என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம்- போக்குவரத்து காவல்துறை
    X

    சாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம்- போக்குவரத்து காவல்துறை

    • சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
    • சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்!

    தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது:-

    * சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

    * சாலை பாதுகாப்புக்காக சாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம்.

    * அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    * சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×