என் மலர்
நீங்கள் தேடியது "Traffic Police"
- 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
- விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர்.
மும்பையை அடுத்த தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர் 2 போலீசாரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். அப்போது போக்குவரத்து போலீஸ்காரர் ஓட்டிய ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் தெளிவில்லாமல், எண்கள் அழிந்து இருந்ததை வாலிபர் கண்டார்.
சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே!, பொதுமக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ள போலீசாருக்கு ஒரு நீதியா? என பொங்கி எழுந்த வாலிபர் அந்த போலீஸ்காரரிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அவர் அலட்சியமாக ஸ்கூட்டரில் கிளம்பி சென்றார். உடன் இருந்த போலீஸ்காரரும் பின்னால் அமர்ந்து பயணித்தார். கடுப்பான வாலிபர் ஸ்கூட்டரை துரத்தி சென்று, அதை பின்னால் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பின்னர் விதிமுறையை மீறிய உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போலீசாருடன் அந்த வாலிபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசாரை நோக்கி தனது செல்போனில் வீடியோவும் எடுக்க தொடங்கினர். இதை வேடிக்கை பார்த்தவர்களும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து தானே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாலிபருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருகிறது என்றார். இருப்பினும் வாலிபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பையும், பொதுமக்கள் மத்தியில் விறுவிறுப்பையும் எகிற செய்துள்ளது.
- சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
- சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்!
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது:-
* சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
* சாலை பாதுகாப்புக்காக சாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம்.
* அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
* சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று தெரிவித்துள்ளது.
- பெண் ஒருவர் பைக் எஞ்சினில் அமர்ந்துகொண்டு இளைஞரை இறுக்கமாக கட்டிபிடித்தபடியே பயணம் செய்துள்ளார்.
- இந்த காதல் ஜோடி ஹெல்மெட் கூட அணியவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதல் ஜோடி பைக்கில் ஆபத்தான பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்ட, பெண் ஒருவர் பைக் எஞ்சினில் அமர்ந்து கொண்டு இளைஞரை இறுக்கமாக கட்டிபிடித்தபடியே பயணம் செய்துள்ளார். இந்த காதல் ஜோடி ஹெல்மெட் கூட அணியவில்லை.
இதனை அவ்வழியே காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இதனையடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் ரூ.53,500 அபராதம் விதித்தனர் . அபராத செலானை நொய்டா போக்குவரத்து போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
- 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
- சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சென்னை:
சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
இதற்காகவே போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வானத்தை இயக்கி விபத்தில் சிக்குவதும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ எண்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லுதல் ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
- விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
- இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.
புதுச்சேரி:
விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வரஉள்ளது.
இதற்காக கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
- போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும்,
- போக்குவரத்து விதிகளை கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.
கோத்தகிரி,
புதிய போக்குவரத்து சட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த அபராத தொகை அதிகரிப்பு குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வந்த நிலையில் அதிகப்படியான வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும் போது ஏதேனும் அபராதம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே போக்குவரத்து விதிகளை தற்சமயம் கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.
இந்த போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும், அப்படி ஓட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் நன்மை குறித்து கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது.
- ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.
சென்னை:
சென்னை போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்-பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது. சாலையில் நிலவும் காற்றின் தன்மை சற்று மோசமாகத்தான் இருக்கும். ஒருவர் 4 அல்லது 5 ஆண்டுகள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது காற்றின் மாசுபாடு காரணமாக அவர் பாதிக்கப்படுவார். எனவே போக்குவரத்து போலீசாருக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமான நடவடிக்கை ஆகும்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது போக்குவரத்து போலீசார்தான். எனவே போக்குவரத்து போலீசாருக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் முக்கியம்.
முழு உடல் பரிசோதனை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அந்த விவர குறிப்புகள், இதுபோன்ற முகாம்களுக்கு வரும்போதும் பயனுள்ளதாக இருக்கும். ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம். இது போன்ற மருத்துவ முகாம்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தி அனைத்து போக்குவரத்து போலீசாரும் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், நீரழிவு, காசநோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை, எலும்புகள், பல், கண் ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றன.
