என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayudha pooja"

    • சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
    • சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்!

    தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது:-

    * சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

    * சாலை பாதுகாப்புக்காக சாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம்.

    * அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    * சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று தெரிவித்துள்ளது. 

    • அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
    • தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும்; செல்வத்தைத் தரும் திருமகளாகவும்; துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும்; மனத் திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

    அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன.
    • 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாளை (30-ந் தேதி) சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. மறுநாள் பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.

    அதேபோல 5-ந்தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை சென்றடைகிறது.

    இந்த ரெயில் மயிலாடு துறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

    • ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
    • மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    சென்னை:

    சென்னையில் இருந்து ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு ஆயுதபூஜை வரும் அக்டோபர் 1-ந்தேதியும், தீபாவளி அக்டோபர் 20-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்கு செல்பவர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தனர்.

    பஸ்களை விட ரெயில்களில் ஏராளமானோர் பயணிப்பதால், ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இதனால் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும் எனவும், விரைவில் அதற்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வழங்க வேண்டும் எனவும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

    இந்த நிலையில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாகர்கோவில்-தாம்பரம், சென்னை சென்டிரல்- போத்தனூர், சென்டிரல்- செங்கோட்டை, எழும்பூர்-நெல்லை, எழும்பூர்-தூத்துக்குடி, நாகர்கோவில்-சென்டிரல் ஆகிய 6 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * நாகா்கோவிலில் இருந்து வரும் 28, அக்டோபர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை தோறும்) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை தோறும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * நெல்லையில் இருந்து வரும் 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069), மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * தூத்துக்குடியில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06018), மறுநாள் காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06017), அதேநாள் இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06054), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வரும் அக்டோபர் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06053), அதேநாள் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06123), மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06124), மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24, அக்டோபர் 1,8,15,22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06121), மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 25, அக்டோபர் 3,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06122), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான காலையில் இருந்து பயணிகள் காத்திருந்தனர். 

    • ஆவின் நிறுவனம் இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
    • புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இப்பாலைப் பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்டுகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.

    இதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.

    புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி வருகிற 21, 22-ந்தேதி (சனி, ஞாயிறு) வார விடுமுறை, 23-ந்தேதி ஆயுத பூஜை, 24- ந்தேதி விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபபோல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 பஸ்களும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 பஸ்கள் என கூடுதலாக 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களில் மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படு த்தப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து வருகிற 20, 21 மற்றும் 22-ந்தேதி ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 20-ந் தேதியில் இருந்து அடுத்த வாரம் 27-ந்தேதி வரை ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    இதே போல வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன. இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.

    இதுபோல அரசு விரைவு பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24-ந்தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பஸ்களிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    20-ந்தேதி பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.29 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தேவையான அளவு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 2,500 அரசு பஸ்களில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை போல ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் தேவையை பொறுத்து கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஏ.சி. வசதி இல்லாத இருக்கைகளுக்கு ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.வசதியுடன் இருக்கையாக இருந்தால் ரூ.2ஆயிரம் வரையிலும், படுக்கையாக இருந்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25-ந்தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    • சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
    • வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து வருகிற 20, 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 20-ந் தேதியில் இருந்து அடுத்த வாரம் 27-ந் தேதி வரை ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    இதே போல வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன. இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.

    இதுபோல அரசு விரைவு பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24-ந் தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பஸ்களிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    20-ந் தேதி பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.29 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தேவையான அளவு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 2,500 அரசு பஸ்களில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையைபோல ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் தேவையை பொறுத்து கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஏ.சி. வசதி இல்லாத இருக்கைகளுக்கு ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.வசதியுடன் இருக்கையாக இருந்தால் ரூ.2ஆயிரம் வரையிலும், படுக்கையாக இருந்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25-ந் தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    • கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது.
    • சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். பொதுமக்கள் பண்டிகைகளை கொண்டாடுவதற்கான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்காக இந்த சிறப்பு சந்தை நடைபெறும்.

    இந்த சந்தையில் பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் இந்த சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தையானது, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும்.

    தற்போது கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மூலம் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த முறை சிறப்பு சந்தை நடத்துவதற்காக ஏலம் விடப்படவில்லை. கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகமே நேரடியாக சிறப்பு சந்தையை நடத்துகிறது.

    அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது. இதில் முதல் நாளான இன்று பல கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சிறப்பு சந்தையில் நவராத்திரி மற்றும் ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த சந்தையில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழைக்கன்று, வாழை இலை, தேங்காய், கரும்பு போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பூஜையில் வைப்பதற்கு தேவையான அனைத்து பழங்களும் விற்கப்படுகிறது.

