search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coins"

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
    • ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலமம் கொல்லம் சாமக்கடை வீதியில் ஏராளமான கடைகள் வரிசையாக இருக்கின்றன. அவற்றில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளில் சம்பவத்தன்று இரவு யாரோ மர்மநபர் புகுந்து கைவரிசை காட்டியுள்ளார்.

    கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர், கடைகளின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருட்டு நடந்த சம்பவம், மறுநாள் கடைக்காரர்கள் கடையை திறக்க வந்தபிறகே தெரியவந்தது.

    பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை பார்த்து அதர்ச்சியடைந்த அவர்கள், கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், கடையில் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்த பணம் அப்படியே இருந்தது. அதே நேரத்தில் கடையில் இருந்த சில்லறை காசுகள் அனைத்தும் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திருட்டு நடந்த 4 கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு நபர் பூட்டை உடைத்து கடைக்குள் செல்வதும், அந்த நபர் கடையின் உள்ளே டேபிளிள் வைக்கப்பட்டிருந்த பணக்கட்டை தனியாக எடுத்து டேபிளில் வைத்து விட்டு, சில்லறை காசுகளை மட்டும் திருடிச்சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

    அந்த காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுவாக திருட்டில் ஈடுபடக்கூடிய நபர்கள், திருடச்செல்லும் இடத்தில் பணம் மற்றும் அதிக விலை உள்ள பொருட்கள் சிக்கினால் அவற்றை விட்டு வைப்பதில்லை.

    அனைத்தையும் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விடுவார்கள். ஆனால் கொல்லம் கடைகளில் கை வரிசை காட்டிய நபரோ, வித்தியாசமாக பணக்கட்டுகளை வைத்துவிட்டு சில்லறை காசுகளை மட்டும் திருடிச் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • நாணயங்கள் செல்லாது என பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றன.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ரிசர்வ் வங்கி ரூ 1, 2 , 5 ,10 மற்றும் 20 நாணயங்களை அடித்து சந்தைகளில் புழக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மேற்கண்ட சில்லறை நாணயங்கள் அனைத்து வணிக நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    புதுவை மாநிலத்தில் 10ரூபாய், 20ரூபாய் நாணயங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் என எந்த ஒரு கடைகளிலும் மேற்கண்ட நாணயங்கள் பொது மக்களிடம் வாங்காமல் மறுத்து வருகின்றன.

    இந்த நாணயங்கள் செல்லாது என பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றன.

    எனவே புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும், வணிகவரித்துறையும், ரூ10 மற்றும் ரூ20 நா ணயங்கள் அனை த்தையும் பெற வேண்டும் என கடை மற்றும் அனை த்து வணிக நிறுவன ங்களுக்கும், குறிப்பாணை அனுப்ப வேண்டும். நாணயங்களை வாங்க மறுக்கும் தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.

    எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் உள்ளன.
    • 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள் ஆகியவைகளும் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியில் தலைவர்களின் மணல் சிற்பம், கலைஞர் கருணாநிதியின் சிறு வயது முதல் தற்போது வரை உள்ள புகைப்பட கண்காட்சி, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் 150 ஆண்டுகள் பழமையான சூடு மண் பானைகள், 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள்,

    பல்வேறு நாடுகளின் கரன்சிகள், கடல் வாழ் உயிரினங்களின் கல் படிமங்கள், சுண்ணாம்புக் குடுவைகள் ஆகிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.மேலும் வரைபட கண்காட்சி, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறுவர் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் அதன் நிர்வாகி ஜெய் கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் சகுந்தலாதேவி, பழனிவேல் சரத்குமார், செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.கண்காட்சிக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

    • உலக பணத்தாள்கள்-நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது
    • தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில்

    திருச்சி:

    திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உலக பணத்தாள்கள், நாணயங்கள், புழங்கு பொருட்கள் குறித்த வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது. திருச்சி-தஞ்சை திருமண்டல குருத்துவ செயலாளரும், பள்ளி தாளாளருமான சுதர்சன் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