இதில் போக்குவரத்து போலீசார் 250 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சாமே சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- போக்குவரத்து போலீசாரின் வித்தியாச விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- 5 நிமிடத்தில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு போக்குவரத்து ஒட்டப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர சாலைகளில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செல்கின்றனர்.
வாகனங்களின் முன் பக்கத்தில் நவீன ஒளி விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள், கண்களை கூச வைக்கும் தன்மை உடையவை. குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்யும் தன்மை உடையவை. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மதுரை மாநகரில் ஓடும் இருசக்கர- 3 சக்கர- 4 சக்கர வாகனங்களில், கண்கூச வைக்கும் விளக்குகளின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். இது பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகரில் நேற்று மாலை 5.30 முதல் 5.35 மணி வரை சாலைகளில் வாகனங்களை தணிக்கை செய்து, கண் கூச வைக்கும் விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இன்ஸ்பெக்டர்கள் தங்க மணி (தெப்பக்குளம்), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), நந்தகுமார் (பெரியார் பஸ் நிலையம்), பூர்ணகிருஷ்ணன் (திருப்ப ரங்குன்றம்), தங்கப்பாண்டி (அவனியாபுரம்), ரமேஷ்குமார் (மீனாட்சி அம்மன் கோவில்), சுரேஷ் (தல்லாகுளம்), ஷோபனா (மதிச்சியம்), பஞ்சவர்ணம் (மாட்டுத்தாவணி) ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.
மதுரை மாநகரில் நேற்று மாலை போலீசார் ஆங்காங்கே உள்ள சந்திப்புகளில் வாக னங்களை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தனர். அப்போது பெரும்பாலான வாகனங்களில் கண் கூசும் தன்மை உடைய விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஒளிவீச்சின் தன்மை குறைக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 நிமி டங்களில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தெப்பக்குளத்தில் மட்டும் 500 வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் கண் கூச வைக்கும் விளக்குகளின் உபயோகம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில இருந்து எஸ்.என்.ஹை ரோட்டில் இன்று காலை ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.
- டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாஸ், தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், ரத்தினகுமார் ஆகியோர் தூய்மை பணியாளர்களின் உதவியுடன் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஆர்ச்் பகுதியில இருந்து எஸ்.என்.ஹை ரோட்டில் இன்று காலை ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.
சாலையில் கற்கள்
சாலையில் இருந்த மேடு பள்ளம் காரணமாக அந்த லாரியில் இருந்து கற்கள் விழுந்து சாலையில் சிதறி கிடந்தன.
இதன் காரணமாக இன்று காலை இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்றவர்கள் சிலர்் வழுக்கி விழுந்து விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம்் ஏதும்் ஏற்படவில்லை.
உயிர் விபத்துக்கள் ஏற்படும் முன்னர் சாலையில் கிடக்கும் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அங்கு பணியில் இருந்த டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாஸ், தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், ரத்தினகுமார் ஆகியோர் தூய்மை பணியாளர்களின் உதவியுடன் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
- சாலைத் தடுப்பு குறுக்குப் பாதை வழியாக வாகனத்தை திரும்பியதாகக் கூறப்படுகிறது.
- தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தனபாலை கைது செய்தனா்.
அவிநாசி :
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த தனபால் (வயது 34), சாலைத் தடுப்பு குறுக்குப் பாதை வழியாக வாகனத்தை திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதைப்பாா்த்த போக்குவரத்து காவலா் மோகன்குமாா், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரம், சற்று தூரம் சென்று சரியான சாலையில் வாகனத்தை திருப்பி வருமாறு கூறியுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த தனபால் தகாத வாா்த்தைகளைப் பேசி காவலா் சீருடையை பிடித்து இழுத்துள்ளாா். தடுக்க வந்த மற்றொரு காவலரின் சீருடையையும் இழுத்து தாக்கியுள்ளாா்.இதையடுத்து, தனபாலை அவிநாசி காவல் நிலையத்துக்கு போக்குவரத்து காவலா்கள் அழைத்துச் சென்றனா்.இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தனபாலை கைது செய்தனா்.
