search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமீறல்"

    • பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் நோட்டீஸ்.
    • நோட்டீஸ் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் சொத்துக்கள், நிலங்கள், தங்கம் ஆகியவற்றை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பேசினார்.

    பிரதமரின் இந்த பேச்சு வெறுப்பை தூண்டுகின்றன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் மனு அளித்தது.

    பிரதமருக்கு எதிரான புகார் குறித்து தேர்தல் ஆணையம் முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதே குற்றச்சாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் மீது சுமத்தினார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த புகாரை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பிரதமரின் பேச்சு தொடர்பான புகார் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரவும் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இந்த நிலையில் முஸ்லிம்கள் குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.

    அவதூறாக பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். இது தொடர்பாக வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்குள் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாகவும் அவர் மீது பா.ஜனதா தேர்தல் ஆணயைத்தில் புகார் அளித்து இருந்தது. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தெரிவித்தது.

    ராகுல்காந்தியின் பேச்சும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பா.ஜனதா, காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முக்கிய தலைவர்களின் பேச்சு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இன்று இரவு முதல் தொடங்குகிறது. தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 102 போலீஸ் நிலையங்களிலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதால் இடையூறாக இருப்பதாக யாராவது புகார் செய்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மதுரை நகர சாலைகள் உள்ளன.
    • குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்தான அரசு பஸ்களை அதிக அளவில் மக்கள் நம்பியுள்ளனர். அரசு பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஓர் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல பயணங்கள் எளிதாகின்றன.

    ஆனால் மதுரை நகரில் ஷேர் ஆட்டோக் களால் நன்மைகளை விட சிரமங்களையே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகமாக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரில் குறைந்த அளவு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது புற்றீசல்கள் போல் ஷேர் ஆட்டோக்கள் அதிகரித்து வருகின்றன.

    நினைத்த இடத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதும், பஸ் நிறுத்தங்களில் மணிக்கணக்கில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது, சாலையில் அதிவேகமாக ஓட்டி செல்வது உள்ளிட்ட பல்வேறு விதிகளை ஷேர் ஆட்டோக்கள் ஓட்டுனர்கள் மீறி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரை நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

    தெற்கு வாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலையம், அவனியாபுரம், காளவாசல், திருப்பரங்குன்றம், கீழவாசல், காமராஜர் சாலை, உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்கும் நெரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஷேர் ஆட்டோக்கள் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    மேலும் பயணிகளை ஏற்றுவதில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடையே நடுரோட்டிலேயே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிதடிகளில் முடிகிறது.

    பண்டிகை நேரத்தில் ஆட்களை ஏற்றி செல்வதில் அருகருகே ஆட்ேடாக்களை நிறுத்தி வைத்து கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடு கின்றனர்.

    மோட்டார் வாகன சட்டத்தின் படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாக னங்களை இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் மதுரையில் ஓட்டும் சில ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மேற்கண்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என தெரியவில்லை. போக்குவரத்து விதிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வும் இல்லை. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்குவதை காண முடிகிறது. மதுரையில் இயக்கப்படும் ஒரு ஷேர் ஆட்டோவில் குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல்களுக்கு தொடர்ச்சியாக அபராதங்கள் விதிக்கப்படு கிறது. ஆனால் அபராதம் கட்டிவிட்டு மீண்டும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

    கடந்த காலங்களில் 3 மாதத்திற்கு ஒருமுறை நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களை போலீசார் தணிக்கை செய்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நடைமுறையை காண முடியவில்லை. இது ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

    இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

    • சரக்கு லாரிகள்முக்கிய வீதிகளில் கடைகளுக்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
    • போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரோட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இருப்பினும், அப்பணிகள், முழுமையடையாமல் இருப்பதால் ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.சிறிது நேரம் மட்டுமே நெரிசல் ஏற்பட்டாலும், விதிமீறி இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.

    விதிமுறைகளை கடுமையாக்கி, நெரிசலை குறைத்தால் மட்டுமே வாகனங்கள் தடையின்றி பயணிக்கவும், மக்கள் இடையூறு இல்லாமல் நடந்து செல்ல முடியும்.இது ஒருபுறமிருக்க சரக்கு லாரிகள் நெரிசலுக்கு முக்கிய காரணமாக மாறி வருகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள பகல் நேரங்களில் நகருக்குள் இயக்கப்படும் சரக்கு லாரிகள்முக்கிய வீதிகளில் கடைகளுக்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.

    பிறரின் சிரமம் குறித்து எந்த கவலையும் இன்றி பொருட்களை இறக்குகின்றனர். சரக்கு வாகனங்கள், இரவு மற்றும் அதிகாலையில் மட்டுமே நகருக்குள் வர வேண்டும். பகலில் நுழைந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறையை கடைபிடித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், சில வியாபாரிகள் மக்களின் நிலை குறித்து கண்டுகொள்வதே கிடையாது. சரக்கு லாரிகள் நகருக்குள் நுழைவதைக்கண்டறிந்து தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

    ×