    தலைமை ஆசிரியர் ஞான சுசீஹரன், வரலாற்றுத்துறை ஆசிரியர் சுரேஷ், பிரபாகர் சம்பத் ஒருங்கிணைப்பில் திருச்சி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், ரமேஷ், சந்திரசேகரன், தாமோதரன், பத்ரி நாராயணன் உட்பட பலர் தனது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

    அதில் உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளின் நாணயங்கள் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.அல்ஜீரிய தினார், அங்கோலா குவான்சா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா கிழக்கு கரீபியன் டாலர், அர்ஜென்டினா பேசோ, ஆஸ்திரேலிய டாலர், ஆஸ்திரியா யூரோ, அஜர்பைஜான் மனாட், பஹாமாஸ் டாலர், பஹ்ரைன் தினார், பங்களாதேஷ் டாக்கா, பார்படாஸ் டாலர், பெலாரஸ் ரூபிள், பெல்ஜியம் யூரோ, புருனே டாலர், புருண்டி பிராங்க், கம்போடியா ரியல், கனடா டாலர், சிலி பெசோ, சீனா யுவான், கொலம்பியா பெசோ, சைப்ரஸ் யூரோ, குடியரசு காங்கோ பிராங்க், கரீபியன் டாலர், டொமினிக்கன் குடியரசு பெசோ, அமெரிக்க டாலர், எஸ்டோனியா யூரோ, பின்லாந்து யூரோ, ஜெர்மனி யூரோ, இந்திய ரூபாய், இந்தோனேசிய ரூபாய், ஈரான் ரியால் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

    மேலும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ கால நாணயங்களும் மலையமான், சம்பூர ராயர், மதுரை நாயக்கர், விஜயநகர், ஆற்காடு நவாப், கோனேரி ராயன், பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா நாணயங்களுடன் சுடுமண்ணலான காதணிகள், புதை உயிரி படிமங்கள், டயானா சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறைகள், மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் மகாத்மா காந்தி சிறப்பு அஞ்சல் தலை அஞ்சல் உறைகள் சிறப்பு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    பழனி பகுதியில் 5 ரூபாய் போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறு, குறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பழனி:

    பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். பேன்சி மற்றும் மளிகை பொருட்கள், புத்தகம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த கடைகளுக்கு வரும் சிலர் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையில் கவனம் செலுத்தும் வியாபாரிகளும் அந்த நாணயத்தின் வடிவம், எடையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் தான் என நினைத்து வாங்கிக்கொண்டு பொருட்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.

    அதன் பின்னர் நாணயங்களை கணக்கெடுக்கும் போது தான், சிலர் கொடுத்த 5 ரூபாய் நாணயங்களில் பல போலியானது என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியடையும் வியாபாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பழனியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 50 பைசா நாணயங்கள் தற்போது செல்லாதவை ஆகும்.

    அந்த நாணயங்களின் வடிவம் தற்போது உள்ள 5 ரூபாய் நாணயங்கள் போன்று தான் இருக்கும். ஆனால் அவற்றின் தடிமன் குறைவாக இருக்கும். ஆனால் சில மோசடி நபர்கள் 50 பைசா நாணயங்கள் 2-ஐ சிங்கமுக தலைகள் தெரியும்படி இணைத்து ஒட்டிவிடுகின்றனர்.

    பின்னர் அந்த நாணயங்களை எங்களிடம் கொடுத்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். அதனை பார்க்கும் எவரும் அது போலியான 5 ரூபாய் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நாணயத்தை நன்றாக சரிபார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

    இதனால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்று போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ஜீவனாம்சம் வழக்கில் கணவர் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி நீதிமன்றத்திற்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். #Divorcecase
    சண்டிகார்:

    பஞ்சாப்-அரியானா மாநில ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் வக்கீலின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து வக்கீல் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழ்க்கோர்ட்டு உத்தரவை உறுதி செய்ததுடன், ஏற்கனவே வழங்காமல் இருந்த 2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து வக்கீல் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி கோர்ட்டுக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என்றார்.

    உடனே வக்கீல் இந்த சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன். பின்னர் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருகிறேன் என்றார். #Divorcecase
    ×