என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து"
- நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
- கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள சிதம்பரம் சாலையில் கார்கூடலூர் அணைக்கட்டு ரோடு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஞானஜோதி - கோப்பெருந்தேவி தம்பதியர் கூரை வீடுகட்டி வசிக்கின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு 12 மணியளவில் ஞானஜோதி குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்த போது பலத்த சத்தத்துடன் பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டது. அலறியடித்து எழுந்து பார்த்தபோது இவரது வீட்டின் ஓரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் கவிழ்ந்து கிடந்தது. இதில் அவரது கூரை வீட்டின் ஒரு பகுதி சேதமானது. இதேபோல பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்தெழுந்து வெளியில் வந்தனர். கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்தவர்களை விரைவாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். அதன் மூலம் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி மக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலை யில் செல்லும் வாகனங்கள் திடீரென வழுக்கி கவிழ்கி றது. இதனால் தங்களின் வீடுகள் சேதமடைகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துகளினால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. குறிப்பாக மழை நேரத்தில் இந்த சாலை மேலும், வழு வழுப்பாகி அடிக்கடி விபத்து நடக்கிறது.
எனவே, இந்த சாலையை சொரசொரப்பாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தினர். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று போலீசாரிடம் கூறினார்கள். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் விடு முறையில் இருப்பார்கள். விருத்தாசலம் போலீசார் நாளை திங்களன்று அதி காரிகளிடம் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பர். எனவே, மறியலை கைவிடுங்கள் என்று பொதுமக்களிடம் கூறினார். இதையேற்ற அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேனில் வந்தவர்கள் யார்? இதனை ஓட்டிவந்த டிரைவர் யார்? விபத்து எவ்வாறு நடந்தது? விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்ன? என அனைத்தும் மர்மமாகவே உள்ளது. இது தொடர்பான தகவலை விருத்தாசலம் போலீசார் கூற மறுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை கொண்டு சென்ற நீண்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் அவதிக்குள்ளானார்கள்
கரூர்,
பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக நீளமான லாரியில், சுமார் 360 அடி நீளமுள்ள காற்றாலை மின்விசிறி இறக்கைகளை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை முந்திக்கொண்டு எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு நீளமானதாக இருந்தது. தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தபோது நீளமான அளவிலான காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி சென்ற லாரி செல்ல முடியாமல் நின்றது.இதனால் நீண்ட நேரம் லாரிக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள், பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப் பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.
இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும், மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல ப்பட்ட நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளா னார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு லாரி நகர்த்தப்பட்டது. இதன் காரணமாக பின்னால் நின்ற வாகனங்கள், தவிட்டுப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக கடந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஐப்பசி அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
- போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்
இந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான புண்ணிய தலங்களாக காசியும், ராமேசுவரமும் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாத அமா வாசையின் போதும் முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுப்ப தற்காக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.
தீபாவளியை ஒட்டி வரும் ஐப்பசி மாத அமா வாசையும் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் கொடுப் பதற்கு முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை இன்று மாலை வரை உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை யொட்டி விடுமுறை உள்ளதால் அதிகளவில் குடும்பத்துடன் பக்தர்கள் ராமேசுவரம் வந்தனர். பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் ராமேசுவரம் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட னர். மேலும் அக்னி தீர்த்த கரையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் குடும்பத்துடன் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி முன் ேனார்களை வழிபட்டனர்.
இதனால் அக்னி தீர்த்த கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.
- போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
- மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும், மகா்நோன்புசாவடி பழைய ராமேஸ்வரம் சாலையில் தலா ஒரு மாடு, கன்றையும், யாகப்பா நகரில் 2 மாடுகளையும், சிவகங்கை பூங்கா, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும்,
மருத்துவக் கல்லூரி சாலையில் 4 மாடுகளையும், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் தலா ஒரு மாடு, கன்றையும் என மொத்தம் 18 மாடுகளையும், 2 கன்றுகளையும் மாநகா் நல அலுவலா் சுபாஷ்காந்தி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் பிடித்து, காப்பகத்துக்கு கொண்டு சென்று, அவற்றின் உரிமையா ளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
மாநகரில் இதுவரை 71 மாடுகளையும், 44 கன்றுகளையும் பிடித்து அபராதம் விதித்துள்ள தாகவும், சாலைகளில் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணி தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.
- புதுக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றம்
- கடை வீதிகளில் அதிகளவு கூட்டம் காரணமாக நடவடிக்கை
புதுக்கோட்டை,
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் கடை வீதிகளில் கூட்டம் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, பால்பண்ணை ரவுண்டானா, சங்கரமடம் வீதி, வடக்கு 4-ம் வீதி வழியாக செல்லும்.