- வேலூரில் வெயிலை சமாளிக்க நடவடிக்கை
- டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்
வேலுார்:
வேலுாரின் கோடைவெயிலால் பகல் மட்டுமின்றி இரவிலும் அனலின் தாக்கம் இருக்கும். இதனால், பகல் நேரத்தில் கோடைக்காலத்தில் வெளியில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து போகும். அப்படியே வெளியில் செல்பவர்களும், குடை, தொப்பி, கூலிங்கிளாஸ் என்று பாதுகாப்பு உபகரணங்களுடனே வலம் வருவார்கள்.
சாதாரணமாக ஒருசில மணி நேரம் வெளியில் சென்று திரும்பு பவர்களுக்கே கோடையை தாங்க இத்தனை பொருட்கள் தேவைப்படுகிறது. ஆனால், காலை யில் இருந்து மாலை வரை சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரின் நிலைமையை சொல்லிமாளாது.
அவர்கள் பாடு திண்டாட்டம்தான். கொளுத்தும் வெயிலில் வியர்வை சொட்டச் சொட்ட கடமையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில்தான் வேலூர் மாவட்ட போலீ சாருக்கு கோடைக்காலத்தில் வெப்பம் தாங்கும் வகையிலான பெரிய அள வில் நவீன தொப்பிகள், அவ்வப்போது மோர், எலுமிச்சை பழச்சாறு போன்றவை போலீஸ்துறையால் வழங்கி வருகின்றனர்.
இந்தமுறை போக்கு வரத்து போலீசாரின் துயர் துடைக்க தொப்பியுடன், அவர்கள் கண்களை பாதுகாக்க வசதியாக கருப்பு கூலிங்கிளாஸ் வழங்கப்படுகிறது.
வேலூர் மக்கான் சிக்னல் அருகே போலீசாருக்கு தொப்பி மற்றும் ஜில்லென மோர் ஆகியவற்றை டி.ஐ.ஜி முத்துசாமி வழங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி கூலிங்கிளாஸ் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதல் தொடர்ந்து 120 நாட்கள் போலீசாருக்கு தாகம் தீர்க்க மோர் அல்லது எலுமிச்சை ஜூஸ் தெர்மாகோல் தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 110 போலீசாருக்கு தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஜில்லென மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெயிலில் நின்று போக்குவரது காவல் துறையிருக்கு இயற்கை குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
- போலீசாருக்கு தர்பூசணி பழச்சாறு நீர்மோர் ஆகியவற்றை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், உடல் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை காலம் முழுவதும் இயற்கை குளிர்பானங்கள் வழங்கும் திட்டத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழா தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகே நடைபெற்றது.
தஞ்சாவூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி போக்குவரத்து காவலர்கள் அனைவருக்கும் தர்பூசணி பழச்சாறு , கிர்ணி பழச்சாறு , நீர்மோர் ஆகியவற்றை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் .
அப்போது அவர் பேசுகையில், கடும் வெயில் காலங்களில் நகரின் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போக்குவரத்து காவலர்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசுகையில், நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கோடை காலம் முழுவதும் இரசாயன குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை குளிர்பானங்களான ஆப்பிள் பழச்சாறு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி கிர்ணி, எலுமிச்சை, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, தர்பூசணி பழச்சாறு, கிர்ணி பழச்சாறுகள், இளநீர், நீர்மோர் உள்ளிட்டவை கோடை காலம் முடியும் வரை தினமும் சுழற்சி முறையில் தஞ்சை நகர போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்படும் என்றார் . இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளி ட்டோர் செய்திருந்தனர்.






