பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் அசைவ உணவுகளை அன்றே தேவைக்கு வாங்கி விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் விற்பனை செய்தது போக மீதம் உள்ள உணவு மற்றும் இறைச்சி வகைகள் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. சமைய லறை உணவு பொருட்கள் சேமித்து வைக்கும் இடம் சமைத்த உணவை பரா மரிக்கும் இடம் ஆகிவை சுத்தமாக சுகாதாரமாக இருக்க வேண்டும். உணவுகையாளுபவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
பாதுகாப்பான சுத்தமான கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்த கூடாது. சவர்மா தயாரிக்கும் இடம் மற்றும் புரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மேஜை மற்றும் அடுப்பு ஆகியவை கடைக்கு வெளியே இருந்தால் தூசிகள் படாத வண்ணம் தடுப்புகள் அமைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். அல்லது கடைக்கு உட்புறம் வைக்க வேண்டும். பொது மக்கள் உணவு தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.
- டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
- பஸ் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
புதுவையில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது.
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று முன்னாள் சென்ற காரை இடிப்பது போல் சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் சென்றவர்கள் உடனடியாக தனியார் பஸ்சை நிறுத்தினார்கள். அப்போது அங்கு இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் உடனடியாக தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டார்.
டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிய போலீசார் மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். குடிபோதையில் பஸ்சினை ஓட்டிவந்த டிரைவர் கடலூரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் தெரிவித்து மாற்று டிரைவரை கொண்டு தனியார் பஸ்சினை இயக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பஸ் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது
- உணவு பாதுகாப்பு துறையினர் ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
டி.என்.பாளையம்,
டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை யினர் சோதனையில் ஈடுப ட்டனர். அப்போது டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். சோதனையில் ஈஸ்வரன் என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
அதைத்தொடர்ந்து ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர் சக்திவேல் கூறியதாவது; மளிகை கடையில் தரம் குறைவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 94 440423 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.
- சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
- மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி நேற்று நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமையில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:-
நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், சதானந்தபுரம், மப்பேடு பகுதிகளில் உள்ள வீடுகளில் மாடுகளை வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை வீடுகளிலே கட்டி வளர்க்க வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையில் தனக்கு பதில் ஆஜராக ஜூனியர் ஒருவரை வக்கீல் அனுப்பினார்.
- இதனால் அந்த வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.
வழக்கில் ஆஜரான அந்த ஜூனியர், முதன்மை வக்கீல் இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி அந்த ஜூனியருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் வழக்கு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வக்கீலை உடனே ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதனால் சம்பந்தப்பட்ட வக்கீல் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரானார். நேரில் வராததற்கு மன்னிப்பும் கோரினார்.
அப்போது அவரிடம் நீதிபதிகள், தகுந்த முன்னேற்பாடு மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஜூனியர் வக்கீலை அனுப்பி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், உரிய முறையில் நடந்துகொள்ள தவறியதால், சுப்ரீம் கோர்ட் வக்கீல் சங்கத்தில் 2,000 ரூபாயை செலுத்தி அதற்கான ரசீதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த வக்கீலுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
- ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
- சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.
இந்த சோதனையின் மூலம் டிக்கெட் இன்றி பயணித்த 12 ஆயிரத்து 890 பேருக்கு 98.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்தனர். அதே போல முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன்பதிவு பெடடியிலும், 2-ம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்து கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் என முறைகேடாக பயணித்த 8 ஆயிரத்து 454 பேரிடம் இருந்து 40.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படடுள்ளது.
இது போல ரெயில்களில் விதி முறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்து சென்றதாக 27 பயணிகளுக்கு மொத்தம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓ ட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம், முறைகேடாக பயணம், அதிக லக்கேஜ் ஆகிய வற்றிற்காக 21 ஆயிரத்து 271 பேரிடம் இருந்து 1 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 461 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் ரெயிலில் பயணிகள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.
- புதிய பஸ் நிலையம் முதல் பாகாயம் வரை எச்சரிக்கை பலகை
- தடுப்பு சுவர்களை சீரமைக்க உத்தரவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளால் ஏற்படும் விபத்துகள், முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிப்பது, சாலைகளின் பக்கவாட்டில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை சீரமைப்பது, உடைந்த நுழைவு வாயில் மூடிகளை மாற்றுவது, இடிந்த நிலையில் உள்ள சென்டர் மீடியன்கள் மற்றும் இரும்பு தடுப்பான்களை சீர்செய்வது, கழிவுநீர் வெளியேறுவதால் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
தேசிய நெடுஞ்சா லைகளில் உள்ள அகலம் குறைவான அணுகு சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து பணிமனை அமைந்துள்ள ரங்காபுரம் பகுதியில் உள்ள அணுகுசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் எதிர் திசையில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அந்த இடத்தில் புதிய அணுகு சாலையை அமைக்க வேண்டும்.
வேலூர் புதிய பஸ் நிலையம் முதல் சங்கரன்பாளையம் வழியாக பாகாயம் செல்லும் சாலையில் முக்கிய சந்திப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விபத்து நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளி எதிரொளிப்பான்கள் அமைக்க வேண்டும்.
அபராதம்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்கவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தவிர்க்கும் பொருட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி உள்ள பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை ஒட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.