    சாமி படங்களுக்கு அணிவிப்பதற்கான சாமந்தி உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் இங்கு வந்து வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர். இங்கு பொருட்கள் மொத்த விலையிலும், சில்லரை விலையிலும் விற்பனை செய்யப்பட்டன. இந்த சிறப்பு சந்தை வருகிற 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு செயல்படும்.

    • அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • இன்று காலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.

    சென்னை மற்றும் சுற்று பகுதியில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர்.

    ரெயில்களில் இடம் இல்லாததால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கோயம்பேடு, மதுரவாயல் பைபாஸ், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 2264 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    அதன்படி நாளை மட்டும் 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் பிற போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்ய உள்ளனர்.

    அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்ற நிலையில் தனியார் ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு அதிகரித்து உள்ளது. இந்த பண்டிகை விடுமுறையையொட்டி ஆம்னி பஸ்களில் 32 சதவீதம் முன்பதிவு அதிகரித்து உள்ளதாக ரெட் பஸ் ஆன்லைன் புக்கிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    ஊட்டி, கொடைக்கானல், உடுமலைப்பேட்டை போன்ற சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் திருச்செந்தூர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, பழனி போன்ற ஆன்மீக தலங்களுக்கும் ஏராளமான பேர் செல்கின்றனர். ஆயுத பூஜை விடுமுறையில் சுமார் 1.5 லட்சம் பேர் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்தும் பிற நகரங்களுக்கு பயணம் அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறும்போது, கோயம்பேட்டில் இருந்து நாளை பல்வேறு நகரங்களுக்கு 1270 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதில் 70 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன. 21-ந் தேதி (சனிக்கிழமை)யும் அதிக முன்பதிவு உள்ளது. 50 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்றார்.

    இது தவிர சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்களில் இருந்து வட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரெயில்களிலும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    • கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
    • வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    சென்னை:

    ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெளியூர் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கி வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    ஆன்மிக தலங்கள், சுற்றுலா மையங்களுக்கு குடும்பமாக செல்வதால் பஸ், ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்களும், பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து இன்று வழக்கமாக செல்லும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், மதுரவாயல் பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. 

    கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்களில் சொந்த ஊர் செல்வதற்கு மாலையில் இருந்தே கூட்டம் கூடத்தொடங்கும் என்பதால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

    சென்னையில் இருந்து மொத்தம் 3100 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் நெரிசல் இல்லாமல் செல்ல விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளையில் இருந்து விடுமுறை என்பதால் கார்களிலும் பயணத்தை மேற்கொண்டனர். சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பகல் நேரங்களில் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன.

    வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே களை கட்டியது. கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்களும் நிரம்பி காணப்பட்டன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் உயர்ந்து காணப்பட்டது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அதில் இடங்களை பிடிக்க பயணிகள் போட்டி போட்டனர்.

    குருவாயூர், சோழன், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன், தேஜாஸ், வந்தே பாரத் உள்ளிட்ட பகல் நேர ரெயில்களில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.

    மாலையில் புறப்பட்டு செல்லக்கூடிய கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம், செங்கோட்டை, கொல்லம் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பியதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க 3 மணி நேரத்திற்கு முன்னதாக காத்து நின்றனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று எல்லா பிளாட்பாரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தன.

    இன்று மாலையில் இருந்து படிப்படியாக கூட்டம் அதிகரித்து நள்ளிரவு வரை பஸ்களில் பயணம் செய்யக்கூடும் என்பதால் அதற்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளையும் அதிகளவில் மக்கள் வெளியூர் புறப்பட்டு செல்வதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.
    • சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை:

    ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி சென்னையில் இருந்து இன்று இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு ரெயில் நெல்லை வந்து சேரும்.

    ரெயிலில் உள்ள சாதாரண படுக்கை பெட்டி மற்றும் எக்கனாமிக் ஏசி கிளாஸ் ஆகியவையின் முன்பதிவு டிக்கெட்டுகள் நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    நெல்லையில் இருந்து 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.35 மணிக்கு ரெயில் புறப்பட்டு 25-ந் தேதி அதிகாலை 4.20 மணிக்கு சென்னை சென்றடையும். ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    தொடர் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிகமானோர் சொந்த ஊருக்கு வருகை தரும் நிலையை கருத்தில் கொண்டு புதிய சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.

    சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை-சென்னை இடையேயான பெரும்பாலான ரெயில்களில் ஏற்கனவே டிக்கெட் விற்றுத்தீர்ந்த நிலையில் சிறப்பு ரெயிலிலும் டிக்கெட் முடிவு பெற்றது.

    ×