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வரும் பஸ்கள் வடக்கு 3-ம் வீதி, திலகர் திடல், பால்பண்ணை ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடையும்.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம், பேராங்குளம் வழியாக செல்லும். மேற்கண்ட தகவலை நகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரியால் செல்ல முடியவில்லை.
- போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம் பாளையம்
பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத எந்திரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரியால் செல்ல முடியவில்லை.
இதனால் அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், லாரிகள், வேன்கள் என அனைத்து வாகனங்களும் பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப்பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.
இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமலும் ,அதே போல் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு நோயாளிகள் அவதிப்பட்டினர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த லாரி மெதுவாக நகர்ந்து சென்றது.இதனால் அந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்றன.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- விபத்துக்குள்ளான லாரியை போலீசாரும், பொதுமக்களும் அப்புறப்படுத்தினர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் தமிழகத்திற்கும், கேரளா விற்கும் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் அமைந்துள்ள புளியரை எஸ் வளைவில் நீளமான தொட்டிகள் கொண்ட கனரக லாரிகள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சற்று தொலை விலேயே நிறுத்தப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அணிவகுத்த வாகனங்கள்
இந்நிலையில் நேற்று மதியம் கேரளாவில் இருந்து தென்காசி நோக்கி வந்த கனரக லாரி ஒன்று எஸ் வளைவு பகுதியில் எதிர்பா ராதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாக னங்கள் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வாகனங்க ளும், கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்க ளும் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியா மல் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.
போக்குவரத்து நெருக்கடி
இந்நிலையில் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான லாரியை கிரேன் உதவியுடன் போலீசாரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். கடும் நெருக்கடிக்கு இடை யில் துரிதமாக செயல்பட்டு லாரியை அப்புறப்படுத்திய பின்னர் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சா லையில் போக்குவரத்து சீரானது. ஏற்கனவே செங்கோட்டை முத்துச்சாமி பூங்கா மற்றும் வனத்துறை சோதனை சாவடி பகுதி களில் பாலப்பணிகள் நடை பெற்று வருகிறது.
இதன் காரணமாகவும் அந்த சாலையில் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு மாலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருப்பதால், கூடுதலாக போலீசார் நிறுத் தப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- அதிகளவு பன்றிகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
- 74 பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளில் அனேக வார்டுகளில் பன்றிகள் அதிகளவு சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறும், சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டது.
பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட மக்கள் விடுத்த கோரிக்கையின்படி மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்க நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா மேற்பார்வையில், மது ரையை சேர்ந்த நிறுவனம் மூலம் 74பன்றிகள் வரை பிடிக்கப்பட்டு வாகன த்தில் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.
அப்போது இளநிலை உதவியாளர் பாபு, பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், நித்தியானந்தம், தமிழ்மணி உடனிருந்தனர்.
- போலீஸ் துணை சூப்பிரண்டு தகவல்
- பரி வேட்டை ஊர்வலம் நடப்பதையொட்டி அந்த பாதையில் எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவில் நாளை மறு நாள் (செவ்வாய்கிழமை) பரிவேட்டை திருவிழா நடக்கி றது. இதையொட்டி கன்னியா குமரியில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தை சென்றடைய வேண்டும்.
இதேபோல் கன்னியா குமரியில் இருந்து புறப்படும் பஸ்கள் இதே வழியாக நாகர்கோவில் செல்ல வேண்டும். பகவதி அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அம்மன் வாகனம் விவேகானந்தபுரம் சந்திப்பை கடக்கும் வரை நெல்லையில் இருந்து வரும் பஸ்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி விவேகானந்தபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணி மனை வரைவந்து திரும்பி செல்ல வேண்டும்.
அம்மன் வாகனம் விவே கானந்தபுரத்தை கடந்து சென்ற பிறகு நெல்லையில் இருந்துஅஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் விவேகானந்த புரம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும்.
இந்த போக்குவரத்து மற்றும் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் பரி வேட்டை ஊர்வலம் நடப்பதையொட்டி அந்த பாதையில் எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்த தகவலை கன்னியா குமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.
- அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
- பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:, அக்.18-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 தேதிகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னையிலிருந்து அக்டோபர் 20-ம் தேதி 200 சிறபபுப் பஸ்கள், 21-ம் தேதி 250 சிறப்பு பஸ்கள், 22-ம் தேதி 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போன்று ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அக்டோபர் 24-ம் தேதி 200 சிறப்பு பஸ்களும், 25-ம் தேதி 150 சிறப்பு பஸ்களும், மேலும் பயணிகளின் தேவைக்கற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.