என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து"

    • திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
    • திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை தொடங்குகிறது.

    திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.

    அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் கனமழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் உள்ள 7, 8, 20, 27 கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
    • கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

    சென்னை :

    தீபாவளியை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

    அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வருகிற17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் அறிவித்துள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-






    • பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
    • இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து திட்டங்கள், சாலை போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்களை வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மர வங்கி, செல்போன் அடிப்படையிலான டிரைவிங் பயிற்சி, 11 முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் நெகிழ்வுத்தன்மை கொண்ட எந்திரங்கள் என இந்தியாவின் போக்குவரத்து துறை மிகப்பெரிய மாற்றம் பெற்று வருகிறது.

    மேலும் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இருவழிப்பாதை 4 வழிச்சாலையாக மாற்றுதல், முக்கிய வழித்தடங்களில் அதிவேக மின்சார போக்குவரத்து நெட்வொர்க் நிறுவுதல் மற்றும் சாலை கட்டுமானத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீ ஆக உயர்த்துதல் போன்ற திட்டங்களும் உள்ளன.

    நாங்கள் புதுமைகளை முன்னெடுத்துச்செல்கிறோம். போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பயணிக்கும் விதத்தை மாற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

    பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. கேதார்நாத் உட்பட 360 இடங்களில் ரோப் கார்கள், கேபிள் பஸ்கள் மற்றும் பனிகுலர் ரெயில் திட்டங்களை நாங்கள் அமைத்து வருகிறோம். இவற்றில் 60 திட்டங்களில் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டங்களுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. இவற்றின் பணிகள் முடிவடைந்தால் இந்தியாவின் முகத்தையே அது மாற்றும்.

    மேம்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துசக்தியாக இருப்பது மட்டுமின்றி, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும்.

    இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன். பெருநகரங்களில் கேபிள் மூலம் இயங்கும் பஸ்கள், விமானம் போன்ற வசதிகளுடன் கூடிய மின்சார விரைவுப் போக்குவரத்து பஸ்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு மெட்ரினோ பாட் டாக்சிகள், ஹைப்பர்லூப் அமைப்புகள் மற்றும் தூண் அடிப்படையிலான வெகுஜன விரைவான போக்குவரத்து போன்ற அடுத்த தலைமுறை போக்குவரத்துக்கான முன்னோடித் திட்டங்கள் தயாராக உள்ளன.

    தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்கள் இருவரும் வருகிறார்கள். இது ஒரு புரட்சியாக இருக்கும். டாடா, டயோட்டா, ஹூண்டாய், மகிந்திரா உள்பட 11 நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிகள் மற்றும் புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நெகிழ்வான எரிபொருள் எந்திர வாகனங்களை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன.

    2013-14-ல் 91,287 கி.மீ.யாக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 60 சதவீதம் அதிகரித்து 1.46 லட்சம் கி.மீ.யாக உள்ளது.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    • புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம்.
    • பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் தெரிவித்தார்.

    இந்திய சாலைகளில் வாகனங்களின் ஹாரன்களால் ஏற்படும் ஒலி மாசைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறையை கையாள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,

    தற்போதுள்ள ஹாரன்களுக்கு பதிலாக இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளை ஏற்படுத்தும் ஹாரன்களை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், அனைத்து வாகனங்களின் ஹாரன்களிலும் இந்திய இசைக்கருவிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை கேட்க இனிமையாக இருக்கும்.

    புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் தெரிவித்தார்.

    • நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது.
    • கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை

    நாகர்கோவில் :

    திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது. உடனே கண்டக்டர் அந்த பர்சை போக்குவரத்து கழக அதிகாரியிடம் ஒப்படைத்தார். பின்னர் அதிகாரிகள் அந்த பர்சை வைத்திருந்தனர்.

    அந்த பர்சிற்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை. இந்த நிலையில் பர்சை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பர்சில் இருந்த கார்டை ஸ்கேன் செய்து பார்த்தபோது அது வள்ளியூர் அருகே ஆனைகுளம் பகுதியைச் சேர்ந்த சுகன்யா ஜெயக்கொடி என்பவரது பர்ஸ் என தெரிய வந்தது.

    உடனே அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது சரண்யா ஜெயக்கொடி தனது பர்சை தவற விட்டு விட்டு பல இடங்களில் தேடி வருவதாக கூறினார். உடனே போக்குவரத்து கழக அதிகாரிகள் அவரை நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அவரிடம் பர்சிற்கான அடையாளங்களை கேட்டு அறிந்தனர்.

    பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு பர்சை சுகன்யா ஜெயக்கொடியிடம் போக்குவரத்து கழக அதிகாரி ஜெரோலின் ஒப்படைத்தார்.பர்சை பெற்றுக் கொண்ட சரண்யா ஜெயக்கொடி போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். சரண்யா ஜெயக்கொடி கூறுகையில் கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்தேன். தற்பொழுது அதிகாரிகள் இந்த பணத்தை எடுத்து என்னிடம் ஒப்படைத்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
    • இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இதையடுத்து ஈரோடு மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணிகளை ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 642 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 301 வழக்குகள் என மொத்தம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். 

    • சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.
    • இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.

    இந்த இறக்கை கொண்டு செல்லும் லாரியை எந்த வாகனமும் முந்தி செல்ல முடியாத சூழ்நிலையில் அனைத்து வாகனங்களும் பின்தொடர்ந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எனவே இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.

    எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அப்டா மார்க்கெட் வழியாக பஸ்கள் இயக்கம்
    • ரூ.1.40 கோடி செலவில் சீரமைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகருக்கு புத்தன் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது‌. பைப் லைன்கள் அமைக்கப்பட்ட சாலை கள் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. அதை சீரமைக்க நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தற்பொழுது அசம்பு ரோடு பகுதியில் சாலை சீரமைக்க ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் இன்று தொடங் கப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை கள் தோண்டப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டதையடுத்து அசம்பு ரோட்டில் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது.சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அசம்பு ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரியில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் ஒழுங்கினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கரசாலையில் சென்று புத்தேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் புத்தேரியில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் நாற்கரசாலை வழியாக வந்து அப்டா மார்க்கெட் ஒழுகினசேரி வழியாக வடசேரிக்கு வருகிறது.

    போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த சாலை பணியை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இரவு பகலாக இந்த பணியை முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
    • ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்.

    14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், சுரேஷ்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டம் குறித்து பேசினர்.

    இதில் நிர்வாகிகள் மனோஜ், ஜஸ்டின், அசோக் குமார், தோமஸ், சேவியர்ஜார்ஜ், சிங்காரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணி வழங்க கேட்டு அஜித்குமார் ராணி தோட்டம் பணிமனை முன்பு தர்ணா மற்றும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டார்
    • நான் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள பரசேரியை சேர்ந்த வர் அஜித்குமார் (வயது 49).

    இவர் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்துக் கழக பணிமனையில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது ஜீப் டிரைவராக உள்ளார். கடந்த ஒரு மாதமாக இவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தனக்கு பணி வழங்க கேட்டு அஜித்குமார் ராணி தோட்டம் பணிமனை முன்பு தர்ணா மற்றும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் அவரது கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் அஜித் குமார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். இதனை கவனித்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தடுத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அஜித்குமார் கூறுகையில், "நான் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜீப் டிரைவர் பணி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் கடந்த ஒரு மாதமாக எனக்கு எந்த பணியும் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் அளிக்க மறுக்கிறார்கள். போராட்டம் நடத்திய பிறகும் என்னை கண்டுகொள்ளவில்லை. எனவே எனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும்" என்றார்.

    இதனையடுத்து அவரை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அஜித் குமார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட் டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. நாளை (சனிக்கி ழமை) திருவிழா நிறைவ டைகிறது. இந்த திருவிழா வில் 8, 9, 10-ம் நாட்களின் போது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஆலய வளாகத்திலும், கேப் ரோட்டிலும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். இதனால் போக்குவ ரத்து நெசரிசல் ஏற்படும். என வே 9, 10-ம் நாள் திரு விழா க்களி ன்போ து போலீ சார் போ க்கு வரத்து மாற் றம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு பொதுமக்கள் மற் றும் போக்குவரத்து நலன் கருதி போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது. கன் னியாகுமரி, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஆயுதப் படை முகாம் ரோடு பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    வடசேரி, கோர்ட்டு ரோடு மற்றும் அண்ணா பஸ் நிலை யத்தி லிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற் றும் ஈத்தாமொழி மார்க்க மாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு. பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக செட்டிக்குளம் -சந் திப்பு.இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திரு விழாமுடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவ ரத்து மாற்ற த்திற்கு பொதுமக் களும், வாகன ஓட்டுனா களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கெள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    ×