search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bangles"

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • பெண்களுக்கு மாலை அணிவித்து கலெக்டர் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
    • விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவு பண்டங்களை கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

    தரங்கம்பாடி:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் மயிலாடுதுறையில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா, பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தனது பெண் குழந்தையுடன் பங்கேற்று 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா மயிலாடுதுறை பல்வராயன்பேட்டையில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தனது பெண் குழந்தையுடன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    எம்.எல்.ஏககள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், மயிலாடுதுறை வட்டாரத்தில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கும், சீர்காழியில் இருந்து 25, குத்தாலம் 50, செம்பனார்கோவில் 50 மற்றும் கொள்ளிடம் வட்டாரத்திலிருந்து 25 என மொத்தம் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பெண்களுக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. முன்னதாக நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து விழாவில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவுப் பண்டங்களை கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாச்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, மாவட்ட திட்ட அலுவலர் தமிமுன்நிஷா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா, ஒன்றிய குழு தலைவர்கள் செம்பனார்கோயில் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை காமாட்சிமூர்த்தி, குத்தாலம் மகேந்திரன், மற்றும் ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 30 ஆயிரம் வளையல்களுடன் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
    • கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலிகயிறு மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த கிருஷ்ண கொண்டம்மாள் கோவில் உள்ளது.

    இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இன்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கிருஷ்ண கொண்டம்மாள் கோவிலில் கிருஷ்ணர் மற்றும் கொண்டம்மாள் சுவாமிகளுக்கு 30ஆயிரம் வளையல்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலிகயிறு மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

    பிரதமர் மோடி குறித்து பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு, 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்தநிலையில் இந்தூரில் நேற்று சித்து அளித்த பேட்டியில், திருமணம் முடிந்ததும் மணப்பெண் தன்னை மற்றவர்கள் உற்று நோக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கை வளையலை குலுக்கி சைகை செய்வார்.

    அதுபோல பிரதமரும் தனது பேச்சை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதுபோல பேசி வருகிறார் என்று மீண்டும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
    ×